இவன் பச்சைத் தமிழன்
எப்போதேல்லாம் அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ (ஏப்ரல் இறுதி சுறா ரிலீஸ் )
அதை அடக்க பக்வான் உடனே அவதரிப்பார். (மே முதல் தேதி தலையோட பிறந்த நாள்)
வணக்கம் நண்பர்களே................1.விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை.
கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்
"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"
-------------------------------------------------------------------
2. ஒருவர்: விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
3.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்
நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.
-------------------------------------------------------------------
4.பிகர் கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களே
ஒரு நாள் வரும்
அப்ப ஒரு பொண்ணு உன்னை
ரொம்பவும் லவ் பண்ணி
உன்னை அப்படியே கட்டிப் பிடிச்சு
கிஸ் பண்ணிக்கிட்டே சொல்லுவா.....
"ஐ லவ் யூ டாடி"
----------------------------------------------------------
5.பாகிஸ்தானில் இப்போது பிரபலமான SMS
சானியா மிர்சா நிராகரித்தது ஒட்டுமொத்த இந்தியரையும்!!!!!
-------------------------------------------------------------------------
6.தமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு.
அட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க........
--------------------------------------------------------------
7.கடைசியா ஒரு தத்துவம்
இன்னைக்கு வைக்கிற மீனு நாளைக்கு கருவாடா ஆகும் ஆனா
இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டு குழம்பாகுமா?....
-------------------------------------------------------

ஒருநாள் பஞ்சாயத்து அலுவலகத்தில குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம் செய்யனும்னு ஒரு கூட்டம் போட்டாங்க. அதுல பஞ்சாயத்து தலைவர் என்கிற முறையில தலைவர கூப்பிட்டு பேச சொன்னாங்க.
தலை(வர்) எந்திருச்சு மைக்க புடிச்சாரு
'எல்லோருக்கும் ஒரு இதுவான வணக்கம். அதைப் பத்தி பேசுறதுக்கு ஒரு இதுவா என்னைக் கூப்பிட்டாங்க. அதைப் பத்தி நான் சொல்லுறதுக்கு ஒரு இதுவும் இல்லை. அது என்னனா நம்ம நாட்டுல அது ரொம்ப பெருகிட்டதால எல்லோருக்கும் ஒரு இது தேவைப்படுது. எல்லோரும் அதப் பண்ணிக்கிட்டாத்தான் நம்ம நாடு ஒரு இதுவா மாற முடியும். அதுனால எல்லார் வீட்டுலயும் கண்டிப்பா இத பண்ணிக்கனும்.இத ரொம்ப தாழ்மையோட ஒரு இதுவா சொல்லிக்கிறேன். மறுபடியும் எல்லோருக்கும் ஒரு இதுவான வணக்கம்"
என்னங்க கதை ஒகேவா?
அது.......