புதன், 28 ஏப்ரல், 2010

இவன் பச்சை தமிழன்

சென்ற பதிவில் இளைய தளபதி பச்சை தமிழன் விஜய் அவர்களைப் பற்றி ஒரு மொக்கை எழுதியிருந்தேன். பதிவின் ஆரம்பத்திலேயே இப்படி குறிப்பிட்டு இருந்தேன்.

//மொக்கை போட்டு ரொம்ப நாளாகி விட்டதால் இந்த மொக்கைப் பதிவை இடுகிறேன். வழக்கம் போல் இந்த மொக்கைகளுக்கும் நாயகன் நமது இளைய தளபதி விஜய்தான். விஜய் ரசிக கண்மணிகள் மன்னிக்கவும்.ஏன் எனில் இது என் சொந்த கற்பனை அல்ல எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.//

ஆனாலும் எனக்கு பின்னுட்டம் இட்டிருந்த மோகன் என்னும் ஒரு நண்பர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இப்படி பின்னுட்டம் இட்டிருந்தார்.

//ஏன்டா பரதேசி.உனக்கு விஜய் ஐ பத்தி நினைக்கலன்னா தூக்கமேவராதா?அவன் படம் புடிக்கலன்னாமூடிகிட்டு இருக்க வேண்டியது தானே.அத விட்டுட்டு ஓவரா சலம்பிக்கிட்டு இருக்க.எனக்கும் விஜையை பிடிக்காதுதான்.நான் கம்முனு இருக்கேனில்ல. அது மாதிரி மூடிக்கிட்டு இரு. தமிழனாம் தமிழன்.நீ தமிழனா இருந்தா விஜையை பத்தி எந்த பதிவும் போடக்கூடாது. மீறி பதிவு வந்துச்சி...?இங்க பதிவு பன்ற வார்த்தையே வேற..புரிஞ்சதா??
மோகன்//

அண்ணா மோகன் அண்ணா உங்க மனச புண் படுத்திஇருந்தா மன்னிச்சுங்க அண்ணா .
எனக்கு வந்த மொக்கைகளை மற்றவரும் படித்து சிரிக்கட்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதினேனே தவிர யாரையும் புண் படுத்தும் நோக்கம் எனக்கு துளி கூட கிடையாது.

உங்க புண் பட்ட மனதை ஆறுதல் செய்ய இதோ ஒரு மொக்கை மட்டும் . படித்து உங்க மனச தேத்திக்கோங்கண்ணா. இதுவும் எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.என் சொந்த கற்பனை அல்ல


-------------------------------------------------------------------------------


மொக்கை


எப்போதேல்லாம் அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ அதை அடக்க பக்வான் உடனே அவதரிப்பார்.


இது கீதை


எப்போதேல்லாம் அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ (ஏப்ரல் இறுதி சுறா ரிலீஸ் )

அதை அடக்க பக்வான் உடனே அவதரிப்பார். (மே முதல் தேதி தலையோட பிறந்த நாள்)
இது மொக்கை மட்டுமே

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

S M S மொக்கைகள் - 5

வணக்கம் நண்பர்களே................
மொக்கை போட்டு ரொம்ப நாளாகி விட்டதால் இந்த மொக்கைப் பதிவை இடுகிறேன். வழக்கம் போல் இந்த மொக்கைகளுக்கும் நாயகன் நமது இளைய தளபதி விஜய்தான். விஜய் ரசிக கண்மணிகள் மன்னிக்கவும்.ஏன் எனில் இது என் சொந்த கற்பனை அல்ல எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.
----------------------------------------------------

1.விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை.

கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்

"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"

-------------------------------------------------------------------

2. ஒருவர்: விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
மற்றவர்: அவரோட 50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்....
---------------------------------------------------

3.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்

நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.

-------------------------------------------------------------------

4.பிகர் கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களே

ஒரு நாள் வரும்

அப்ப ஒரு பொண்ணு உன்னை

ரொம்பவும் லவ் பண்ணி

உன்னை அப்படியே கட்டிப் பிடிச்சு

கிஸ் பண்ணிக்கிட்டே சொல்லுவா.....

"ஐ லவ் யூ டாடி"

----------------------------------------------------------

5.பாகிஸ்தானில் இப்போது பிரபலமான SMS
IPL நிராகரித்தது வெறும் பதினோறு பாகிஸ்தானியரை ஆனால்


சானியா மிர்சா நிராகரித்தது ஒட்டுமொத்த இந்தியரையும்!!!!!

-------------------------------------------------------------------------

6.தமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு.


ரஜினி = சச்சின் (ரெண்டு பேரும் எப்பவும் டாப்தான்)
கமல் = கங்குலி (திறமை இருக்கு ஆனா ஹிட் ஆக முடியல)
சூர்யா = யுவராஜ் (லக் மட்டும் தான்)
விக்ரம் = தோனி ( ஹிட் ஆனா பயங்கரம்தான் ஆனா ஹிட் மட்டும் தான்)
மாதவன் = சிரீ சாந்த் ( மெகா பிளாப் ஆனாலும் இன்னும் கவர்ச்சி இருக்கு)
அஜித் = சேவாக் ( அடிச்சா சிக்ஸ் இல்லன்னா அவுட்)
விஜய் =


அட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க........

--------------------------------------------------------------

7.கடைசியா ஒரு தத்துவம்

இன்னைக்கு வைக்கிற மீனு நாளைக்கு கருவாடா ஆகும் ஆனா

இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டு குழம்பாகுமா?....

-------------------------------------------------------