ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

வெள்ளை எம்ஜியாரு நல்லவரான கதை

ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஒரு காட்டுல ஒரு வழிப்பறி திருடன் இருந்தான்.ஆளு வெள்ள வெள்ளேருன்னு சிவப்பா அழகா இருந்ததுனால அவன எல்லோரும் வெள்ள எம்சியாருன்னு கூப்பிடுவாங்க.அவனுக்கு ஒரு மகன் அவன் கருப்பா கொஞ்சத்துக்கு கொஞ்சம் களையா இருப்பான் அதுனால அவன கருப்பு எம்சியாருன்னு எல்லோரும் கூப்புடுவாங்கன்னு நினைச்சிங்கன்னா அது தப்பு. ஆனா அவன் மட்டும் தன்னைத்தானே கருப்பு எம்சியாருன்னு கூப்பிட்டுக்கிட்டுருந்தான்.

அந்த காட்டுப்பக்கம் வண்டி கட்டிக்கிட்டு போற ஆளுகங்கிட்ட ஒரு அட்டைக்கத்தியைக் காட்டி வழிப்பறி பண்ணுறது வெள்ளை எம்சியாரோட தொழிலு. காசு பணத்த பறி கொடுத்தவுங்க அவன திட்டி தீர்ப்பாங்க, ஊருல்ல அவனுக்கு நல்ல பேரும் கிடையாது. இப்படி இருக்கையில ஒருநாளூ அவனுக்கு உடம்பு ரொம்ப முடியாம போயிடுச்சு.சாகுற நிலைமையில இருக்கும் போது அவன் மகன் கருப்பு எம்சியாரா நினைச்சுகிட்டு இருக்குறவன கூப்பிட்டு "அட கருப்பா நான் சாகப்போறேன் நானோ ஒரு திருடன் அதுனால இந்த சனமெல்லாம் என்ன கெட்டவன்னு கூப்புடுது நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. ஆனா இந்த உலகம் என்னை நல்லவன்னு கூப்புடனும்"ன்னு சொல்லிட்டு கண்ண மூடிப்புட்டான்.

என்னடா அப்பா இப்படிச் சொல்லிட்டாங்க அவுகளோ பக்காத் திருடன் அவுகளப் போயி எப்படி நல்லவனாக்குறதுன்னு கருப்பன் தன்னோட புள்ளிவிபரம்ல்லாம் உளர்ற வாயில டாஸ்மாக் சரக்க ஊத்திக்கிட்டே யோசிச்சான். பளிச்சுனு அவனுக்கு ஒரு ஐடியா வந்தது.

மறுநாள் இவனும் அவுங்க அப்பன மாதிரியே காட்டுல வழிப்பறிக்கு யாரோடயும் கூட்டுச் சேர்க்காம ஒத்தையாளா கிளம்புனான்.காட்டு வழியே வந்தவுங்கள கால சுழட்டி சுழட்டி அடிச்சு எல்லாத்தையும் புடுங்குனான். அத்தோட அவங்கப்பன் பண்ணாத இன்னோரு வேலையும் செஞ்ச்சான் காசு பணத்த பறி கொடுத்தவுங்க கோவனத்தையும் உறுவி எடுத்துக்கிட்டான்.

இப்ப ஊருல்ல எல்லோரும் என்ன சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க 'அப்பன்காரன் வெள்ளை எம்சியாரு ரொம்ப நல்லவன் காசு பணத்த மட்டும்தான் புடுங்குனான். ஆனா இந்த கருப்பன் இருக்கிற கோவணத்த கூடல்ல உறுவுறான் ரொம்பக் கெட்டவனா இருக்கானே"ன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.
இப்படி ஒருவழியா கருப்பன் அவன் அப்பன ரொம்ப நல்லவனாக்கிட்டான்

பின் குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனைக் கதையே யாரையும் குறிப்பிடுவது அல்ல.நீங்க யாரையும் கற்பனை பண்ணிக்கிட்டிங்கனா அதுக்கு நான் பொறுப்பு இல்லை, என கரம் சிரம் தாழ்த்தாமல் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.


7 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

:-)

முகப்பில் இருக்கும் விசிலடிக்கும் பெண்களின் புகைப்படம் மிக அழகு!

தேவன் மாயம் சொன்னது…

நல்லா சொல்றீங்க கதை!! விசிலடிச்சுக்கிறேன்.

91001103021 சொன்னது…

ம்ம் நடத்துங்க நடத்துங்க

பெயரில்லா சொன்னது…

thambi super. continue

யாத்ரீகன் சொன்னது…

>> முகப்பில் இருக்கும் விசிலடிக்கும் பெண்களின் புகைப்படம் மிக அழகு! <<<<

Repeatuuuuuuuuuuuuu :-)

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வருகை தந்த அனைவருக்கும் வாக்களித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி
சென்ஷி
தேவன் மாயம்
ஸ்டார்
அனானி
யாத்ரீகன்
நெஞ்சார்ந்த நன்றி அனைவருக்கும்

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க