வியாழன், 13 ஆகஸ்ட், 2009

செத்தும் கொடுத்தான் சீதக்காதி-கதை அல்ல காதை


ஒருநாள் அர்ச்சுனனும் கிருஷ்ணரும் பேசிகிட்டு இருக்கும் போது அர்சுனனுக்கு தீடிர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. "மச்சான் எங்கன்னனும் பேருக்கேத்த மாதிரியே தருமமெல்லாம் பண்ணுறான். ஆனா இந்த உலகம் கருணன மட்டும் கொடைவள்ளல்னு சொல்லுதே அதுக்கு என்ன காரணம்"னு கேட்டான். கண்ணன் சிரிச்சுகிட்டே "வா மாப்பிளே அதுக்கு காரணத்த உனக்கு நேரயே காட்டுறேன்"னு ரெண்டு பேரும் அந்தணருங்க மாதிரி வேசம் போட்டுக்கிட்டு முதல்ல தருமரோட அரண்மனைக்கு போனாங்க.
போனதும் தருமர்கிட்ட அந்தணரு வேசம் போட்ட கண்ணன் கேட்டான். "அய்யா தருமராசா எங்கம்மா செத்துப்போயிட்டாங்க சாகுறதுக்கு முன்ன அவுங்கள சந்தணக்கட்டையிலதான் எரிக்கனும்னு சொல்லிட்டுச் செத்துட்டாங்க நாங்களோ ஏழைங்க அதனால எங்கம்மாவ எரிக்கிறதுக்கு ஒரு வண்டி சந்தணக்கட்டை கொடுப்பா"னு கேட்டான்.அந்த நேரமோ கடுமையான மாரிக்காலம். பத்து நாளா மழ நிக்காம ஊத்துகிட்டுருந்துச்சு. தருமரும் அவன் காவலருங்கள பாத்து "நம்ம கிட்டங்கில எங்கினியாச்சும் காஞ்ச மரம் இருந்தா எடுத்து ஒரு வண்டி கொடுங்கப்பா"னு உத்தரவ போட்டான். கொஞ்சநேரம் கழிச்சு காவலருங்களும் வீசின கையும் வெறுங்கையுமா திரும்பி வந்துட்டாய்ங்க. தருமரு இந்த ரெண்டு அந்தணருங்களையும் பாத்து "அப்புகளா என்ன மன்னிச்சிருங்க வேற மரக்கட்டைன்னா தர்றேன்" அப்படின்னுட்டான்.இவிய்ங்க ரெண்டு பேரும் சரீ மன்னா பரவாயில்ல"ன்னு திரும்பி வந்துட்டாய்ங்க.
வந்ததும் நேர கர்ணங்கிட்ட ரெண்டு பேரும் போயி தருமருகிட்ட சொன்னது மாதிரியே கதைய விட்டாய்ங்க.கர்ணனும் அவன் சிப்பாய்ங்கள விட்டு தேட சொன்னான். அவியிங்களும் முன்ன மாதிரியே கைய வீசிக்கிட்டு வந்தாய்ங்க..வந்தவய்ங்கிட்ட கர்ணன் கேட்டான் என்னப்பா ஆச்சுன்னு "மன்னா எல்லா ஈரமரமா இருக்கு காஞ்சது ஒன்னு கூட தேறல" கர்ணன் ஒரே ஒரு நொடி யோசிச்சான் உடனே அந்த சிப்பாய்ங்கிட்ட சொன்னான். "நம்ம அரண்மனையில சந்தண மரத்துல என்ன சாமான் இருந்தாலும் அது கதவானாலும் சரி சன்னலானுலும் சரி பெட்டி பேழை ஒன்னு விடாதிக எல்லாத்தியும் உடச்சு இவங்களுக்கு ஒரு வண்டி சந்தண கட்டை கொடுங்கப்பான்னு சொன்னான் அதே மாதிரி கொடுக்கவும் ரெண்டு பேரும் வாங்கிட்டு வந்துட்டாய்ங்க.
இப்ப கண்ணன் சொன்னான் "என்னப்பா அர்ச்சுனா உன் கேள்விக்கு விட கெடச்சாதா"னு பார்த்திபன் சொன்னான் "புரிஞ்சுகிட்டேன் மச்சான்"னு இது கதை

