திங்கள், 7 செப்டம்பர், 2009

நியுமராலஜி நித்யாணந்தாவின் தமிழக வருகை

நியுமராலஜி நித்யாணந்தா. இவர் பெயரியல் புலி. அமெரிக்கா,அய்ரோபா,சிங்கப்பூர்,மலேயா,இலங்கை மற்றும் பல நாடுகளில் கோபால் பல்பொடிக்கு அடுத்து புகழ் பெற்றவர்.(வாசகர்கள் நலன் கருதி இவரது புகைப்படம் பிரசுரிக்கப்படவில்லை. பொறுத்தருள்க) பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு அரசியல் தலைவர்களின் பெயர்களை மாற்றி அவர்களது வெற்றிக்கு வித்திட்டவர். இவர் சமீபத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி தமிழகம் வருகை தந்தபோது அவரை பல்வேறு அரசியல் தலைவர்களும் சந்தித்து தங்களின் சங்கடங்கள் தீர தங்கள் பெயர்களை மாற்றியமைக்க வேண்டினர். அவர்களது குறைகள் தீர சுவாமி ஸ்ரீலஸ்ரீ நித்யாணந்தாவும் பெயர்களை மாற்றி ஆலோசனை வழங்கினார். இதை ஒரு ரகசிய கருவி மூலம் ஒட்டுக்கேட்ட நாம் அந்த செய்திகளை பரபரப்புடன் நக்கீரனை விட முந்தித் தருகிறோம்.

முதலில் வந்தவர் முதல்வர் கருணாநிதி. நேரம் அதிகாலை 4.00 மணி.



'வாங்க ஏன் உடம்புக்கு முடியலையா? மஞ்சத்துண்டால போத்திக்கிட்டு வர்றீங்களே"

'இலங்கைப் பிரச்சினை முடிஞ்சதாலே உடம்பு நல்லாத்தேன் இருக்கு. எனக்கு ஊருல பகுத்தறிவு பகலவன்னு பேரு இருக்கு அதுனால வேற யாரும் பாத்துட்டா பிரச்சினைன்னுதான் காலையில மஞ்சத்துண்டைப் போத்திகிட்டு வந்துட்டேன்"

"பகுத்தறிவு பகலவன்னு சொல்லுறிங்க உங்களுக்கு இந்த ஆருடம் ஜோசியம் இதில நம்பிக்கை இருக்கா"

'எனக்கு இல்லிங்க ஆனா தயாளு சொன்னா போயி பாக்கச் சொல்லி, எனக்கு பொண்டாட்டி பிள்ளைங்க மேல பாசம் அதிகம். அதுனால அவங்க மனசு கோணக்கூடாதுன்னு வந்தேன்"

"சரி பரவாயில்ல உங்க பேரு அப்புறம் உங்க பிரச்சினை என்னனு சொல்லுங்க"

'பேரு கருணாநிதி, பிரச்சினை எதுவும் இல்ல ஆனா ஒரே ஒரு ஆசை மட்டும் இருக்கு அது என்னன்னா என் மகன் பேரன் கொள்ளுப்பேரன் எள்ளுப்பேரன் இப்படி என் வாரிசுங்களே தமிழ்நாட்ட ஆளனும் அதுக்கு எப்படி என் பேர மாத்துனா நல்லா இருக்கும்'

"இதுக்குப் பேரு ஆசை இல்லிங்க பேராசை. சரி பரவாயில்ல அய்யாவோட பேரு கருணாநிதி பேருலயே நிதி இருக்கிறதுனால நிதிக்கு பஞ்சம் இருக்காதுன்னு நினைக்கிறேன்'

"ஆமாங்க அப்புடி இப்புடி ஆசியாவுலயே பெரிய பணக்காரன்ல நானும் ஒருத்தன்ங்க"

"சரி உங்க பேருல கடைசி ரெண்டு எழுத்து ஒகே ஆனா முதல் மூணு எழுத்து கருணான்னு வருது கருணான்னா காட்டிக் கொடுக்கிறது போட்டுக் கொடுக்கிறதுன்னு மக்களுக்கு நினைக்கத் தோனும் அதுனால உங்க பேர கர்ணான்னு மாத்தி அந்த கர்ணா மாதிரியே மக்களுக்கு இலவசமா நிதிய வாரி கொடுத்திக்கிட்டு இருந்திங்கன்னா உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை அதுனால உங்க பேர கர்ணாநிதின்னு மாத்தி வச்சுங்கங்க"
-------------------------------------------------------------------------------------------------

அடுத்து வந்தவர் செல்வி ஜெயலலிதா நேரம் காலை 9 மணி 9 நிமிடம்.


