சனி, 8 ஆகஸ்ட், 2009

இயேசு காந்தி கமல் என்ன ஜாதி

1991-1996 செயலலிதா ஆட்சியில்தான் ஜாதி அரசியல் செழித்து வளர்ந்தது எனலாம். அதுக்கு முன்னரே ஜாதிகள் இருந்தாலும் இந்த காலக்கட்டத்தில்தான் மாவட்ட தலைநகருக்கு பேரு வைக்கிறது போக்குவரத்துக் கழகத்துக்கு பேரு வைக்குறதுனு ஜாதி அரசியல் ரொம்ப விபரீதமா போய்க்கிட்டு இருந்தது.
அப்புறம் கடைசியா தேனி போக்குவரத்து கழகத்துக்கு வீரன் சுந்தரலிங்கனார்னு பேர் வச்சதும் பல பிரச்சினை வந்து கடைசியா கலைஞர் போக்குவரத்துக் கழகத்துக்கெல்லாம் பேர எடுத்துட்டு கோட்டமாக பிரிச்சதும் தான் நிம்மதி வந்துச்சு.

இருந்தாலும் அப்ப பிடிச்ச ஜாதிப் பித்து இன்னும் எங்க ராமநாதபுரம் மாவட்டத்த விடல. ஓட்டப் பெ(பொ)றுக்குரதுக்காக இத அரசியல் தலைவர்கள் செஞ்சாங்கன்னு நடுநிலை மக்கள் புரிஞ்சிகிட்டாலும் இந்த ஜாதி தலைங்க இந்த மாவட்டத்துக்கு இன்ன பேர வை அந்த போக்குவரத்து கழகத்துக்கு இவர் பேர வைன்னு ஒரே போஸ்டரா அடிச்சு பஸ் ஸ்டாண்ட் பூரா ஒட்டிக்கிட்டு இருப்பாய்ங்க.

இதுல என்ன வேடிக்கைன்னா இவய்ங்க இராமநாதபுரம் மாவட்டத்துக்கோ அல்லது மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகத்திற்கோ பேர மாத்த கேட்க மாட்டாய்ங்க. அடுத்த மாவட்டத்துக்குதான் ராம்நாடு பஸ்ஸ்டாண்டுல போஸ்டர் ஒட்டுவாய்ங்க. இதுல சுதந்திரத்துக்காக பாடுபட்ட தேசிய தலைவர்கள் அம்பேத்கர்,முத்துராமலிங்க தேவர்,காமராஜ்,வ வு சி இவுங்கல்லாம் ஜாதி தலைவரா போனதுதான் கொடுமை.
பெரும்பிடுகு முத்தரையர்,ராமசாமிபடையாட்சி,தியாகி விஸ்வநாத மருத்துவர்,முத்துச்சாமி ஆச்சாரி வீரன் அழகுமுத்துக்கோண்னு தலைவர்கள்ளாம் தமிழ்நாட்டுல இருந்தாங்கனு இவிங்க ஒட்டுற போஸ்டரப் பாத்துத்தான் ராம்நாட்டுல தெரிஞ்சுக்குவோம்.

இப்படித்தான் ஒருநாளு இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா இறந்ததுக்கு கண்ணீர் அஞ்சலின்னு போஸ்டர் ஒட்டியிருக்கு என்னடானு பாத்தா அவரு சலவைத் தொழிலாளி சாதியாம்.அப்புறம் ஒரு நாளு பாரத முன்னாள் ஜனாதிபதி கியானி ஜெயில்சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரப் பாத்தோம் அவுரு ஆசாரி ஜாதியாம் போஸ்டருல ஐம்பொன் தொழிலாளர் சங்கம்முன்னு போட்டிருந்தாய்ங்க.இத விட கொடுமை என்னன்னா அக்டோபர் இரண்டாம் தேதி காந்திக்கு பிறந்த நாளு வாழ்த்துச் சொல்லி போஸ்டரு என்னடா காந்தி மேல திடீருன்னு பாசம் வச்ச ஜாதி யாருடானு பாத்தா அதுல ஆயிர வைசிய செட்டியாராம் காந்தி செட்டியாருன்னு அன்னைக்குத்தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

