புதன், 3 பிப்ரவரி, 2010

அதுக்கு நான் கல்யாணம் பண்ணாம இருந்துருக்கனும்.

"நீ எப்பவாது தனியா உட்கார்ந்திருக்கியாடா" தீடிர்ன்னு நண்பன் ஜாபர் கேட்டான்.

ஜாபர் என் பள்ளித்தோழன். சென்னையில் தொழில் செய்கிறான். நான் சென்னை போகும் போதெல்லாம் இவனைப் பார்க்க தவறுவதில்லை. சமீப காலமாக குண்டலினி சக்தி,ஜீவ முக்தி இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறான்.

"என்னடா கேட்டதுக்கு பதில் சொல்லு என்னைக்காவது தனியா உட்கார்ந்திருக்கியாடா" மறுபடியும் கேட்டான்.

"ஏன் இல்லை தினமும் காலையில் வெளிக்கி இருக்கும் போது தனியாத்தாண்டா உட்காந்திருக்கேன்."

"அப்ப முக்கிக்கிட்டு இருப்ப, நான் கேட்டது எந்த வித எண்ணங்களும் இல்லாம அம்மாவோட கருப்பையில் இருந்தோமே அதே மாதிரி."

"நீ என்ன சொல்ல வர்றே தியானத்தப் பத்தியா"

"ஆமா தினமும் காலையில் ஒரு பத்து நிமிசம் பத்மாசனம் போட்டு உட்கார்ந்து இரண்டு புருவ முடிச்சுக்கிடையே உள்ள மையத்தினை நோக்கி உன் மனத்த குவிச்சுப் பாரு. ஒரு வித்தியாசமான அனுபவத்த உணர்வே"

"புரியும் படியா சொல்லுடா"

"அதாவது மனுசனாப் பிறந்த எல்லோரும் ரெண்டு வித எண்ணங்களோடத்தான் இருக்கிறாங்க. ஒன்னு கடந்தகாலத்த அசைப் போட்டுகிட்டு இருக்கிறது. இது மைனஸ் 1,2,3 ....மாதிரி. இல்லன்னா அடுத்து என்ன செய்யனும்னு யோசிச்சுகிட்டு இருப்பாங்க இது +1,2,3 மாதிரி. இது மாதிரி இல்லாம நம்ம மனத்த தியானத்தின் மூலமா எந்த வித சிந்தனையும் இல்லாம ஒரு பத்து நிமிசம் 0 பூஜ்ய மனநிலைக்கு கொண்டு வந்தோம்னா அது பின்னாடி நம்முடைய ஜீவமுக்திக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்".

"ஜீவ முக்தியா ஏண்டா சாகப் போறதுக்கு இப்பவே பயிற்சி எடுக்கச் சொல்லுறியா?".

"ஒருவிதத்துல அப்படித்தான்னு வச்சிக்கோ. மனுசன் இறக்கும் போது அவனுக்கு ஏற்படும் வலி இருக்கே அத சொல்லவோ விவரிக்கவோ முடியாது. பொண்டாட்டி பிள்ளைங்க சொத்து சுகம் இது எல்லாம் விட்டுட்டு போறம்ன்னு ஒரு பெரிய வேதனையா இருக்கும்.ஆனா இந்த தியானத்தப் படிப்படியா செய்வதின் மூலம் உன் ஜீவன் உன் உடலை விட்டு வெளியே போய் வருவத நீ நிதர்சனமா உணரலாம். இந்தப் பயிற்சி மரணத்தினை தைரியமாக எதிர்கொள்ள வைக்கும். அது மட்டுமல்ல நீ இந்த புற உலகில் என்னவெல்லாம் சந்தோசம்ன்னு நினைக்கிறாயோ அது உனக்குள்ளேயே இருக்கு என்பதையும் நீ உணரலாம்".

"எப்படி ஐஸ்கீரீம் சாப்பிடம்ன்னு நினைச்சா அது இந்த தியானத்து மூலமா கிடைக்குமா."

"கண்டிப்பா அதுமட்டுமல்ல மாம்பழ தாகத்த தீர்த்துக்கனும்னு நினச்சாலும் சரி ஓல்ட் மங்க் குவார்ட்டர் அடிக்கனும்னு நினைச்சாலும் சரி அதுனால உனக்குக் கிடைக்கிற சந்தோசம் இந்த தியானத்து மூலமா கிடைக்கும்"ன்னு சொல்லி ஓசோ சுவாமி நித்யானந்தர் எழுதிய சில புத்தகங்களக் கொடுத்தான்.

"சரி முயற்சி செய்து பார்ப்போம், சரியா வந்துச்சுனா கருணாநிதிக்கு ஒரு கடிதம் போட்டு டாஸ்மாக் கடையெல்லாம் மூடச் சொல்லிட்டு அதுக்குப் பதிலா தியான மண்டபங்களக் கட்ட சொல்லுவோம்ன்னு நினைச்சுகிட்டு "சரிடா நீ சொன்னமாதிரியே தினமும் பத்து நிமிசம் உட்காருகிறேன் எப்ப உட்காரனும் காலையிலா மாலையிலா?"ன்னு கேட்டேன்.

