மேலே உள்ள படங்கள் உழுது போட்ட வயலோ அல்லது ஏரி கண்மாய் நிலங்களோ அல்ல. இவை தமிழகத்தின் பிரதான சாலைகள்.
செவ்வாய், 24 நவம்பர், 2009
தமிழக சாலை அவலங்கள்
மேலே உள்ள படங்கள் உழுது போட்ட வயலோ அல்லது ஏரி கண்மாய் நிலங்களோ அல்ல. இவை தமிழகத்தின் பிரதான சாலைகள்.
செவ்வாய், 17 நவம்பர், 2009
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது
"எந்திரிங்க மணி 71/2 ஆகுது இன்னும் என்ன தூக்கம். எந்திருச்சு போயி குளிங்க நான் ரூமைக் கழுவி விடனும்.
"ஏண்டி நான் படுத்திருக்கிறது கட்டில்ல நீ பாட்டுக்கு ரூமைக் கழுவிவிட்டுப் போக வேண்டியதுதானே"
"அது எங்களுக்குத் தெரியாதா எந்திரிங்க கட்டில நகட்டிட்டு கீழேயும் நல்லா கழுவனும்"
"ஏண்டி நானும் பாக்குறேன் நாலு நாளா தொடர்ந்து வீட்டக் கழுவுற அப்படி என்னதான் விசேசம் இன்னைக்கு"
"இன்னைக்கு மாத பிறப்பு"
"அப்ப நேத்து"
"ம் நேத்து அமாவாசை அதுக்கு முத நாளு பிரதோசம் அதுக்கும் முத நாளு வெள்ளிக்கிழமை இப்படி நாளு கிழமைகூட தெரியாம அப்படி என்னதான் படிச்சிங்களோ"
"ஆமாண்டி நான் படிச்ச இன்சினியரிங்க்ல அமாவாசைப் பத்தி ஒரு எலக்டிவ் பேப்பர் இருந்திச்சு நான் தான் எடுக்கல"
"இந்த வக்கனைக்கு ஒன்னும் குறைச்சலில்ல, போயி குளிச்சிட்டு கடைக்குப் போயி புடலங்காய் இருக்கான்னு பாத்துட்டு இருந்தா நல்லதா ஒன்னு வாங்கிட்டு வாங்க"
அதுக்கும் மேல படுத்திருந்தா சத்தம் ரொம்ப ஜாஸ்தியாகும்ன்னு நினச்ச்சுட்டு குளிக்கப் போனேன்.
இத்தனைக்கும் போன வாரம் தங்கமணிக்கு சரியான தொண்டைவலி ENT specialist XRAY எண்டோஸ்கோபில்லாம் எடுத்துப் பாத்துட்டு தொண்டையில் புண் இருக்குன்னு சொல்லி மாத்திர மருந்தெல்லாம் எழுதிக் கொடுத்துட்டு "சத்தமா பேசக் கூடாதும்மா"ன்னு வேற சொன்னாரு மருந்தெல்லாம் சாப்பிட்டபின்னே சத்தம் அதிகமாச்சே தவிர குறைஞ்ச மாதிரி தெரியல.
வெளியே நல்ல மழை இருந்தாலும் கையில ஒரு குடைய பிடிச்சுகிட்டு கொண்டவளின் கட்டளையை நிறைவேற்ற புடலங்காய் வாங்க கடைக்குப் போனேன்.
இருந்ததிலேயே பெரியதா நீளமா குட்டி மலைப்பாம்பு மாதிரி தொங்கிகிட்டு இருந்த ஒரு புடலங்காயை வாங்கி தங்கமணி கையில கொடுத்தேன்.
வாங்குனவுன அத ரெண்டா ஒடிச்சா. அவ்வளவுதான்.