"வாங்க என்ன விசயம் உங்க பேரு என்ன?

'ரொம்ப கேள்வி கேட்காதிங்க கேள்வின்னால எனக்கு அலர்ஜி அதுனாலதான் நான் சட்டசபைக்கோ கோர்ட்டுக்கோ சரியா போறதில்ல. சரி வந்த விசயத்த சொல்லுறேன் என் பேரு ஜெயலலிதா நான் எப்படியாவது மறுபடி ஆட்சிய புடிக்கனும் அதுக்கு என் பேர எப்படி மாத்துனா நல்லா இருக்கும்'

"ரொம்ப அவசரப்படுறிங்க சரி பரவாயில்ல. உங்க பேருல முதல் ரெண்டெழுத்துல் ஜெயம் இருக்குறதுனால பிரச்சினை இல்லை. ஆனா கடசி எழுத்து தா ன்னு முடியுது அதுனாலதான் நீங்க ஆட்சியத்தா அதிகாரத்த தா டான்சியத்தா டாலர் நோட்டத்தா ன்னு கேட்டுக்கிட்டே இருக்கிங்க. மேலும் இந்த தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப சுயமரியாதை உள்ளவுங்க அதுனால அவுங்களுக்கு தான்னு ஒருமையில சொல்லுறது புடிக்காது'

"இல்லியே ஏற்கனவே ரெண்டு தடவ நான் கேட்டப்ப கொடுத்தாங்களே"

"அப்ப நீங்க செல்லுலாயிட் பொம்ம மாதிரி இருந்திருப்பிங்க அதுனால பரிதாபப்பட்டு கொடுத்திருப்பாங்க இப்ப நீங்க அப்படி இல்லியே"

'சரி எப்படி மாத்தலாம் சொல்லுங்க'

'உங்க பேர ஜெயலலிதாங்க அப்படின்னு மாத்தி வச்சுக்குங்க அப்பத்தான் ஒரு மரியாதையா இருக்கும் நீங்களும் தாங்க போங்க ன்னு மரியாதையா கேட்குற மாதிரி இருக்கும் வந்தாரை வாழ வைக்கும் தமிழங்க உங்கள மறுபடியும் வாழ வைப்பாங்க"
---------------------------------------------------------------------------------------------

அடுத்து வந்தது புரட்சி புயல் வைகோ


"16ம் நூற்றாண்டில் ஏதென்ஸிலே......"

"பொறுங்க என்ன எடுத்த எடுப்புல ஏதென்சுக்கு போயிட்டிங்க அங்கெல்லாம் சுத்திட்டுத்தான் நான் இங்க வந்துருக்கேன் பேரு என்ன பிரச்சினை என்னன்னு மட்டும் சொல்லுங்க'

'பேரு வைகோ ங்க வாழ்க்கையில மறுமலர்ச்சியே இல்லிங்க"

"வைகோ ரொம்ப சின்ன பேரா இருக்கே இதுதான் உங்க சொந்த பேரா"

"கோபால்சாமி ங்கிறது முதல் பேருங்க அத சுருக்கி வைகோ ன்னு வச்சுகிட்டேன்"

"ம் ம் கோபால்சாமி இது பழய பேரு தமிழ் இலக்கணத்துல நெடிலுக்கு ரெண்டு மாத்திரை குறிலுக்கு ஒரு மாத்திரை ஒற்றுக்கு 1/2 மாத்திரை இதன் படி பாத்தா உங்க பழய பேருக்கு 7 1/2 மாத்திரை வருது அந்த ஏழரைய மாத்தி வைகோ ன்னு மூணு மாத்திரயா வச்சுருகிங்க உங்களுக்கே தெரியும் பரிட்சையில பாஸ் பன்னனும்னா குறஞ்சது நூத்துக்கு 35 மார்க்காவது வேணும் அப்ப பத்துக்கு நாலு மார்க்காவது வேணும் அதுனால உங்க பேர வைகோசான்னு மாத்தி வச்சுங்கங்க மாத்திரயும் அஞ்சு வரும் உங்களுக்கும் அஞ்சு சீட்டு கிடைக்கும்.பிகாசா மாதிரி நீங்களும் வைகோசான்னு பிரபலாமாயிடலாம்.

