தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 மே, 2013

நூறாண்டுகளைத் தாண்டியும் வலிமையுடம் இருக்கும் பாம்பன் பாலம்



பொறியியல் துறையின் அதிசயமாக கருதப்படும் இந்தியாவின் முதல் தூக்குப் பாலமான பாம்பன் இருப்புப்பாதைப் பாலம் பெப்ரவரி 24 2013 அன்று நூறாண்டுகளைத் தாண்டி பொலிவுடன் இருக்கிறது.

2.06 கி மீ நீளமுள்ள இந்தப் பாலம் மும்பையின் பாந்தரா வொர்லி கடல் பாலத்துக்கு அடுத்து இந்தியாவின் மிக நீண்ட கடலில் கட்டப் பட்ட பாலமாகும்.1914ல் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்ட இந்த பாலம் இந்தியாவின் மிக முக்கியமான வழிபாட்டுத்தலமான இராமேஸ்வரம் தீவினை நிலப்பகுதியுடன் இணைக்கிறது.

அமெரிக்காவின் மெக்சிகோ நகரத்துக்கு அடுத்து உலகின் அதிகமான துருப்பிடிக்கும் பகுதியான இராமேஸ்வரத்தில் கட்டப்பட்ட இந்த இரும்பு பாலம் பலவித சவால்களுக்கு இடையே கட்டப்பட்டது. 1964ல் புயலால் பாதிக்கப்பட்டும் இந்தப் பாலம் நூறாண்டுகளைத் தாண்டியிருப்பது இதன் சிறப்பம்சம்.

இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய நிறுவனம் தங்கள் வாணிப விருத்திக்காக இந்தியாவையும் இலங்கையையும் இருப்புப்பாதை வழியே இணைக்க கி பி 1870ம் ஆண்டு பாலம் கட்ட எண்ணினர்.

இதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்த பின்னர் இந்தோ சிலோன் திட்டம் என்னும் பெயரில் மண்டபத்திலிருந்து இராமேஸ்வரம் பின்னர் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை இருப்புபாதை கடலிலேயே கட்ட திட்டம் தயார் செய்து ரூ 299 லட்சம் செலவில் ஒரு திட்டத்தினை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். திட்டத்தின் அதிகபட்ச செலவு கருதி இதை நிராகரித்த இங்கிலாந்து பாராளுமன்றம் ரூ 70 லட்சம் செலவில் மண்டபத்திலிருந்து இராமேஸ்வரம் வரையான பாலம் கட்ட 1880ல் ஒப்புதல் வழங்கினர்.

1902ல் இந்திய ரயில்வே கட்டுமானப் பணிகளை துவங்கியது. குஜராத்தில் இந்த வேலைக்கென அனுபவம் வாய்ந்த குரை என்னும் குடும்பத்தினர் இதற்காக பிரத்தியோகமாக வரவழைக்கப் பட்டனர். இவர்கள் ஹிமாலயன் ரயிவேயில் வேலைப் பார்த்த அனுபவம் கொண்டவர்கள். இரும்புச்சட்டங்கள் இங்கிலாந்திலிருந்து கொண்டு வரப்பட்டது. மொத்தம் 141 தூண்களை கொண்ட இந்த திட்டம் 112ம் தூணைக் கட்டும் வரை அமைதியாக சென்றது அதன் பின்னர் இந்த திட்டம்  ஒரு பிரச்சினையை சந்தித்தது.

112ம் தூணுக்கு அந்தப் பக்கம் 65.23 மீட்டர் தூரத்தில் பாக் ஜலசந்தியில் பாம்பார் எனும் சிறு கப்பலுக்கான ஒரு வழி இருந்து வந்தது. பாலம் கட்டுவதால் அந்த வழி அடைபடுவதை பொறியாளர்கள் விரும்ப வில்லை. எனவே பாலமும் கட்ட வேண்டும். அதே நேரத்தில் கப்பலுக்கான வழியும் அடைபடக்கூடாது என எண்ணிய பொறியாளர்கள் இதற்கான வழியை ஆராய்ந்தனர்.