"இங்க வந்து பாருங்க நீங்க வாங்கிட்டு வந்த பொடலங்காய உள்ளே விதையெல்லாம் சொத சொதன்னு சரியான முத்தல், எங்க விளைஞ்சதுன்னு கடைக்காரன்கிட்ட கேட்டு வாங்கினிங்களா தோட்டத்துலயா இல்ல ஏதாவது ஊரணிக்கரையிலயா?"
இப்ப பெஞ்சிகிட்டு இருக்கிற மழைக்கு ஊரணிக் கரையில பந்தல்லாம் போட்டு பொடலங்காய் வளர்க்க முடியுமான்னு தொண்டை வரை ஒரு கேள்வி வந்தாலும் அதனால் மண்டை உடையும் அபாயம் இருப்பதினால பல்லக் கடிச்சுகிட்டு "சரி இப்ப என்ன செய்ய" அப்படின்னு அமைதியாக் கேட்டேன்.
"என்ன செய்யவா வீட்டுல பேசுறாங்கன்னு சொல்லி புடலங்காயை கடையில் திருப்பி கொடுத்துட்டு காச வாங்கிட்டு வாங்க"ன்னு ஒரு குண்டப் போட்டா.
வீட்டுல பேசுறாங்கன்னு கடைக்காரனுக்கும் தெரியுமான்னு நினச்சுகிட்டு "ஏம்மா இப்படி உடைச்சு கொடுத்தா கடையில் மறுபடி வாங்குவான்னா"ன்னு முனகினேன்.
'அதெல்லாம் வாங்குவான் போயி கொடுத்துட்டு வாங்க"ன்னு உள்ளே போயிட்டா.
கடையில போயி அவமானப்பட தயங்கி கடைக்குப் போற வழியில இருந்த கருவேல மரப் புதரில புடலங்காய எரிஞ்சிட்டு கைக்காசப் போட்டு தங்கமணியை சமாளிக்கலாம்ன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.
என் நிலமையப் பாத்து கண்ணீர் வடிக்கிற மாதிரி வானம் பொத்து ஊத்திகிட்டு இருந்திச்சு.
ரொம்பவும் மனசு புண்பட்டு போனதால அத ஒரு புகைய விட்டு ஆத்தலாம்ன்னு பக்கத்துல இருந்த பெட்டிக் கடைக்கு ஒதுங்கினேன்.
"என்னடா வாழ்க்கை இது, மீனு வாங்குனாலும் திட்டுறா காயி வாங்குனாலும் திட்டுறா இவகிட்ட நல்ல பேர எப்படி வாங்குறதுன்னு" யோசிச்சிகிட்டு இருக்கும் போது விதி ஒரு கோரைப்பாய் வியாபாரி ரூபத்துல அந்த கடைக்கு மழைக்கு ஒதுங்குச்சு.
எனக்கு பாயப் பாத்ததும் சடக்குன்னு மண்டையில ஒரு பல்பு எரிஞ்சுச்சு "வீட்டுல பாயி இருக்குற மாதிரி தெரியலயே இத வாங்கிட்டு போயி தங்கமணிகிட்டே நல்ல பேர வாங்குவோம்ன்னு பாய் வியாபாரிகிட்டே விலையக் கேட்டேன்.
" ஒன்னு வாங்குனா 65 ரெண்டு வாங்குனா நூத்திப்பத்து"ன்னான் வியாபாரி.
ஒரு வழியா பேரம் பேசி ரெண்டு பாயை 90 ரூபாய்க்கு வாங்கினேன்.
வீட்டுக்குப் போற வழியில ஒரு யோசனை வந்துச்சு "90 ரூபாயின்னு சொல்ல வேனாம் இன்னும் இருபது ரூபா குறைச்சு 70 ரூபாயின்னு" சொல்லி இன்னைக்கு தங்கமணிய அசத்திப் புடுவோம்ன்னு பெருமையா வீட்டுக்குப் போனேன்.