-------------------------------------------------------------------------------------------------
அடுத்து தமிழ் குடி தாங்கி ராமதாஸ்

"வாங்க உங்க பேரு என்ன பிரச்சினை என்ன'

'பேரு ராமதாஸ் அய்யா மரம் வெட்டி கட்சி வளர்த்தேன் காடு வெட்டி ன்னு ஒரு பய பேச்சக் கேட்டு எனக்கு நானே ஆப்பு அடிச்சுகிட்டேன் இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க"

"ராமதாஸ் உங்க பேருல முதல் ரெண்டு எழுத்து ராமான்னு வருது அதுனால நீங்களும் ஆடுறா ராமா ஆடுறா ராமான்னு குரங்கு குச்சிக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் தாண்டுற மாதிரி தாண்டிகிட்டு இருந்திருப்பீங்க மக்களும் உங்க தாவலை முன்னாடி ரசிச்சிருப்பாங்க ஆனா உங்க பேருல மூணாவது எழுத்து தா அதுனால தா தா சொல்லிகிட்டு இருக்கிறவுங்க யாரோடயாவது நீங்க சேந்து உங்க பேருல கடைசி எழுத்து ஸ் மாதிரி உங்க ஆட்டமும் புஸ்ஸுன்னு முடிஞ்சு போயிருக்கும் சரியா நான் சொல்லுறது"

"அய்யா சரியா சொன்னிங்க இதுக்கு நான் என்ன செய்யனும் என்ன செஞ்சா அன்புவை மறுபடி மத்திய அமைச்சராக்கலாம் "

"உங்க முதல் ரெண்டெழுத்து ராமா வை மாத்திப் போடுங்க மாறான்னு வரும் அடிக்கடி கூட்டனி மாறிக்கிட்டு இருக்காம யாருக்காவது மாரா(றா)தாசன் ஆகுங்க எல்லாம் சரியாயிடும்"

-------------------------------------------------------------------------------------------------
அடுத்து திருமாவளவன்

"அடங்க மறு ஆர்த்தெழு'

'என்ன தம்பி வந்ததும் வளவளன்னு பேசுறிங்களே உங்க பேரு என்ன"

'திருமாவளவன் அய்யா'

"அதான் வளவளன்னு பேசுறிங்க உங்க பேர எப்படி மாத்துறது திருன்னா செல்வம் மரியாதை நல்ல பேருதான் மா ன்னாலும் பெரியன்னு அர்த்தம் வருது ஆனா இந்த வள ன்னு இருக்குறதுனால வள வளன்னு பேசிகிட்டு இருக்கிங்க வாள்ன்னு மாத்தினாலும் வாள்வாள்னு கத்திகிட்டு இருப்பிங்க அதுனால பேச்சைக்குறைச்சுகிட்டு திருமாவாழ்வன் அப்படின்னு மாத்தி வச்சுங்கங்க வாழ்வு நலமா இருக்கும்"

---------------------------------------------------------------------------------------------------------------------------------------





3 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

மிகவும் நகைச்சுவையான பதிவு.

உரையாடல்கள் கனகச்சிதம்.

'கர்ணா'நிதி,ஜெயலலிதா'ங்க',வைகோசோ அருமை.

மாராதாசன்,திருமாவாழ்வன் அட்டகாசம்.

'நியுமராலஜி நித்யாணந்தா'வை மத்தவங்கல்லாம் எப்போ போய் பார்க்கப்போறாங்க.... :))

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வருகைக்கும் ரசிப்புக்கும் மிக நன்றி ராஜா

ttpian சொன்னது…

ammaaaa

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க