சனி, 27 பிப்ரவரி, 2010

கடவுளுக்கு ஒரு கடிதம்

ஒரு சிறு பையனுக்கு மிகவும் அவசரமாக ரூபாய் 50 தேவைப்பட்டது. பெற்றோரிடம் கேட்டும் பயனில்லை. எனவே கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். நீண்ட நாள் பிரார்த்தனை செய்தும் கடவுள் அவனுக்கு உதவி செய்தாரில்லை. எனவே கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் அவனுக்கு தேவையான ரூபாய் 50 ஐ குறிப்பிட்டு அந்த கடிதத்தை கடவுள், இந்தியா என்னும் முகவரிக்கு அஞ்சல் செய்தான்.

கடிதத்தினைப் பார்த்த அஞ்சல் துறை அதிகாரிகள் வேடிக்கையாக அந்த கடிதத்தினை இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்கள். குடியரசுத்தலைவர் அந்த கடிதத்தினைப் படித்துப் பார்த்தார். மிகவும் ஆச்சர்யம் அடைந்தார். உடன் அவரது காரியதரிசியை அழைத்து அந்த பையனுக்கு ரூபாய் 20 மட்டும் அனுப்பச் சொன்னார். குடியரசு தலைவர் ரூபாய் 50 அந்த பையனுக்கு அதிகம் எனவும் மேலும் அதிக பணம் அனுப்பி அந்த பையனை கெடுக்க மனமில்லாமலும் ரூபாய் 20 அனுப்பச் சொன்னார்.

பையனுக்கு பணம் வந்து சேர்ந்தது. பணத்தினை பெற்றுக் கொண்ட பையன் கடவுளுக்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பினான். அதில் கீழ் வருமாறு குறிப்பிட்டான்.

"கேட்டவுடன் பணம் அனுப்பிய கடவுளே உனக்கு நன்றி, ஆனால் நீ அதனை இந்திய குடியரசுத்தலைவர் அலுவலகம் வாயிலாக அனுப்பியிருக்கக்கூடாது ஏனெனில் அந்த கழுதைகள் ரூபாய் 30 ஐ வரிப்பிடித்தம் செய்து விட்டனர்."


1 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

செம சூப்பர், சிந்திக்க வேண்டியது.

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க