"என்னது இது காயைத்தான கொடுக்கப் போனிங்க இது என்ன பாயோட வந்துருக்கிங்க பேய் மாதிரின்னு விஜய டி ராஜேந்தர் மாதிரி அடுக்கு மொழியில கரடியாக் கத்த ஆரம்பிச்சா".
"இல்ல பாயி வாங்குனா வீட்டுக்கு ஆகுமேன்னு வாங்கிட்டு வந்தேன்" ஈனஸ்வரத்தில முனகினேன்.
"உங்ககிட்ட நான் பாயி வாங்கச் சொன்னேனா வீட்டுல எவ்வளவு பாயி இருக்குன்னு தெரியுமா?ன்னு சொல்லிகிட்டே பெட் ரூம்ல டைனிங் ஹால்ல மாடிக்கு போற ரூமிலன்னு எல்லா ரூமில உள்ள சேந்தி (loft ) சிலாப்புலயும் இருந்து பாயா எடுத்துப் போட்டா.
அதுல ஒரு பாயில மட்டும் பத்துபேரு படுக்கலாம் போல இருந்துச்சு அதப் பாத்ததும் எனக்கு நாக்கு உலர்ந்துருச்சு.
"என்ன விலை" அடுத்த அஸ்திரம் வந்து விழுந்திச்சு.
பயத்துல சொல்ல வந்த விலைய விட பத்து ரூபா குறைச்சு "ரெண்டு பாயி 60 ரூபாய்"ன்னேன்
"என்னது அறுபது ரூபாயா... ஒரு ஜோடிப் பாயி அம்பது ருபாய்தானே அதுவும் இந்த மாதிரி நாடா வச்ச பாயி (ஓரத்துல) இன்னும் விலைக் குறைச்சு வாங்கலாமே, இந்த பாயில்ல புறம் பாயி எது தலைப் பாயி எதுன்னே கண்டு பிடிக்க முடியாதே இதப் போயி வாங்கிகிட்டு வந்துருக்கிங்களே, ஒழுங்கா மரியாதையா கொண்டு போயிக் கொடுத்துட்டு காச திருப்பி வாங்கிகிட்டு வாங்க ....*@#$#@@#@#@#$$#ன்னா.
காயிலதான் முத்தல் இளசு இருக்குன்னாலும் பாயில கூடவா பொறம் பாயி தலைப்பாயின்னு இருக்குதுன்னு எனக்கு சித்த நேரம் கண்ணக் கட்டிடுச்சு.
அப்புறம் என்ன காதுல வழிஞ்ச ரத்தத்த தொடச்சுகிட்டே வழக்கம் போல கருவேலம் மரப் புதருக்கு கிளம்பிட்டேன்.
பின் குறிப்பு: வொய் பிளட் சேம் பிளட் அப்படின்னு இதைப் படிச்சதும் நீங்கள் நினைத்தால் உங்கள் பின்னூட்டங்களினால் எனக்கு ஆறுதல் கூறலாம்.
ஞாயிறு, 15 நவம்பர், 2009
மொழி வெறியன் அபு ஆஸ்மியா ராஜ் தாக்கரேவா?
கடந்த சில தினங்களாக நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் முதலிடம் பிடித்திருப்பவர்கள் ராஜ் தாக்கரேவின் MNS கட்சியும் சமாஜ்வாடி சட்டமன்ற உறுப்பினர் அபு ஆஸ்மியும்.
இது தொடர்பாக ராஜ் தாக்கரே அபு ஆஸ்மி இருவரும் கைது செய்யப்பட்டு பின் பெயிலில் விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர்.
சொல்லிவைத்தாற் போல் அனைத்து மீடியாக்களும் ராஜ் தாக்கரேவின் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும் மாவோயிஸ்டுகளை விட MNS கட்சி தீவிரவாத கட்சி எனவும் ராஜ் தாக்கரே மற்றும் பால் தாக்கரேவை மொழி வெறியர்கள் எனவும் சித்தரிக்கின்றன.