இந்த நேரத்தில் ரயில்வே பொறியாளர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த செர்ஷர் என்னும் பொறியாளரை அனுகினர். அவரும் கத்திரி வடிவத்தில் உருளும் வகை தூக்குப் பாலத்தினை வடிவமைத்துக் கொடுத்தார். 1913ல் இது நிறுவப்பட்டு பெப்ரவரி 24ம்தேதி 1914ல் மக்கள் பயன்பாட்டுக்காக பாம்பன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த தூக்குப்பாலத்தின் வலிமை டிசம்பர் 1964 அன்று உலகுக்கு தெரியும் வண்ணம் மிகப் பெரிய புயலினால் அந்தப் பகுதி தாக்கப் பட்டது. பாலத்துக்கு அந்தப் பக்கம் தனுஷ்கோடி என்ற ஊரே அழிந்தது. பாலத்தின் 141 தூண்களில் 2 தூண்கள் பாலத்தின் கிர்டர் எனப்படும் இரும்பு உத்திரங்கள் புயலில் பெரும் சேதமடைந்தன. ஆனால் செர்ஷர் வடிவமைத்த தூக்குப் பாலம் எந்தவித சேதமும் அடையவில்லை.இயற்கையின் சீற்றத்தினை அது எளிமையாக எதிர் கொண்டது.

இந்த முறை இந்திய பொறியாளார்கள் தங்களது தனித்திறமையினை வெளிப்படுத்தி உதவிப் பொறியாளர் ஆர்.சிரிதரன் (பின்னர் மெட்ரோ ஷ்ரீதரன் என அறியப்பட்டவர்) தலமையிலான ஒரு குழு ஐந்தே மாதங்களில் பாலத்தினை சரிசெய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு பாலத்தினை சீரமைத்து தந்தனர்.

2006ல் இந்திய ரயில்வே நாடு முழுவதும் மீட்டர் கேஜ் பாதைகளை மாற்றி அகலப்பாதையாக மாற்றும் வேளையில் இந்தப் பாலத்தினை பயன்படுத்தாமல் புதுப் பாலம் கட்ட இந்திய ரயில்வே கருதியது. ஆனால் அதற்கான பட்ஜெட் தொகை 700 கோடி ரூபாய்க்கும் மேல் தாண்டும் என்பதால் பாலத்தினை வலுவேற்ற அரசு முடிவு செய்தது.

பாலம் இருக்கும் ராமேஷ்வரம் தீவில் பிறந்தவரான நாட்டின் முதல் குடிமகன் திரு அப்துல் கலாம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஐஐடி சென்னையினை சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் பாலம் வலிமையூட்டப்பட்டு 2007ல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
 

2009ல் மேலும் வலுவூட்டப்பட்டு சரக்கு ரயில்களுக்காகவும் பாலம் தயாரானது. 2013ல் சிறிய கப்பல் ஒன்று மோதியதால் இந்தப் பாலத்தின் 121வது தூண் சிதிலமடைந்தது. உடனே சரி செய்யப் பட்டு பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.இப்படி பல்வேறு சோதனைகளை கடந்தும் பாலம் நூறாண்டுகளைத் தாண்டியும் வலிமையுடன் விளங்குகிறது.

(நன்றி: தி ஹிந்து ஆங்கிலப் பத்திரிக்கை)




புதன், 9 பிப்ரவரி, 2011

வேண்டுமா தனித்தமிழ்நாடு? - எதிர் பதிவு

மூன்று நாட்களுக்கு முன்னர் நண்பர் சிவகாசிக்காரன் ராமு அவர்கள் வேண்டுமா தனித்தமிழ்நாடு என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தார். படித்தவுடனேயே எதிர் பதிவு இடலாம் என நினைத்தேன். வேலைப்பளுவினால் முடியவில்லை.ஏதோ இந்தியாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பதால்தான் தமிழ்நாட்டுக்கு ஒரு பாதுகாப்பு என்பது போல அவரது கருத்து இருந்தது.மிகவும் வேதனை தரக்கூடிய விசயம் அது. இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டு இருப்பதில் எவ்வளவு நண்மை உண்டோ அதை விட 100 மடங்கு நண்மை அதை விட்டு பிரிந்து தனிநாடாகிவிட்டால் கிடைக்கும் என்பதே எனது கருத்து. இதோ அவரது கேள்விகளுக்கான பதில்.

1. சமஉரிமையோடு இருக்கும் வாய்ப்பை எல்லாம் விடுத்து தனிநாடு தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் தான் நம் இனம் அழிந்தது இங்கு மிக அருகில். கிட்டத்தட்ட நம் தமிழகத்திற்கும் இதே நிலைமை வரவேண்டுமா?

