புதன், 27 ஜனவரி, 2010

அப்பாடி அடிச்சாச்சு அரைச்சதம்


இந்த பதிவு எனக்கு மிகவும் மகிழ்சியாகவும் அதே நேரத்தில் மலைப்பாகவும் உள்ளது.

ஏதோ தமிழ் திரட்டிகளைப் படித்தோமா பின்னூட்டம் இட்டோமா என இருக்கையில் சகோதரி சுமஜ்லாவின் பதிவைப் பார்த்து நானும் ஒரு வலைப்பூவை எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் ஒரு வேகத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதிக் கொண்டிருந்தேன்.

குதிரைக்கு கடிவாளம் போடுவது போல அருமை நண்பர் துபாய் ராஜா அவர்கள் தன்னுடைய பின்னூட்டங்களின் மூலம் எனக்கு கடிவாளம் இட்டதுடன் நான் செல்ல வேண்டிய பாதை பற்றியும் எடுத்துக் கூறி எனக்கும் இன்றும் சிறந்த ஆசானாக உள்ளார். அவருக்கும் அவரது அன்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் எப்போதும்.


அப்புறம் எனது பதிவுகளுக்கு தங்களது மேலான பின்னூட்டங்களின் மூலம் என் வலைப் பூ வாடாமல் நீர் வார்த்து உரமிட்ட கீழ் கண்ட அன்பு சகோதர நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள் பற்பல.


அ.நம்பி
அத்திவெட்டி ஜோதிபாரதி
அமுதா கிருஷ்னா
அருண்
அன்பு
அன்புடன் அருனா
இராகவன் நைஜீரியா
இல்யாஸ்
இளங்குமரன்
இளைய கவி
எட்வின்
கலாட்டாப் பையன்
கவிதை காதலன்
கார்கோட நாகன்
கார்ணம் ஆயிரம்
கிளியனூர் இஸ்மத்
குடிகாரன்
குடுகுடுப்பை
கோசலன்
கோவி கண்ணன்
ச செந்தில் வேலன்
சதிஷ்
சந்தனமுல்லை
சபரிநாதன் அர்த்தநாரி
சபி
சிவன்
சின்ன அம்மினி
சுப்பு
சூப்பர் சுப்ரா
செல்லாதவன்
சென்ஷி
டாக்டர் புருனோ
தண்டோரா
திகழ்
துபாய் ராஜா
துளசி கோபால்
தேவன் மாயம்
தேனீ
தோழி
நாமக்கல் சிபி
நாளும் நலமே விளையட்டும்
நிகழ்காலத்தில்
நிலா
நிஜாமுதீன்
நெகம்ம்
பதி
பராரி
பழமைபேசி
பா வேலன்
பாலகுமார்
பிரியமுடன் வசந்த்
பினாத்தல் சுரேஷ்
மயூ
மஸ்தான்
மிரட்டல்
முனைவர் குணசீலன்
யுவகிருஷ்னா
யூர்கன் க்ருகியர்
யெஸ்.பால பாரதி
யோகன் பாரிஸ்
ரமேஷ் ரொம்ப நல்லவன்
ரமேஷ் விஜய்
ரஹ்மான்
ராம்
ராஜா/KVR
ரேகா ராகவன்
ரோஸ்விக்
லோகு

வடகரைவேலன் அண்ணாச்சி
வால்பையன்
ஜெய் சங்கர் ஜெகநாதன்
ஜெரி ஈசானந்தா
ஜோ
ஸ்டார்ஜன்
ஸாதிகா
GERSHOM
kgjawarlal
Mrs.Menakasathiya
Nats
Sachanaa
STAR
ttpian


இதில் யாரவது விடுபட்டிருந்தாலும் அவர்கள் என்னை மன்னிக்கவும். அவர்களுக்கும் எனது நன்றி.


சரி ஓகே.

50வது பதிவை சும்மா நன்றி அறிவிப்புடன் விடாமல் ஒரு சின்னக் கவிதையோடு முடிக்கிறேன்


டாஸ்மாக்
உன்னைக் காணாவிடில்

முன்னிரவு தூக்கமில்லை

கண்டுகொண்டால்

பின்னிரவு தூக்கமில்லை.

சத்தியமா இந்தப் பதிவு டாஸ்மாக் சென்று வந்தபின் எழுதியது அல்ல என கூறிக்கொள்கிறேன்.