MNS கட்சியினரின் செயல் கண்டிக்கப் பட வேண்டியதுதான் என்றாலும் ராஜ் தாக்கரே மற்றும் பால் தாக்கரே இவர்களை விட இரு மடங்கு மொழி வெறியர்கள் இந்த முலாயமும் அபு ஆஸ்மியும்.
தாய் மொழி என்பது தாயைப் போன்றது ஒவ்வொருவருக்கும் அவரது அம்மா மிக சிறந்தவர்தான்.எனது அம்மா எனக்கு சிறந்தவர் என்பதற்காக உலகில் உள்ள அனைவரையும் என் அம்மாவை அவர்களது அம்மாவாக கருத வேண்டும் என நான் கூறினால் அது எவ்வளவு அபத்தமோ அது போன்ற அபத்தமான செயல்தான் அபு ஆஸ்மியின் செயல்.
ரோமுக்கு சென்றால் ரோமனாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட தெரியாதவர்கள் இந்த ஹிந்தி மொழி வெறியர்கள்.இவர்களது மொழியை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் இவர்கள் அடுத்த மொழியினை படிப்பதில் குறைந்த பட்சம் ஆர்வம் கூட இல்லாதவர்கள் என்பது வளைகுடா நாட்டில் பணி புரிந்து வரும் அனைவருக்கும் தெரியும்.
இந்த நேரத்தில் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
இந்தியாவின் மிக சிறந்த தொழிலதிபரான JRD டாடா ஜெயின் குடும்பத்தினைச் சார்ந்தவர் என்பது தெரியும் இந்த சமூகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஈரானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வருகை தந்து குஜராத் கடற்கரையில் குஜராத் மன்னரது அனுமதி வேண்டி காத்திருந்தனர்.
இவர்களது வருகையை விரும்பாத குஜராத் மன்னர் நேரில் மறுப்பை சொல்ல சங்கடப்பட்டு ஒரு பாத்திரத்தில் தளும்ப தளும்ப பாலை ஊற்றி தனது மந்திரிகளில் ஒருவரிடம் கடற்கரையில் காத்திருக்கும் ஜெயின் சமூகத்திற்கு காட்டச் சொன்னார்.இதன் அர்த்தம் என்னவெனில் ஏற்கனவே குஜராத் நிரம்பி வழிகிறது எனவே யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது என்பதே அது.
பாத்திரத்தினைப் பார்த்த புத்திசாலி ஜெயின் சமூகத்தினர் அந்த பாலில் சர்க்கரையினை சேர்த்து மன்னருக்கு திருப்பி அனுப்பினர்.இதன் மறைமுகப் பொருள் என்னவென்றால் நாங்கள் அதிக இடத்தினை ஆக்ரமித்து பாலினை தளும்ப விட மாட்டோம். சர்க்கரையைப்போல் குஜராத் கலாச்சாரத்தோடும் மக்களோடும் கலந்து விடுவோம். மேலும் பாலுக்கு சர்க்கரை சுவை சேர்ப்பது போல நாட்டிற்கு சிறப்பு சேர்ப்போம் என்பதே அது.
இந்த புத்திசாலித்தனமான பதிலால் மகிழ்ந்த மன்னர் ஜெயின் சமூகத்தினரை இந்தியாவில் அனுமதித்தார் என்பது வரலாறு.
அபு ஆஸ்மியின் செயல் பாலில் சர்க்கரை கலப்பது போன்றது அல்ல.உப்பைக் கலந்து பாலினைத் திரிப்பதற்கு ஒப்பாகும்.
வீட்டில் நச்சுப் பாம்பு வந்து படம் எடுத்து அதை விரட்டி அடிப்பவர்களை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தால் அது எப்படி முட்டாள்தனமோ அது போன்றதுதான் ராஜ்தாக்கரேவின் கைதும்.
