திங்கள், 3 ஜனவரி, 2011

எள்ளுன்னா எண்ணையா நிக்கனும்.


ஒரு குடும்ப ஆய்வுக்கட்டுரை ஒன்னு சொல்லுறது, என்னன்னா பெரும்பாலும் தங்கமணிகள் தங்கள் மனதில் என்ன நினைக்கிறார்களோ அதை ரங்கமணிகளிடம் நேரடியாக கேட்பதில்லை.

மனதில் இருப்பது ஒன்று. வாயில் வருவது ஒன்று. இது புதுசா கல்யாணம் முடிச்சவுங்களுக்கு முதல்ல புரியாது. நம்மளுக்கு கல்யாணம் முடிச்சு அஞ்சு வருசம் மேலாச்சா. அதுனால எங்க வீட்டு தங்கமணி எதுனாச்சும் நம்மளைக் கேள்வி கேட்டா உடனே அதைப் புரிஞ்சுகிட்டு அவங்க உண்மையிலேயே என்ன நினைக்கிறாங்களோ அத உடனே செஞ்சு முடிச்சுடுவேன். சில நேரம் நல்ல பேரும் வாங்கிடுவேன்.

உதாரணத்துக்கு

மத்தியான நேரம் ஒரு மணிப்போல தங்கமணிகிட்டே இருந்து தொலைபேசி அழைப்பு வந்தா,“என்னங்கன்னு சொன்னாப் போதும். “ என்னம்மா என்ன வாங்கனும், ஏதாவது வாழையில வாஙகனுமா இல்ல அப்பளக்கட்டு ஏதாவது வாங்கனுமான்னு கேட்பேன். எப்படிங்க கரக்டா சொல்லுறிங்க, வீட்ல அம்மா ( அவுங்கம்மா) வந்திருக்காங்க ஒரு கட்டு இலை வாங்கிட்டு வாங்க"ன்னு சொல்லுவாங்க.

"இந்த கண்ணாப் பயல ஆளயே காணோமே" (கண்ணா தங்கமணியோட ஆஸ்தான டெய்லர்)ன்னு நம்மகிட்டே கேட்டா உடனே நான் சொல்லுவேன். “எந்த சேலைக்கும்மா, போனவாரம் வாங்கினியே அந்த கத்திரிப்பூ கலர் சேலைக்கா இல்ல போன மாசம் வாங்குன வாடாமல்லி கலர் (கத்திரிப்பூவும் வாடாமல்லியும் ஒரே நிறமாத்தான் எனக்குத் தெரியுது ஆனா அத அவ்ங்ககிட்டே சொல்ல முடியாது)சேலைக்கா எந்த சேலைக்கு ஜாக்கட் வாங்கனும்அதுக்கு அவுங்க சொல்லுவாங்க “ "அதெல்லாம் வாங்கிட்டேன், நேத்து ஒரு சிந்தாமணிக்கலருல ஒரு சேலை எடுத்தேன். அதுக்கு பிந்தி அடிச்சுட்டு வாங்கன்னு சொல்லுவாங்க.சிரமேற் கொண்டு சேலையை எடுத்துட்டு போக வேண்டியதுதான் கண்ணா கடைக்கு.

ஏங்க மாடிக்குப்போறீங்களான்னு காலையில கேட்டா உடனே வாஷிங் மெசின்ல்ல துவைச்சு முடிச்ச துணியெல்லாம் எடுத்து “இதோ போய் துணியெல்லாம் காயப் போட்டிரம்மான்னு சமத்தா சொல்லுவேன். அதையே “மாடிக்குப் போறிங்களான்னு சாயங்கால நேரத்தில கேட்டாஉடனே கடகடவென மாடிக்குப்போயி காயப்போட்ட துணியெல்லாம் மடிச்சு எடுத்துட்டு வந்துருவேன்.

“என்னங்க வந்து உங்க மகனைப் பாருங்கன்னு தங்கமணி சொன்னா நம்ம தலைவன் ஏதாவது சேட்டை பண்ணிகிட்டு இருக்கனும்ன்னு புரிஞ்சுகிட்டு “என்ன பண்ணுறான் அவன், இந்தா வர்றேன்ன்னு பாத்துகிட்டு இருக்குற வேலையை அப்படியே போட்டுட்டு கிளம்பிப் போயி நம்ம சேட்டைக்காரரைப் போயிப் பார்க்கனும். அதுவே “என்னங்க வந்து என் மகனைப் பாருங்கன்னு தங்கமணி சொன்னா உடனே புரிஞ்சுக்கனும் சேட்டைக்காரர் ஏதோ நல்ல விசயம் செஞ்சுருக்காருன்னு.