பெருசுகதான் இப்படி இருக்குதுகன்னு பாத்தா படிக்குற சிறுசுக அதுக்கு மேல. நடிகர்களின் சாதியை கண்டுபுடிச்சு அவய்ங்களுக்கு ரசிகர் மன்றம் வைக்குறதுல எங்க பயலுக கில்லாடிக. சரத்குமாரு பாண்டியராசன் ராமராசன் ரசிகர் மன்றம்ன்னா அது நாடாரு,கார்த்திக்கு பிரபு கமல்ஹாசன்னா அது தேவரு,பிரசாந்து விக்ரம்முன்னா அது தேவேந்திரகுல வேளாளர் பார்த்திபன்னா அது ஆசாரி இப்படி ஒரு மார்க்கமா ரசிகர் மன்றம் வைச்சுக்குட்டு இருந்தாய்ங்க.தேவர் வீட்டுப் பசங்க நிறையப்பேரு எங்கூட ஒன்னா படிச்சாய்ங்க. அவய்ங்க கூட பசங்கள்ளாம் ஒருநாளு ஒன்னா பேசிக்கிட்டு இருக்கும்போது ஒரு பய கேட்டான் "ஏண்டா கார்த்திக் பிரபு ஒகே அது ஏண்டா கமலஹாசனையும் தேவர் லிஸ்டுல வச்சுருக்கிங்க அவரு தேவர்மகன் படத்துல நடிச்சதாலயா"ன்னு கேட்டான், அதுக்கு தேவர் வீட்டு பையன் சொல்லுறான். "அது மட்டும் இல்லடா அவரு மூக்கப்பாரு அது அய்யரு மூக்கே இல்ல அப்படியே எங்க ஜாதி மூக்கு அது மட்டும் இல்ல தலைவரு ராம்னாடு ராசா அரன்மனியிலதான் பொறந்தாரு" அப்படின்னு பொடிவச்சான். அந்த காலத்துல பரமக்குடியில வசதி இருந்துருக்காது அதனால ராம்னாடு வரும்போது அரண்மனையில் பொறந்துருப்பாருன்னு சொன்னான் ஒருத்தன் அதுக்கு அவன் சொல்லுறான் ஏண்டா வர்ற வழியிலயே பழய வெள்ளக்கார ஆஸ்பத்திரி (தூய மார்ட்டின்) இருக்குல அதுல பொறக்காம ராம்நாடு அரண்மனை வந்துதான் பொறப்பாரோ அப்புடின்னு புதிர் போட்டான். நான் உடன 'போங்கடா விட்டா நீங்க கடவுளுக்குக் கூட ஜாதி கட்டி விட்டுறவிங்கடா விடுங்கடா பேச்ச"ன்னு எந்திரிச்சு வந்துட்டோம் வீட்டுக்கு வர வழியில என் கோனாரு பிரண்டு ஒருத்தன் ஆரம்பிச்சான் "ஏண்டா கடவுளுக்கு ஜாதி இல்லைன்ற கிருஸ்னரு யேசுல்லாம் எங்க சாதிதாண்டா' அப்படின்னு ஆரம்பிச்சான் எப்படிற்றான்னா அவங்க் ரெண்டு பேரும் ஆடு மாடு மேய்ச்சாங்கன்னான் அதுக்கு உடனே ஆசாரி ப்ரண்டு ஒருத்தன் சொன்னான் 'டேய் கிருஸ்னர வேனும்னா ஒத்துக்குறேன் ஆனா இயேசுவப்பத்தி சொல்லாதேன்னு சொன்னான் உடன நான் "ஏண்டா இயேசு ஆசாரியாடா ன்னு கேட்டா அதுக்கு அவன் சொன்னான் "ஆமா அவுக அப்பா சூசை மர தச்சருதானே அப்ப இயேசுவும் ஆசாரிதான்"அப்படின்னு ஒரு போடு போட்டான் . எனக்கு தலை சுற்றாத குறைதான்.

2 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

இந்த பிரச்சினை நம்ம ஊர்ல மட்டுமில்லை.உலகம் முழுதும் இருக்கு.

இந்த சாதிக்குப் பிறந்தோம்ன்னு சொல்றதை விட்டு இதை சாதிக்கப் பிறந்தோம்ன்னு எப்ப நம்ம மக்கள் சொல்றாங்களோ அப்பதான் நம்ம நாடு திருந்தும்.

இது ஒரு படத்துல கேட்ட வசனம்தான்.

முதல்வன் படத்துல சாதிப்பிரச்சினையை தீர்க்க ஷங்கர் ஒரு நல்ல தீர்வு சொல்லியிருப்பார்.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

மிக்க நன்றி துபாய் ராஜா அவர்களே
உங்கள் வருகைக்கு நன்றி

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க