செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஓம் ஆமின் ஆமென்


மேலே உள்ள படம் எல்லோருக்கும் தெரியும் இந்து மதத்தின் உச்சக் கடவுள் (supreme deity) அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையோனின் உருவம்.

இதையும் அனைவரும் அறிந்திருப்பர். கிறித்துவ மதத்தில் ஒரு புனிதச்சின்னம். இயேசுபிரான் பரலோகப் பிதாவிடம் தன் ஆவியை இதில் அறைந்திருந்தபோதுதான் விட்டார்.


இது ஹஜருல் அஸ்வத் இஸ்லாம் மார்க்கத்தில் சொர்க்கத்தின் கல் என குறிப்பிடப்படுவது. இனையத்தில் படம் கிடைக்கவில்லை எனவே தோரயமாக வரைந்துள்ளேன். நபிகள் பெருமகனார் மெக்காவில் உம்ரா செய்யும்போது இந்த கல்லை முத்தமிட்டதாகவும் சிலர் தன் கைத்தடியால் ரசூல்லாஹ் அவர்கள் தொட்டதாகவும் கூறுவர்.
சரி இனி விசயத்திற்கு வருவோம். எப்படி மாரி மேரி மரியம் என பெயர்களில் ஒற்றுமை உள்ளதோ எப்படி ஓம் என்றாலும் ஆமென் என்றாலும் ஆமின் என்றாலும் உச்சரிப்பு ஒலி ஒன்றாக உள்ளதோ அதுபோல் இந்த மூன்று உருவங்களுக்கும் உள்ள ஒற்றுமையை கீழ் கண்ட படத்தின் மூலம் அனைவரும் உணரலாம்.




இதுதான் அந்தப் படம். மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இவை குறிப்பது ஒரு உருவத்தினை மட்டும்தான் என்பது இந்தப் படத்தின் மூலம் உணரலாம்.இஸ்லாம் பிளான் எனப்படும் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினையும் இந்து மதம் முன் முகப்பையும் கிறித்துவம் அதன் நீள்வெட்டுத் தோற்றத்தையும் குறிக்கின்றன.
ஹஜருல் அஸ்வத் உருவம் ஒரு கண்ணின் உருவத்தினை ஒத்தது என்பதை மெக்கா சென்று ஹஜ் யாத்திரை முடித்த ஹாஜிகள் அனைவரும் ஒத்துக் கொள்வர். அது கண் எனக் கொண்டால் சிவபெருமானின் நெற்றிக் கண்ணையும் இங்கு நிணைவு கொள்ள வேண்டும்.
எனவே இந்த மதங்கள் அனைத்தும் உணர்த்தும் ஒரே தத்துவம் என்னவெனில் நமது புறக்கண்களை மூடி அகக் கண்ணைத் திறந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் என்பதையே உணர்த்துகின்றன. இதைத்தான் கந்த குரு கவசத்தில் சொல்லப் படுகிறது
"நடு நெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்" என்று.
பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் பயணத்தின் முடிவில் நாம் சென்றடைய வேண்டியது இறைவன் ஒருவனைத்தான்.

3 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

மனங்களை நல்வழிப்படுத்தவே மதங்கள் என்பதை அறியாத மக்கள் யாவரும் மாக்களே...

பெயரில்லா சொன்னது…

நீங்க என்னா மூனோட நின்னுட்டீங்க.
இப்ப இது மூன்னூம் நிறைய குட்டிங்க போட்டு
முப்பது நாப்பதா பெறுகிப்போச்சுங்க மதமெங்கிற கொம்பனி.

Unknown சொன்னது…

Good comparision.God is one , we pray in different names that's it.

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க