திங்கள், 11 ஏப்ரல், 2011

விரலில் மை வைக்கும் முன்

இதோ இரண்டு நாளில் தேர்தல் வரப் போகிறது. மறுபடியும் ஏமாறவும் ஏமாற்றப் படவும் மக்கள் தயாராகி விட்டனர். இந்த நேரத்தில் எனக்குத் தெரிந்து சில கருத்துக்களை இந்த பதிவின் மூலம் முன் வைக்கலாம் என நினைக்கிறேன். இதனால் பெரிய மாற்றம் ஏதும் வந்து விடாது என எனக்குத் தெரியும்.இது தனிப்பட்ட எனது கருத்து மட்டும்.

மூன்றாவது அணி என பெரிதாக எதுவும் இல்லாமல் நடக்க இருக்கின்ற தேர்தல் உண்மையிலேயே திமுகவா அல்லது அதிமுகவா இந்த இரண்டு சனியன்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கிற கட்டாயத்தில் மக்கள் உள்ளனர்.

ஒரு பக்கம் அதிமுக கூட்டணி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கட்சியின் பெயர். தலைவியோ ஆரிய பெண்மணி. எப்படி ஒரு பிள்ளை சமுதாயத்தை சேர்ந்தவர் தலித் சமுதாயத்தை முன்னேற்ற முடியாதோ அதுபோல் இந்த திராவிட மந்தைகள் ஆரிய பெண்மணி பின்னால் அணி வகுத்து நிற்கின்றன. அம்மையாரின் தாய் மொழியும் தமிழ் கிடையாது. இவர் கூட கூட்டணி வைத்திருக்கும் குடிகாரருக்கும் தாய் மொழி தமிழ் கிடையாது.
இவர்கள் இருவரும் இணைந்து தமிழ் மக்களைக் காப்பாற்றப் போகின்றனராம்.

ஐந்து வருடம் கூடவே இருந்து பீரங்கி போல முழங்கிக் கொண்டிருந்த நாயுடுவை விரட்டிவிட்டு நாயக்கரை சேர்த்த காரணம் என்ன? நாயுடுவை வளர்த்த தெலுங்கு கூட்டம்தான் நாயக்கரை வளர்க்கின்றது. ஏற்கனவே தமிழ்நாட்டில் விடுதலை அடைவதற்கு முன்னால் முதல்வராக இருந்த அனுபவம் இந்த தெலுங்கு கும்பலுக்கு உண்டு. அவர்களில் யாரவது ஒரு ஆளை முன்னிறுத்தி அரசியலில் அதிகாரத்தினை மீண்டும் பெற்றால் அதை வைத்து ஆதாயம் அடையத் துடிக்கின்ற ஜெயவிலாஸ் ராம்கோ போன்ற பண முதலைகள்தான் இந்த நாயுடுவை மறுமலர்சி என்ற பெயரில் வளர்த்தது.
மறுமலர்சி தளர்ந்து போகவும் இப்போது நாயக்கரை தேசியம் என்ற பெயரில் களம் இறக்கி கன்னடத் தலைவியுடன் கூட்டணி சேர்த்து அரசியல் ஆதாயம் பெற நினைக்கிறது. இது இந்த இளிச்சவாய் தமிழ் இனத்திற்கு தெரியாமல் சினிமா கவர்சியில் மூழ்கிப் போய் ஓட்டளிக்கவும் தயாராக இருக்கிறது.

சரி நமது தமிழினத்தினை சேர்ந்தவர் என்று இந்த திமுக கூட்டணியையும் ஆதரிக்க முடியாது. இலங்கையில் தமிழனத்தினை ஒழித்துக் கட்டியவர்கள்தான் இந்த தமிழ் துரோகிகள். விரோதியை மன்னித்தாலும் இந்த துரோகிகளை மன்னிக்கவே கூடாது.

எனவே உண்மையிலேயே தமிழ் மேல் பற்று கொண்டவர்கள் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் அனைவரும் தங்களது தொகுதியில் இந்த இருவரையும் கவனமாக தவிர்த்து எவன் பச்சைத் தமிழனாக சுயேட்சையாக நிற்கின்றானோ அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

அதே போல் வாக்களிக்கும் தினத்தன்று விடுமறை போல் வீட்டிலேயே படுத்துக் கொண்டு வாக்களிக்காமல் இருக்கும் 30 சதவீத கும்பல் ஒன்று எல்லாத் தேர்தலிலும் உண்டு. இந்த கும்பலினால்தான் சிலரது தலையெழுத்து மாறிப் போய் விடுகிறது. அனேகமாக இது மேல்தட்டு வர்க்கமாகத்தான் இருக்க முடியும். இவர்களை வாக்குச் சாவடிக்கு கொண்டு வரவேண்டும்.

வாக்களிக்கும் போது சான்றாக ஒரு அட்டை ஒன்றை வழங்க வேண்டும். அந்த அட்டை இருந்தால் தான் குடிமைப் பொருள் முதல் வங்கி கணக்கு துவங்குவது, கடவுச்சீட்டு பெறுவது, கல்லூரியில் சேர்வது இன்ன பிற அனைத்து அரசு துறை நடவடிக்கையிலும் இந்த வாக்களித்தற்கான அட்டையில் நகலை இனைக்க வேண்டும் என அரசு ஒரு சட்டத்தினைப் பிறப்பித்தால் இந்த மேல்தட்டு வர்க்கம் அலறி அடித்துக் கொண்டு வாக்களிக்க வரும். 100 சதவீதம் வாக்குப் பதிவானால் பலபேருடைய தலையெழுத்து மாறி விடும்.

ஏன் எனில் கட்சி உறுப்பினர்களின் வாக்கு வங்கியை கொண்டே இந்த இரண்டு கழகச் சனியன்களும் காலம் காலமாக மக்களை ஏமாற்றி வருகின்றன. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க இதனால் மட்டுமே முடியும்.