ஆரம்பமே சரியில்லையே, இலங்கையில் சிங்களவருக்கு இணையான சம உரிமை வழங்கப்பட்டிருந்தால் ஏன் விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கப் போகிறார்கள். எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.இந்த வடக்கத்தி மாநிலங்களுக்கு வழங்கப்படும் உரிமை தமிழனுக்கு வழங்கப்படுகிறதா? அப்படி இருந்தால் இலங்கையில் நம் இனத்தையே கொண்று கூறுபோட இந்த இந்திய அரசாங்கம் உறுதுனையாய் இருந்திருக்குமா? இல்லை தினமும் நடுக்கடலில் காக்காய் குருவிபோல் சுடப்பட்டு சாகிறானே அப்பாவித் தமிழன். அதை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்தார்களா?

2. உங்களுக்கு யாரை தலைவனாக தேர்ந்து எடுப்பீர்கள்? இப்போது இருப்பவர்களில் யாருக்காவது அதற்கான தகுதி இருப்பதாய் நினைக்கிறீர்களா?

நீங்கள் இப்பொதுள்ள கருணாநிதி ஜெயல்லிதா விசயகாந்து போன்ற சினிமா கூத்தாடிகளை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார்கள். ஆறு கோடி மக்களில் தமிழனை ஆளுவதற்கு சினிமா உலகத்திலேயே ஆளைத் தேடிக் கொண்டிருந்தால் இப்படித்தான். ஏன் அய்யா அப்துல கலாம் இல்லையா. இல்லையெனில் எனக்குத் தெரிந்து நல்லகண்ணு போன்ற எளிமையான தலைவர்கள் நாட்டை ஆளக்கூடாதா? முதலில் சினிமாக் கவர்சியிலிருந்து தமிழகம் விடுபட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

3. நீங்கள் நினைப்பது போல் தனி தமிழ்நாடு கிடைத்ததும், அருகில் இலங்கையில் முகாம் இட்டிருக்கும் சீன மற்றும் பாகிஸ்தான் இராணுவம் லைட்டா ஒரு குண்டு வீசினால், நீங்கள் பிறிந்து வந்த இந்தியாவிடமே மீண்டும் போய் கையேந்துவீர்களா?

ஏன் அதீதமாக கற்பனை செய்கிறீர்கள். தனியாக பிரிந்து வந்து விட்டபின் நாம் இந்தியா மீது குண்டு போடாமல் இருந்தால் சரிதான். எதிரிக்கு எதிரி நண்பன் என்று கேள்விப்பட்டதில்லையா?

4. ஒரே நாடாக இருக்கும் போதே இந்த கேரளம் ஆந்திரம் கர்னாடகா காரன் எல்லாம் நீர் குடுக்கமாட்றான். தனி நாடாக மாறிவிட்டால் நீர் பீரிட்டு வந்துவிடுமோ?!

நம்மிடம் இருக்கும் மின் வளத்தினை இந்த மாநிலங்களுக்கு நாம் கூறு போடவில்லையா? தண்ணீரைக் கொடுத்தால் மின்சாரம் கொடுப்போம். கேரளாக் காரனுக்கு மீனிலிருந்து அரிசி வைக்கோல் வரை தமிழகத்தில் இருந்துதான் போகிறது அதை நிறுத்தினால் தன்னால் வழிக்கு வரப் போகிறான்கள்.

5. பெங்களூருவிலும், ஹைதராபாத்திலும் இன்னும் பிற வெளிமாநிலங்களிலும் படிக்கும், வேலை பார்க்கும் தமிழருக்கெல்லாம் இலவச விசா வாங்கிக்கொடுப்பீர்களா? அல்லது, அவர்களை அங்கிருந்து பத்திவிட்டால் அவர்களுக்கு அதே தரமான படிப்பையும், அதே வேலைவாய்ப்பையும் இங்கே ஏற்படுத்திகொடுப்பீர்களா?

ஏன் கொடுக்க முடியாது. சென்னையில் எத்தனை தெலுங்கர்கள் உள்ளனர். எத்தனை மார்வாடிகள் உள்ளனர் இப்படி தமிழ்நாடு முழுவதும் பிற மாநிலத்தவர்கள் பிழைக்க வில்லையா அவர்களை பத்திவிட்டு அவர்கள் பார்க்கும் வேலையை வெளியில் பிழைக்கும் நம்மவர்கள் தமிழ்நாடு வந்தால் கொடுக்க வேண்டியதுதான். ராஜ்தாக்கரே மகராஷ்டிராவில் செய்த்து இதுதான்.

6. இங்கே வேலை செய்யும் பிற மாநிலத்தவற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

மேலே உள்ள கேள்வியிலேயே இதற்கு பதில் உள்ளது.

7. வருஷத்துக்கு ஒரு தடவையாவது சபரிமலை, திருப்பதி என்று நினைத்தவுடன் சாதாரணமாக செல்லும் மக்களுக்கு அண்டை நாடுகளான கேரளம் ஆந்திரத்தோடு என்ன மாதிரி உடன்படிக்கை போட்டு அனுப்புவீர்கள்?