கீழக்கரையை சேர்ந்தவரு சீதக்காதி பெரிய வள்ளல்.18 ம் நூற்றாண்டு காலத்து பாரி அவரு.சீறா புராணம் எழுதுன உமரு புலவரு கடிகை முத்து புலவருல்லாம் இவரு ஆதரவிலதான் வாழ்ந்தாங்க. வீட்டுக்கு யாரு வந்தாலும் இல்லைன்னு சொல்லாம கொடுக்குற வெள்ள மனசுக்காரரு ஒருநாள் வியாபார விசயமா ஒரு ஊருக்கு போனாரு. போன இடத்துல ஒரு வயசாளி வீட்டுல சமைஞ்ச குமரு உள்ளவரு சீதக்காதியப் பாத்து 'அய்யா நானோ வயசாளி வீட்டுல குமரு ஒன்னு இருக்கு அதுக்கு மாப்பிள்ள பாத்துகிட்டு இருக்கேன் கல்யாண செலவு கைக்கூலின்னு நிறய பணம் தேவப்படுது"ன்னாரு.உடனே வள்ளலும் எவ்வளவு காசு வேணும்"ன்னாரு அதுக்கு அந்த வயசாளி "இப்ப வேணாம் வீட்டுல வறுமையா இருக்குறதுனால கொடுத்தா செலவாயிடும் மாப்பிள பாத்து பேசி முடிச்சதும் தாங்க"ன்னாரு. வள்ளலும் "எப்ப வேணும்னாலும் என் வீட்டுக்கு வாங்க"ன்னு ஊருக்கு வந்துட்டாரு.
வந்து கொஞ்ச நாளுல உடம்புக்கு முடியாம போயி சீதக்காதி வள்ளல் மவுத்தாயிட்டாக.இந்த நேரம் பாத்து அந்த வயசாளி மாப்பிள்ளை பேசி முடிச்சிட்டு காசு வாங்குறதுக்காக கீழக்கரை வந்து சீதக்காதி வீட்ட விசாரிச்சுருக்காரு."காக்கா மவுத்தாய்ட்டாக அடக்கம் பண்ணுறதுக்கு மையவாடி கொண்டு போயிட்டாங்கனு கேள்விப்பட்டு "அட நமக்கு கொடுப்பினை இல்லையே"ன்னு மனசுல நினைச்சுகிட்டு அவரும் மைய வாடி போயி சேந்தாரு.அங்க போனா அடக்கம் முடிஞ்சு எல்லாரும் திரும்பிக்கிட்டு இருந்தாங்க. இவரு மொள்ளமா போயி மய்யத்துகிட்ட கண்ண மூடி சீதக்காதிக்காக துவா கேட்டுருக்காரு பாருங்க அதிசயத்த அடக்கம் பண்ண குழியிலருந்து சீதக்காதியோட ஒரு கை வெளியே வந்துருச்சு (சரியா குழிய மூடாம விட்டுறுக்கலாம்) அதுல ஒரு முத்து பதிச்ச மோதிரம் ஒன்னு இருந்துருக்கு. இதப்பாத்ததும் ஊர்காரங்கள்ளாம் "என்னப்பு நீங்க எந்த ஊரு அப்புடின்னு விசாரிச்சுருக்காங்க வயசாளி சீதக்காதி அவுக ஊருக்கு வந்தது இவரு காசு கேட்டது எல்லாத்தையும் சொன்னாரு ஊர்காரவுகளும் உங்களுக்கு கொடுக்கத்தான் அவரு கையி மய்யத்திலிருந்து வந்துருக்குன்னு சொல்லி அந்த மோதிரத்தை கழட்டி கொடுத்துட்டங்க வயசாளியும் அந்த மோதிரத்த வச்சு மகள் கல்யாணத்த எந்த பிரச்சினையில்லாம முடிச்சுட்டாரு. அதுல இருந்துதான் வள்ளல் சீதக்காதி செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி ஆனாரு.
மேல உள்ள படம் தான் செத்தும் கொடை கொடுத்த சீதக்காதியோட கபர். இது காதை

கதைக்கும் காதைக்கும் என்ன வித்தியாசமுனு அண்ணன் பழமை பேசி கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க
(எனக்கு தெரியும்னாலும் பழமைபேசி அண்ணன் மாதிரி சிறப்பா சொல்லத் தெரியாது)
இதுலருந்து என்ன தெரியுதுன்னா
இரப்பவருக்கு இல்லை எனாது கொடுப்பவருக்கு
இறந்த பின்னும் இறவாப் புகழ் கிடைக்கும்
அதுனால நம்மால முடிஞ்சவரை மத்தவுகளுக்கு உதவி செய்யனும்



4 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

அருமையான கதையும், காதையும்

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க நிகழ்காலத்தில் அண்ணா
உங்கள் கருத்துக்கு நன்றி

Unknown சொன்னது…

ohhh... Thanks for gave info about Sithakahi..

very nice.

keep writing...

kkk சொன்னது…

மற்றவர்களுக்கு கஷ்டத்ள நம்மAள முடிந்தவரியி உதவனு, என்ற கருTHU NICE

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க