மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஜூன், 2012

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பகுதி 1

அனில் பாப்னா என்னும் மனசக்தி ஆராய்சி நிபுணர் ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார். ஒவ்வொருவரும் தாங்கள் படிப்பதிலோ அல்லது பார்ப்பதிலோ 5 முதல் 10 சதவீதம் மட்டும்தான் ஞாபகம் வைத்திருப்பார்கள். மீதி 90 சதவீதம் படித்து முடித்த 30 நிமிட்த்தில் மறந்து விடுவார்கள் என்று. திரும்ப திரும்ப படிப்பதினாலோ அல்லது பார்ப்பதால் மட்டுமே அனைத்தையும் ஞாபகம் வைத்திருக்க முடியும் என்று.

இந்த பதிவில் நான் மனசக்தி போன்ற அரிய விடயங்களை ஆராய்சி செய்ய வரவில்லை. அந்தளவுக்கு நமக்கு விடய ஞானம் கிடையாது. நான் சொல்ல வருவது என்னவெனில் தமிழக திரை வானில் உள்ள நடிகர் ஒவ்வொருவரையும் நினைக்கும் போது என் மனதில் உடன் வரும் காட்சிகளை மட்டும் இந்த பதிவில் சொல்ல விரும்புகிறேன்.




எம்ஜியார்: எம்ஜியாரை நினைத்த்தும் எனக்கு உடனே அவர் முகத்தை கைகளில் மூடிக் கொண்டு முதுகு குலுங்க அழும் காட்சிதான் ஞாபகம் வரும். ரிக்சாக்காரன் பட்த்தில் மேஜர் சுந்தர்ராசன் எம்ஜியாரைப் பார்த்து “செல்வம் வாட் யூ திங்க் அபோட் லைப் “ என்றதும் எம்ஜியார் அதற்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வதும் அதற்கு உடனே மஞ்சுளா இருங்க இருங்க இப்ப என்ன மொழியில பேசினிங்க என்று கேட்பதும் ஞாபகம் வரும் காட்சிகள்.


சிவாஜி கணேசன்: வேறு யாரும் செய்ய முடியாத எத்தனையோ முகபாவங்கள் சிவாஜி காட்டியிருந்தாலும் எனக்குத் தெரிந்து மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் என்ற பாடலில் அன்பே அன்பே என்று பெண்குரல் ஹம்மிங்க் முடிந்த்தும் சிவாஜி உஷா ந்ந்தினியை முகத்தில் புருவங்களை மட்டும் வளைத்து நெளித்து ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் உலகத்தில் எந்த நடிகனும் அந்த முகபாவனையை காட்டமுடியாது.


ஜெமினி கணேசன்: ஜெமினி என்றதும் சாம்பார் ஞாபகம் வருவதில் யாருக்கும் சந்தேகமில்லை. எனக்கு அவரை நினைத்த்தும் எந்த வித ஹிரோயிசமும் இல்லாமல் இரண்டு வில்லன்கள் அசோகன் மனோகருக்கு இவர் வில்லனாக நடித்த வல்லவனுக்கு வல்லவன்  படம் ஞாபகம் வருகிறது.




ஜெய்சங்கர்: தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரை நினைத்த்தும் விஜய லட்சுமியுடன் அவர் நடித்த ஒரு பாடல் ஞாபகம் வருகிறது. நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் என்ற பாடலில் காற்சட்டையின் ஒரு பாக்கட்டில் கையை வைத்துக் கொண்டு இன்னொரு கையை அசைத்துக் கொண்டு நளினமாக ஒரு நடை நடந்து வருவார். மிகவும் அழகாக இருக்கும்.


முத்துராமன்: நிலவே நீ சாட்சி என்று ஒரு பாடல் உண்டு. அதில் பாதைகள் இரண்டு சந்திப்பதும் அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும் காதலில் கூட நடப்பதுண்டு அங்கு காலத்தின் தேவன் சிரிப்பது உண்டு என்னும் வரி வரும் போது கேமரா முத்துராமனை போகஸ் செய்யும் அப்போது முத்துராமன் ஒரு புண்ணகையை முத்துப் போல் சிந்துவார். மிகவும் அருமையாக இருக்கும்.


ரவிச்சந்திரன்: இன்றைய சூப்பர் ஸ்டார் சிகரட் பத்த வைப்பதற்கு முன்னோடி ரவிச்சந்திரன் தான். கார் கதவில் சிகரட் பத்த வைப்பது போல் ஒரு படம் உள்ளது. இருந்தாலும் டேப் ஒன்றை கையில் வைத்து அடித்துக் கொண்டு சீர்காழி கோவிந்தராசன் குரலில் உன் மேல கொண்ட ஆசை உத்தமியே நித்தம் உண்டு சத்தியமாக சொல்லுறேண்டி தங்க ரத்தினமே என்று ஒரு பாடல் நடித்திருப்பார். படம் ஞாபகம் இல்லை. மிகவும் அழகாக இருக்கும்.