உள்ளூரிலேயே முருகன் கோவிலுக்கு போங்கள் என்று அனுப்ப வேண்டியதுதான். அய்யப்பன் முருகனின் தம்பிதானே, திருப்பதி பெருமாள் முருகனின் மாமனார்தான். டி.எம்.எஸ் படித்த பாடல் போல் கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்கியதுபோல்தான்.

8.ஏற்கனவே பெட்ரோலுக்கு யானை விலை இருக்கிறது. இந்த நிலையில் அதை நீங்கல் இறக்குமதி செய்து மலிவி விலைக்கு விற்று, நினைக்கவே பயமாக இருக்கிறது.

இந்திய அரசாங்கம் இறக்குமதி செய்துதானே விற்கிறது. அதுபோல் நாமும் செய்துகொள்ள வேண்டியதுதான்.

9. வெளிநாடுகளில் (குஜராத், மராட்டியம், உத்திரபிரதேசம் போன்றவை) இருந்து வரும் வியாபாரிகள் கோவை திருப்பூரில் துணியையும், ராஜபாளையத்தில் நூலையும், சிவகாசியில் பட்டாசையும் வாங்க வருவார்களா? இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்கு வரி வேறு இருக்குமே?!

சிங்கப்பூர் நாடு நம் தமிழ்நாட்டைவிட பரப்பளவில் சிறியதுதான். ஆனாலும் வணிகம் செய்து லாபம் ஈட்டவில்லையா. மத்திய அரசுக்கு போகும் வரிவருவாய் தனிதமிழ்நாடாகிவிட்டால் குறையும் அல்லவா அதை வைத்து சமாளித்துக் கொள்ளவேண்டியதுதான்.

10. தினமும் 'சர், சர்' என்று செல்லும் பைக் இறக்குமதி செய்து தான் விற்கவேண்டும். எல்லாமே இறக்குமதி தான்.. ஏற்றுமதி மிகவும் கம்மி தான்.

இருங்காட்டுக்கோட்டையிலும் இன்ன பிற நகரங்களிலும் கொரியா கம்பெனிகளும் மற்ற கம்பெனிகளும் கார் தயாரிக்கவில்லையா. அதுபோல் ஹோண்டா சுசுகி நிறுவன்ங்களோடு ஒப்பந்தம் போட்டால் போயிற்று.

11. தெலுங்கு சினிமாவையோ மலயாள சினிமாவையோ காப்பி அடித்து காப்பிரைட்ஸ் வழக்குவந்தால், முந்தைய நாள் பணத்தை செட்டில் செய்து படத்தை ரிலீஸ் செய்து தப்பிக்க இயலாது. அந்த நாட்டில் கழி திண்ண வேண்டியது தான்.

நாடு தனியாக வந்தவுடன் சினிமா படம் எடுப்பதையே நிறுத்திவிட்டால் இந்த மாதிரி பிரச்சினைகள் வரவே வராது. தமிழ்நாடு கெட்டு குட்டிச்சுவராய் போனது சினிமாவால்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

12. தமிழக கிரிக்கெட் அணி இந்திய அணியோடு சேப்பாக்கத்தில் மோதும்.

பெர்னாட்ஷ சொன்னது போல் பதினோரு முட்டாள்கள் விளையாடுவதை பத்தாயிரம் முட்டாள்கள் பார்க்கின்றனர். இந்த கிரிக்கெட்டு ஆடுவதை பார்க்காவிட்டால் தமிழன் செத்துப் போய் விடுவானா? சேப்பாக்க்கம் கிரவுண்டையெல்லாம் கபடி மைதானம் ஆக்கிவிட வேண்டியதுதான்.

13. அப்படி விளையாடும் கிரிகெட்டையும் நீங்கள் எந்த தொலைக்காட்சியில் பார்ப்பீர்கள்? Sony, Ten Cricket, Star Sports, ESPN எதில் பார்ப்பீர்கள்? இதெல்லாம் தெரியுமா? ஒரு வேளை sun cricket என்று எதாவது சேனல் வரலாம்.

கேள்வியிலேயே பதில் இருப்பதால் இதற்கு பதில் சொல்ல தேவையில்லை.

14. கேரளாத்தில் இருந்து கொட்டப்படும் கழிவுகளையும், ஆந்திர நக்ஸல்களையும் கர்னாடக அத்துமீறல்களையும் என்ன செய்துவிட முடியும்?