ஒரு மாநில அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியில் நாண்காண்டுகளுக்குள் பரிச்சியம் பெற வேண்டும் என அரசு விதிகள் சொல்வது இந்த ஹிந்தி மொழி வெறியர்களின் காதில் விழுந்திருக்காதா என்ன?
வியாழன், 12 நவம்பர், 2009
SMS மொக்கைகள் - 4
டாக்டர்:வயிறு வலிக்கும் போது ஏன் பொறுக்கப் போனிங்க ரெஸ்ட் எடுக்கலாமே?!!!...
It is ready to Eat
அது மாதிரி
When a Girl becomes 18
She is ready to.......
-
-
Vote
(ஹி ஹி வேற எதையாவது நினைச்சு வந்திங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை)
பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கும் போது
ஆண்களுக்கு பெரிய வீடு சின்னவீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா?
சுமாரா காதல் பண்ணுனா 35 மார்க்
சூப்பரா காதல் பண்ணுனா 80 மார்க்
சின்சியரா காதல் பண்ணுனா
-
-
-
வேறு என்ன "டாஸ் மாக்" தான்
சர்தார்: சென்னைக்கு போற பஸ்ஸு ரெண்டு மணிக்கு மேல வரும்ன்னு சொன்னாங்க.
புரோக்கர்: அவர் நின்னா ரெயில் ஓடும் ரெயில் நின்னா மாப்பிள்ளை ஓடுவாரு
பெண்வீட்டார்: அப்படியா அப்படி என்ன முக்கியமான வேலைப் பார்க்குறாரு
புரோக்கர்: மாப்பிள்ளை ஸ்டேசன்ல முறுக்கு விக்கிறாரு.
வடிவேலு: ஆமா உனக்கு என்ன மருந்து வேணும்?
பார்த்திபன்: அப்படின்னா ஒரு கிலோ வெடிமருந்து கொடு.
டாக்டர்: கையை உள்ளே விட்டு எடுக்க வேண்டியதுதானய்யா?
ஒருவர்: உள்ளே விட்டுப் பாத்துட்டேன் டாக்டர் Not reachable ன்னு சத்தம் வருது
நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க
விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுடிங்க
நடிகர் விஜய்: யோவ் உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்ய்யா..
என்னன்னா
ரெண்டையும் கட்டிக் கொடுக்கிற வரைக்கும் அடிவயிற்றுல ஒரு நெருப்பு பத்தி எரிஞ்சுக்கிட்டே இருக்கும்.
சர்தார் 2: அப்படி என்ன படிப்பு படிச்சுருக்க
சர்தார் 1: pre (Kg) L(Kg) U(Kg)
நாலுமாசம் தூங்க மாட்டே
ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா நீ நடிச்சாத்தான் தாங்க முடியல
மனைவி: நானும் கூடவே செத்துப் போயிடுவேங்க.
கணவன்: ஜோசியக்காரன் எனக்கு அப்பவே சொன்னான் நீ செத்தாலும் சனி உன் கூடவே வரும்ன்னு
பொண்ணுங்க மனசு தண்ணி மாதிரி
பசங்க மனசு மொபைல் மாதிரி
தண்ணி மேல மொபைல் விழுந்தாலும்
மொபைல் மேல தண்ணி விழுந்தாலும்
சேதம் என்னவோ மொபைலுக்குத்தான்.
கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.
காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?
கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்.
ஒரு மஞ்சக்கயித்த உன் கையில கட்டுனா அதுக்கு பேரு காப்பு
அதையே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா அது நீ
உனக்கு வச்சுக்கிட்ட ஆப்பு.