"காலையிலதான் ஆனா அதுக்கு முன்னாடி காலைக்கடன்லாம் முடிச்சுகிட்டு வயித்த சுத்தமா வச்சிகிட்டு பண்ணு"ன்னான்.

ஊருக்கு வந்தவுடன் முத நாளு காலையில வெளியெல்லாம் போயிட்டு மொட்டமாடியில ஒரு பத்மாசனத்தப் போட்டு ஜாபர் சொன்னமாதிரி இரண்டு புருவமுடிச்சுகிடையே உள்ள மையத்தின நோக்கி மனசை குவிக்க ஆரம்பிச்சேன்.

"என்னங்க" தங்கமணியின் குரல்.

ஆரம்பத்துலேயே அபசகுனமா "என்னடி" என்றேன் எரிச்சலுடன்.

"இங்க வந்து பாருங்க"

கீழே வந்து பாத்தா நம்ம சேட்டைக்காரர் நடு ஹாலில் ஆய் இருந்து அதுமேல ஆட்டோ பொம்மை வச்சு ஓட்டிக்கிட்டு இருந்தாரு.

"ஏண்டி பாத்துகிட்டு இருக்கியே கழுவிவிடக்கூடாதா"

"அடுப்படியில கைவேலையா இருக்கேன்லே தூக்கிகிட்டு போயி கழுவிவிட்டு அப்படியே இத அள்ளி கொல்லையில போட்டுட்டு டெட்டால் வச்சு தரைய தேய்ச்சு விடுங்க"ன்னு அடுக்கடுக்கா பல ஆணைகள் போட்டா.

ஆணைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றியதில் அன்னைக்கு தியானம் பண்ணுறதுக்கு வழியில்லாம போச்சு.

தொடர்ந்த நாள்களில்.................

"என்னங்க தண்ணிதொட்டி நிறையிற சவுண்டு கேட்குது பாருங்க போயி மோட்டர அமத்துங்க"

வாஷிங்மெசின் சத்தம் கொடுக்குது பாருங்க போயி துணியெல்லாம் எடுத்து காயப் போடுங்க"

"என்னங்க அடுப்புல சட்டிய வச்சிருக்கேன் கொல்லையில ரெண்டு கருவேப்பிலை ஒடிச்சிகிட்டு வாங்க"

"சித்த இந்த தேங்காய துருவிக் கொடுங்க"

"சித்த இந்த சின்ன வெங்காயத்த உரிச்சுக் கொடுங்க"

"சாமிபடத்துக்கு பூவப் போடுங்க"

"சேந்தி (loft) சிலாப்புல இருந்து முக்குளி சட்டிய எடுத்துக் கொடுங்க".........

@#$%##@$#@#$#@#@#@#.................................................................................

ஒருவாரம் கழிச்சு ஜாபர் போன் போட்டான். "தம்பி என்ன நான் சொன்னத முயற்சி பண்ணிப் பாத்தியா?.

என்னத்த சொல்ல தலைப்பத்தான் அவனுக்கு நான் பதிலா சொன்னேன்.


6 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

//"என்னங்க தண்ணிதொட்டி நிறையிற சவுண்டு கேட்குது பாருங்க போயி மோட்டர அமத்துங்க"

வாஷிங்மெசின் சத்தம் கொடுக்குது பாருங்க போயி துணியெல்லாம் எடுத்து காயப் போடுங்க"

"என்னங்க அடுப்புல சட்டிய வச்சிருக்கேன் கொல்லையில ரெண்டு கருவேப்பிலை ஒடிச்சிகிட்டு வாங்க"

"சித்த இந்த தேங்காய துருவிக் கொடுங்க"

"சித்த இந்த சின்ன வெங்காயத்த உரிச்சுக் கொடுங்க"

"சாமிபடத்துக்கு பூவப் போடுங்க"

"சேந்தி (loft) சிலாப்புல இருந்து முக்குளி சட்டிய எடுத்துக் கொடுங்க".........

@#$%##@$#@#$#@#@#@#.................................................................... //

ஹா...ஹா..ஹா. வீட்டுக்கு வீடு வாசல்படி. :))

அண்ணாமலையான் சொன்னது…

கரெக்டுதான்...

கண்ணகி சொன்னது…

:)...:)..:)

PPattian சொன்னது…

கலக்கல்.. அதிலும்

//மாம்பழ தாகத்த தீர்த்துக்கனும்னு நினச்சாலும் சரி ஓல்ட் மங்க் குவார்ட்டர் அடிக்கனும்னு நினைச்சாலும் சரி அதுனால உனக்குக் கிடைக்கிற சந்தோசம் இந்த தியானத்து மூலமா கிடைக்கும்//

MURUGAN S சொன்னது…

உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

Ganapathi.vv சொன்னது…

Super Sir

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க