இந்தியாவுடன் ஒட்டி இருப்பதால்தானே இந்த அவலம். தனிநாடாகிவிட்டால் கொஞ்சம் மலையாளிகளுக்கும் தெலுங்கர்களுக்கும் கன்னடர்களுக்கும் பின்ன பிற வடக்கத்தி ஹிந்தி வெறியர்களுக்கும் பயம் வருவதுபோல் நடந்துகொள்ள வேண்டியதுதான்.

15. மத்திய மந்திரி சபையில் இருக்கும் தமிழக அமைச்சர்களை என்ன செய்வீர்கள்? கஷ்ட்டப்பட்டு பெற்ற பதவி அல்லவா?

அவர்களையெல்லாம் செக்கிழுக்க வைத்து அவர்கள் சுரண்டி சம்பாதித்த பணத்தை வைத்து நாலு வருட்த்துக்கு பட்ஜெட் போடவேண்டியதுதான்.

16. தமிழகத்துக்குள் இருக்கும் ரயில் பாதைகளையும் நான்கு வழிப்பாதைகளையும் அவர்கள் இடிக்க சொன்னால் என்ன செய்வீர்கள்?

இடிக்க சொன்னால் எடுத்துக் கொடுத்துவிட்டு புதிதாக போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

17. மத்திய அரசில் வேளை செய்யும் தமிழக ஓழியர்களின் நிலை என்ன?

ஒரு நாடு புதிதாக உருவானால் புதிதாக பல அலுவலகங்கள் கண்டிப்பாக தேவைப்படும் மத்திய அரசில் வேலைப் பார்க்கும் தமிழர்களை எல்லாம் நம் அரசாஙக ஊழியர்கள் ஆக்கி விட வேண்டியதுதான்.

18. விலை மலிவாக இருக்கிறதே என்று நினைத்து வாங்கிப்படிக்கும் deccan chronicle, economic times போன்ற தமிழகத்தில் அச்சகம் இல்லாத பத்திரிகைகள் எல்லாம் படிக்க முடியுமா?

ஆங்கிலம் என்பது ஒரு மொழியல்ல அந்த மொழியில் பேசினால்தான் அறிவாளி என்று நினைக்கும் ஏமாளித் தமிழர்களுக்குத்தான் இது போன்ற பத்திரிக்கைகள் தேவைப்படும். பேப்பருக்கு ஆங்கில அரசு தடை விதித்த காலணி ஆதிக்க நாட்களிலேயே பழைய பேப்பரை அரைத்து தினத்தந்தி பத்திரிகையை வெளியீடு செய்த ஆதித்தனார் தமிழன் என்பதை மறந்து விடக்கூடாது

19. NDTV, AajTak போன்ற டிவிக்களை பார்த்து அறிவாளிகளாக சீன் போடமுடியுமா?

மேலே சொன்ன பதில்தான் இதற்கும் ஆங்கிலம் என்பது மொழிதான் அறிவல்ல.

20. ஆசையாக வீடு கட்டி அழகுபடுத்த கடப்பா கல், டைல்ஸ், மொசைக், கிரானைட் போன்றவைகள் வானத்தில் இருந்து நேராக வந்துவிடுமா?

வீடு கட்ட செங்கலும் சிமிண்டும்தான் முக்கியம். மானாமதுரை மஞ்சூர்போன்ற ஊர்களுக்கு வந்து பார்த்தால் தெரியும். சவுதி போன்ற பாலைவனத்தில் கடப்பாவும் டைல்சும் விளைகிறதா என்ன. ஆனால் மார்பிளோ கிரானைட்டோ இல்லாமல் இங்கே வீடு இல்லவே இல்லை. எல்லாம் இறக்குமதிதான். மேலும் ஒரு வீடு கட்டுவதற்கு அத்தியாவசியமான பொருட்கள் இவை இல்லை. இவை எல்லாம் ஆடம்பரம் மட்டுமே. கூந்தலிருக்கிறவன் அள்ளி முடிந்து போகட்டும்.

21. அட, எல்லாத்தையும் விடுங்க, என் உண்மையான கவலை எல்லாம் ஒவ்வொரு படத்திலும் அழகழகாக பிற நாட்டு அழகியை நடிக்கவைக்க முடியுமாய்யா உங்களால? இப்போ பாருங்க ஈசியா கேரளா ஃபிகரு, பாம்பே ஃபிகரு எல்லாம் வருது. அதெல்லாம் நடக்காம போயிருமேங்கிறது தான் என் உண்மையான ஆதங்கம்

11ம் கேள்விக்கான பதிலை திரும்ப படிக்கவும்.