புதன், 13 ஜனவரி, 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


நாளை தமிழர் திருநாள். பொங்கல் பண்டிகை. அத்துடன் அரசு அறிவித்தபடி நாளைதான் தமிழ் புத்தாண்டு.

என்னைப் பொறுத்தவரை கலைஞர் கருணாநிதி செய்த உறுப்படியான நல்ல விடயங்களில் தலையாயது இந்த தைத் திங்கள் முதல் நாளை தமிழர் புத்தாண்டாக அறிவித்ததுதான்.

அறிவித்தபடி யாரும் பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டாக கொண்டாடுகிறார்களா எனப் பார்த்தால் இல்லை என்றே வருத்தத்துடன் சொல்ல வேண்டும்.

நாட்காட்டிகளில் பார்த்தால் வழக்கம் போல் சித்திரை முதல் நாளையே தமிழர் புத்தாண்டாக சொல்லியிருக்கிறார்கள். இன்னும் மக்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவில்லை என்று கருத வேண்டியிருக்கிறது.

ஒரு ஆண்டில் பாதி நாட்களை விடுமுறையாக கொண்டாடும் நாட்டில் பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டாக அறிவித்ததால் சித்திரை முதல் நாள் விடுமுறை குறையுமே என்று தமிழ் சமுதாயம் கருதுகிறதோ என்னவோ.

பொங்கலுக்கு அடுத்தடுத்து மாட்டுப் பொங்கல் திருவள்ளுவர் தினம் என தமிழர் பெருமை கூறும் நல்ல நாட்கள் இருந்தாலும் தீபாவளியை கொண்டாடும் அளவுக்கு சில தமிழர் பொங்கலை கொண்டாடுவதில்லை. ஆயுதபூசையை கொண்டாடும் அளவுக்கு மாட்டுப் பொங்கலை கொண்டாடுவதில்லை. இளைய சின்ன வீரத் தளபதிகளின் பிறந்த நாளை கொண்டாடும் அளவுக்கு திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவதில்லை.

இந்த சில தமிழர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக நகரங்களில்தான். குறிப்பாக தமிழன் தலைநகர் சென்னையில். பொங்கலும் மாட்டுப் பொங்கலும் உழவர்கள் தொடர்புடையது அதை உழவுத்தொழிலே செய்யாத நகரங்களில் ஏன் கொண்டாட வேண்டும் என இந்த நகரவாசிகள் நினைக்கலாம்.

தமிழ்நாட்டுக்கு தொடர்பே இல்லாத கிருட்டினன் நரகாசுரன் கட்டுக்கதைகளை அடிப்படையாக கொண்ட தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் போது அதில் பத்தில் ஒரு பங்காவது நம் உண்ணும் உணவை நமக்குத் தர உழைக்கும் உழவ்னுக்கும் கால் நடைகளுக்கும் மரியாதை தரும் பொங்கல் திருநாளுக்கு தர தமிழர்கள் முன் வர வேண்டும்.

அரசு வெறும் அறிவிப்புடன் நின்று விடாமல் பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டாக அனைவரும் கொண்டாடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக சித்திரை முதல் நாள் அரசு விடுமுறை இருந்தால் அதை முழுமையாக நீக்க வேண்டும்.

நாளை தமிழர் புத்தாண்டு என சிறப்பிதழ் வெளியிடுகின்ற பார்ப்பன ஏடுகள் குறிப்பாக தினமலர் போன்றவற்றினை அரசு அவ்வாறு செய்யக்கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டும். நாட் காட்டிகளில் தைத் திங்கள் முதல் நாளை தமிழர் புத்தாண்டாக அறிவிக்க செய்ய வேண்டும்.

குக் பன்னி செர்வ் பன்னி ஈட் பன்னி டைஜிஸ்ட் பன்னி டெபகேட் பன்னி என பன்னித் தமிழ் பேசும் தமிழன் காதில் செவுடன் காதில் சங்காக இது ஒலித்தாலும் என்றாவது ஒருநாள் காது கேட்கும் என முயற்சியை கை விடாது தமிழ் அறிஞர்கள் அனைவரும் தொடர வேண்டும்.

அதற்கான என்னால் ஆன முயற்சியே இந்த பதிவு.

எனவே தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும் என் இனிய

தமிழ்
புத்தாண்டு
வாழ்த்துக்கள்.

இந்த தமிழ் புத்தாண்டில் அனைவரும் எல்லா வளங்களும் பெற தமிழ் கடவுளாம் அப்பன் முருகனை வேண்டுகிறேன்.