இராத்திரி சாப்பாட்டு நேரம் தாண்டி வீட்டுக்கு லேட்டாப் போனா தங்கமணிகிட்ட இருந்து “ ஏன் லேட்டுன்னு கேள்வி வரும். நான் உடனே காரணம் எல்லாம் சொல்ல மாட்டேன். கை கால கழுவிட்டு அடுப்படியிலே போயி என்ன இருக்கோ அள்ளி வயித்துல போட்டுகிட்டு அப்படியே தட்டெல்லாம் கழுவி வச்சிட்டு “ஏம்மா சோத்துல தண்ணி ஊத்திரவான்னு கேட்பேன். ஒரு மெளனம் பதிலா கிடைக்கும். அதையே சம்மதமா எடுத்துகிட்டு சோத்துல தண்ணியை ஊத்திட்டு படுத்துடுவேன்.

அப்புறம் ரொம்ப முக்கியமான கேள்வி தங்கமணிகிட்ட இருந்து அடிக்கடி வரும். இதை மத்த கேள்விகள் மாதிரி எடை போட முடியாது. அது என்னன்னா “உங்கம்மா போன் பண்ணுனாங்களா?. “ஆமா போன் பண்ணுனாங்கன்னு சொன்னா "என்னைப்பத்தி என்னமாவது சொன்னாங்களான்னு அடுத்த கேள்வி வரும். இல்லையே அப்படி ஒன்னும் சொல்லலியேன்னு சொன்னா “என்னவோ மறைக்கிறிங்க என்கிட்ட, என்னைப்பத்தி உங்கம்மா ஏதாவது சொல்லாம இருக்க மாட்டங்களேன்னு அடுத்தடுத்து அஸ்திரமா கேள்விகள் வரும். அதுனால உங்கம்மா போன் பண்ணுனாங்களான்னு தங்கமணி கேட்டா உடனே நான் ‘ஆமாம்மா மறந்தே போயிட்டேன். எங்கம்மா உன்னைப்பத்தி கேட்டாங்க எல்லா வேலையும் ஒத்தையாளா செய்வா கூடமாட ஒத்தாசை செய்யுடான்னு சொன்னாங்கன்னு நானே எனக்கு குழி வெட்டிக்கிறுவேன். உடனே நம்ம தங்கமணி "உங்கம்மாவுக்கு இருக்கிற அக்கறை உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லையேன்னு சொல்லிட்டு சரி சரி இந்த தேங்காயை துருவுங்க சட்டினி வைக்கனும்"ன்னு சொல்லுவாங்க.

இப்படி பல கேள்விகளை எள்ளுன்னா எண்ணையா புரிஞ்சிகிட்டு பதில் சொன்னாலும், எனக்கு ஒரு கேள்வியை மட்டும் எப்படி சமாளிப்பதுன்னு இன்னும் புரியல. ஒரு வேளை இன்னும்!!! அஞ்சு வருசம் போனா அதுவும் தன்னால புரிஞ்சுடும்ன்னு நினைக்கிறேன்.அது என்னன்னா எப்ப சோறு போட்டாலும் குழம்ப ஊத்திட்டு தஙக மணி கேட்கிற கேள்வி “ என்னங்க குழம்பு எப்படி இருக்கு பெரும்பாலும் நான் இந்த கேள்விக்கு வாயில சோத்தோட கண்ணுல தண்ணியோட (காரத்தினால் அல்ல) மண்டைய மேலும் கீழும் ஆட்டுவேன்.

அப்புறம் மேலே உள்ள சிங்கப்படத்துக்கும் இந்த பதிவுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லைங்கோ.....


8 கருத்துகள்:

வலைபின்னுபவர் சொன்னது…

Gr8...

பெயரில்லா சொன்னது…

iyaa 12 varusam aana enakkee innum theriyala

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க வலைபின்னுபவர் (நல்ல பெயரா இருக்கே) உங்கள் முதல் வருகைக்கு நன்றி வாங்க அனானி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

அனு சொன்னது…

க.க.க.போ!!!!! :)

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க அனு உங்க வருகைக்கும் கருத்துக்கும் (அது என்ன க.க.க.போ!!!!! :)மிக்க நன்றி

அனு சொன்னது…

க.க.க.போ = கருத்துக்களை கச்சிதமாக கவ்வி கொண்டீர்கள் போங்கள்... (இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வரும் புகழ்பெற்ற டயலாக் அது)

வார்த்தை சொன்னது…

கலக்கல்....

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

க.க.க.போ = கருத்துக்களை கச்சிதமாக கவ்வி கொண்டீர்கள் போங்கள்... (இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வரும் புகழ்பெற்ற டயலாக் அது)
அப்படியா அனு மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு வாங்க வார்த்தை உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க