செவ்வாய், 10 நவம்பர், 2009
அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை
அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை. நான் ஒரு சிறு குழந்தை அம்மா.யாராவது எனக்கு கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். பட்டாம் பூச்சிகளும் தலைப்பிரட்டைகளும் என்ன சாப்பிடுகிறது அவை எங்கு தூங்குகிறது என நான் தெரிய ஆசைப்படுகிறேன். மலையின் மேல் ஏறி மேகத்தினைப் பிடித்து அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என அறிய ஆசைப்படுகிறேன். கைகளால் ஓடைநீரை அலசி மீன்கள் நீந்துவதை உணர ஆசைப்படுகிறேன்.
குட்டி செல்ல விலங்குகளுடன் ஓட ஆசைப்படுகிறேன். பறவை போல் கானம் பாட ஆசைப் படுகிறேன். காகிதப் படகு செய்து மழைநீரில் விட்டு விளையாட ஆசைப்படுகிறேன்.மிருதுவான பசும் புல்வெளியில் படுத்து காற்றின் சங்கீதத்தை கேட்க ஆசைப் படுகிறேன்.
இப்படி இவற்றை இயற்கையாக அனுபவித்த பின்னரே இவற்றை பாடங்களில் விளக்கமாக தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா இயற்கையைப் பற்றி என் கற்பனை சிறகுகள் விரிந்து கொண்டிருக்கின்றன.மேலும் மேலும் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என என் ஆர்வம் மிகுதியாகி கொண்டிருக்கிறது. ஏன் என்னும் விதை என் சிந்தனையில் விதைக்கப் பட்டிருக்கிறது.
ஆனால் அம்மா பொறியில் அகப்பட்ட சிறைக்கைதியைப் போல் நான் வகுப்பறையில் உள்ளேன். எதையாவது கேட்டால் "இதற்கு நேரமில்லை குறிப்பிட்ட காலத்துக்குள் நாம் பாடத்திட்டத்தினை முடிக்க வேண்டும்." என ஆசிரியர்களிடம் ஒரே மாதிரியான பதிலே வருகிறது.
அம்மா நான் உயிர் காட்சி சாலைகளுக்கு வகுப்புத் தோழர்களுடன் சென்று அங்குள்ளவற்றை ஆசிரியர் விளக்க தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
இயற்கை சுற்றுலாக்கள் சென்று இயற்கையான உயிரியல் வகுப்பைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஆழ்கடலில் வசிக்கும் விலங்குகள் பற்றியும் எரிமலைகள் பற்றியும் ஒளிக்காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
என் நகரத்தில் உள்ள எல்லா பள்ளி மாணவர்களும் சேர்ந்து என் நகரத்தில் உள்ள வரலாற்று சின்னங்களைப் பற்றி நேரில் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
தொலை நோக்கி மூலம் வானவியலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
பாடப் புத்தகங்களில் மட்டும் நான் இவற்றை தெரிந்து கொள்ள விரும்பவில்லை அம்மா. கண்டு கேட்டு தொட்டு முகர்ந்து சுவைத்து நான் அறிய ஆசைப்படுகிறேன் நான் விரும்புவது படிப்பு அல்ல அனுபவம்.
ஏன் இந்த பள்ளிகள் இது போன்ற அனுபவத்தை வருடம் ஒருமுறை ஏற்பாடு செய்யக்கூடாது.
மேலும் அம்மா இனிமேலும் என்னால் பள்ளிப்புத்தகப் பையினைத் தூக்கி வளைய முடியாது. ஏற்கனவே என் முதுகு வளையும் அபாயத்தில் உள்ளது. ஏன் எல்லாப் புத்தகங்களையும் எல்லா நாளிலும் நான் தூக்கிச் செல்ல வேண்டும். ஏன் ஒருநாளைக்கு இரண்டு பாடம் மட்டும் படிக்கக் கூடாது.ஏன் மேலை நாடுகளில் உள்ளது போல் வகுப்பறை மேஜைகளில் லாக்கர் வசதி செய்யக் கூடாது. ஏன் தினமும் ஆட்டோக்களில் நெரிசல்களில் பிதுங்கி சிரமப்பட வேண்டும்.