வெள்ளி, 31 டிசம்பர், 2010

நாலு பாட்டுத்தான் நாளைக்கு வாழ்த்துச் சொல்ல

நாளை புத்தாண்டு பிறக்கிறது.

சுழலும் ஏர் பின்னது உலகம் என்று அய்யன் கூறியது போல
தமிழ் கூறும் நல்லுலகம் திரையுலகம் பற்றிய செய்திகளையும்
படங்களையுமே காலம் காலமாக இது போன்ற நன்னாட்களில்
கண்டும் கேட்டும் வருகின்றது.

எனக்குத் தெரிந்து புத்தாண்டு பிறந்து விட்டால் நான்கு பாடல்கள்
மட்டுமே நினைவுக்கு வருகிறது. ஏன் எனில் இந்த நான்கு பாடல்கள்
எந்த புத்தாண்டு பிறந்தாலும் வானொலியிலும் தொல்லைக்காட்சியிலும்
திரும்ப திரும்ப ஒளி-ஒலி பரப்பப்படுவதினால்.

1.சங்கிலி படத்தில் அமரர் சிவாஜி கணேசனின்



"நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக
நம்மைக் காக்க
ஹேப்பி நீயு இயர்"


2. அடுத்து மிகப் பிரபலமான பாடல்

சகலா கலா வல்லவனின்


"ஹேய் எவரிபடி விஷ் யூ ஹேப்பி நீயு இயர்"


3. அடுத்து தலைமகன் படம் என்று நினைக்கிறேன்
பிரபு நடித்தது


"தங்க மகள் தேடி வந்தாள் முத்துநகை அள்ளித்தந்தாள்
வெற்றி எனை தேடி வரும் நன்னாள் இது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹே ஹே
எல்லோரும் பாடுங்கள்"


4. தல அஜித்தின் முகவ்ரி படம்


வா வா புத்தாண்டே


ஏங்கப்பா ப்ல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்கள்
தமிழ் திரையுலகில் இருந்தாலும் புத்தாண்டுக்கான
பாடல்கள் பஞ்சமே

இதைப்போக்க அனைத்து நடிகர்களும் ஆளுக்கொரு
புத்தாண்டு பாடலில் இந்த வருடம் நடிக்க வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டு மீண்டும் தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும்
WISH YOU A HAPPY NEW YEAR எனக்கூறி விடைபெறுகிறேன்.

என்னடா பச்சைத்தமிழன் ஆங்கிலத்தில் வாழ்த்து கூறுகிறேனே
என எண்ண வேண்டாம். ஏன் எனில் பிறக்க்ப்போவது ஆங்கிலப்
புத்தாண்டு. வரும் தைத்திங்கள் முதல் நாள் பிறக்கும் தமிழ்
புத்தாண்டில் தமிழில் வாழ்த்துக்கள் கூறுவோம்.

1 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

happy new year happy new year vanthathe - unnai ninaiththu

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க