வெள்ளி, 1 ஜூன், 2012

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பகுதி 1

அனில் பாப்னா என்னும் மனசக்தி ஆராய்சி நிபுணர் ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார். ஒவ்வொருவரும் தாங்கள் படிப்பதிலோ அல்லது பார்ப்பதிலோ 5 முதல் 10 சதவீதம் மட்டும்தான் ஞாபகம் வைத்திருப்பார்கள். மீதி 90 சதவீதம் படித்து முடித்த 30 நிமிட்த்தில் மறந்து விடுவார்கள் என்று. திரும்ப திரும்ப படிப்பதினாலோ அல்லது பார்ப்பதால் மட்டுமே அனைத்தையும் ஞாபகம் வைத்திருக்க முடியும் என்று.

இந்த பதிவில் நான் மனசக்தி போன்ற அரிய விடயங்களை ஆராய்சி செய்ய வரவில்லை. அந்தளவுக்கு நமக்கு விடய ஞானம் கிடையாது. நான் சொல்ல வருவது என்னவெனில் தமிழக திரை வானில் உள்ள நடிகர் ஒவ்வொருவரையும் நினைக்கும் போது என் மனதில் உடன் வரும் காட்சிகளை மட்டும் இந்த பதிவில் சொல்ல விரும்புகிறேன்.




எம்ஜியார்: எம்ஜியாரை நினைத்த்தும் எனக்கு உடனே அவர் முகத்தை கைகளில் மூடிக் கொண்டு முதுகு குலுங்க அழும் காட்சிதான் ஞாபகம் வரும். ரிக்சாக்காரன் பட்த்தில் மேஜர் சுந்தர்ராசன் எம்ஜியாரைப் பார்த்து “செல்வம் வாட் யூ திங்க் அபோட் லைப் “ என்றதும் எம்ஜியார் அதற்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வதும் அதற்கு உடனே மஞ்சுளா இருங்க இருங்க இப்ப என்ன மொழியில பேசினிங்க என்று கேட்பதும் ஞாபகம் வரும் காட்சிகள்.


சிவாஜி கணேசன்: வேறு யாரும் செய்ய முடியாத எத்தனையோ முகபாவங்கள் சிவாஜி காட்டியிருந்தாலும் எனக்குத் தெரிந்து மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் என்ற பாடலில் அன்பே அன்பே என்று பெண்குரல் ஹம்மிங்க் முடிந்த்தும் சிவாஜி உஷா ந்ந்தினியை முகத்தில் புருவங்களை மட்டும் வளைத்து நெளித்து ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் உலகத்தில் எந்த நடிகனும் அந்த முகபாவனையை காட்டமுடியாது.


ஜெமினி கணேசன்: ஜெமினி என்றதும் சாம்பார் ஞாபகம் வருவதில் யாருக்கும் சந்தேகமில்லை. எனக்கு அவரை நினைத்த்தும் எந்த வித ஹிரோயிசமும் இல்லாமல் இரண்டு வில்லன்கள் அசோகன் மனோகருக்கு இவர் வில்லனாக நடித்த வல்லவனுக்கு வல்லவன்  படம் ஞாபகம் வருகிறது.




ஜெய்சங்கர்: தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரை நினைத்த்தும் விஜய லட்சுமியுடன் அவர் நடித்த ஒரு பாடல் ஞாபகம் வருகிறது. நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் என்ற பாடலில் காற்சட்டையின் ஒரு பாக்கட்டில் கையை வைத்துக் கொண்டு இன்னொரு கையை அசைத்துக் கொண்டு நளினமாக ஒரு நடை நடந்து வருவார். மிகவும் அழகாக இருக்கும்.


முத்துராமன்: நிலவே நீ சாட்சி என்று ஒரு பாடல் உண்டு. அதில் பாதைகள் இரண்டு சந்திப்பதும் அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும் காதலில் கூட நடப்பதுண்டு அங்கு காலத்தின் தேவன் சிரிப்பது உண்டு என்னும் வரி வரும் போது கேமரா முத்துராமனை போகஸ் செய்யும் அப்போது முத்துராமன் ஒரு புண்ணகையை முத்துப் போல் சிந்துவார். மிகவும் அருமையாக இருக்கும்.


ரவிச்சந்திரன்: இன்றைய சூப்பர் ஸ்டார் சிகரட் பத்த வைப்பதற்கு முன்னோடி ரவிச்சந்திரன் தான். கார் கதவில் சிகரட் பத்த வைப்பது போல் ஒரு படம் உள்ளது. இருந்தாலும் டேப் ஒன்றை கையில் வைத்து அடித்துக் கொண்டு சீர்காழி கோவிந்தராசன் குரலில் உன் மேல கொண்ட ஆசை உத்தமியே நித்தம் உண்டு சத்தியமாக சொல்லுறேண்டி தங்க ரத்தினமே என்று ஒரு பாடல் நடித்திருப்பார். படம் ஞாபகம் இல்லை. மிகவும் அழகாக இருக்கும்.


சிவகுமார்: சின்ன சாம்பார் சிவகுமார் என்று இவரை எங்க பக்கம் அழைப்பார்கள் கதாநாயகிக்கு பிரதான வேடம் உள்ள படங்களில் உப்புக்கு சப்பானியாக ஒரு ஆண் வேடம் தேவைப்பட்டால் அனைவரது விருப்பமும் சிவகுமாரகத்தான் இருக்கும் அன்னக்கிளி ஆட்டுக்கார அலமேலு அக்னிசாட்சி என பல படங்கள் இந்த வரிசையில் அடங்கும். மீசையை பெரிதாக்கி ராமன் பரசு ராமன் என்னும் ஒரு ஆக்சன் படம் நடித்திருப்பார். நல்ல காமெடியாக இருக்கும். இருந்தாலும் சிவகுமார் பசும்பொன் பட்த்தில் ராதிகா என் பையன் தங்கபாண்டி என் சொல்லும் போது சிவகுமார் முகத்தில் நவரசமும் கொண்டு வந்து நம்ம பையன் தங்கபாண்டி என் சொல்லுவார் நான் மிகவும் ரசித்த முக பாவனை 
.



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க