சிவகுமார்: சின்ன சாம்பார் சிவகுமார் என்று இவரை எங்க பக்கம் அழைப்பார்கள் கதாநாயகிக்கு பிரதான வேடம் உள்ள படங்களில் உப்புக்கு சப்பானியாக ஒரு ஆண் வேடம் தேவைப்பட்டால் அனைவரது விருப்பமும் சிவகுமாரகத்தான் இருக்கும் அன்னக்கிளி ஆட்டுக்கார அலமேலு அக்னிசாட்சி என பல படங்கள் இந்த வரிசையில் அடங்கும். மீசையை பெரிதாக்கி ராமன் பரசு ராமன் என்னும் ஒரு ஆக்சன் படம் நடித்திருப்பார். நல்ல காமெடியாக இருக்கும். இருந்தாலும் சிவகுமார் பசும்பொன் பட்த்தில் ராதிகா என் பையன் தங்கபாண்டி என் சொல்லும் போது சிவகுமார் முகத்தில் நவரசமும் கொண்டு வந்து நம்ம பையன் தங்கபாண்டி என் சொல்லுவார் நான் மிகவும் ரசித்த முக பாவனை 
.



 

புதன், 12 மே, 2010

S M S மொக்கைகள்- 6

கடந்த மொக்கைகளில் விஜய் பற்றி எழுதி நிறைய வாங்கி கட்டி கொண்டேன் அதனால் இந்த பதிவில் பொதுவான மொக்கைகள் பற்றி எழுதுகிறேன் . இதுவும் நண்பர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்திகளாக வந்ததுதான் இதை அனுப்பிய சவூதி நண்பர் கார்த்திக்கு என் நன்றி.



1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..

“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க பிதாஜி....

----------------------------------------------------------------


2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...

மாணவர்கள்: புரியல சார்...

------------------------------------------------


3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?

டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

-------------------------------------------------------------------


4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.

அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

-----------------------------------------------------------------------
5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.

மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)

கணவன்: அது ஒரு இறந்த காலம்....

-----------------------------------------------------------
6) மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..காசு இருந்தா “Call” பண்ணுங்க..இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....

--------------------------------------------------------------------------
7) தேர்வு அறையில்...மாணவன்: ஆல் தி பெஸ்ட்!

மாணவி: ஆல் தி பெஸ்ட்!

மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....

(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

--------------------------------------------------------------------
8) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?

பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..

நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

---------------------------------------------------
9) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...

முடியும் என்று சொல்பவன்தான் புத்திசாலி...

இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

---------------------------------------------------------------
10) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?

லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...

எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?

-----------------------------------------------------------------
11) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்...
அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

-------------------------------------------------
12) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க..

நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்...

ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....

ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....

நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....

ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

----------------------------------------------------------------
13) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...

“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

----------------------------------------------------
14) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?

* நான் ஆபிசுக்கு லேட்’டா வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடத்தான் வருவேன்...

* J to the A to the V to the A --- JAVA* கண்ணா...

வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.

* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

* நான் பாக்குறதுக்குதான் ஹார்ட்வேர் மாதிரி.. ஆனா என் மனசு சாப்ட்வேர் மாதிரி...

-------------------------------------------------------
15) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)

1. படிப்பு

2. விளையாட்டு

3. பொழுது போக்கு


4. காதல்

5.

6.

7.

ஹலோ... என்ன தேடுறீங்க?

காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!
----------------------------------------------

புதன், 28 ஏப்ரல், 2010

இவன் பச்சை தமிழன்

சென்ற பதிவில் இளைய தளபதி பச்சை தமிழன் விஜய் அவர்களைப் பற்றி ஒரு மொக்கை எழுதியிருந்தேன். பதிவின் ஆரம்பத்திலேயே இப்படி குறிப்பிட்டு இருந்தேன்.

//மொக்கை போட்டு ரொம்ப நாளாகி விட்டதால் இந்த மொக்கைப் பதிவை இடுகிறேன். வழக்கம் போல் இந்த மொக்கைகளுக்கும் நாயகன் நமது இளைய தளபதி விஜய்தான். விஜய் ரசிக கண்மணிகள் மன்னிக்கவும்.ஏன் எனில் இது என் சொந்த கற்பனை அல்ல எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.//

ஆனாலும் எனக்கு பின்னுட்டம் இட்டிருந்த மோகன் என்னும் ஒரு நண்பர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இப்படி பின்னுட்டம் இட்டிருந்தார்.

//ஏன்டா பரதேசி.உனக்கு விஜய் ஐ பத்தி நினைக்கலன்னா தூக்கமேவராதா?அவன் படம் புடிக்கலன்னாமூடிகிட்டு இருக்க வேண்டியது தானே.அத விட்டுட்டு ஓவரா சலம்பிக்கிட்டு இருக்க.எனக்கும் விஜையை பிடிக்காதுதான்.நான் கம்முனு இருக்கேனில்ல. அது மாதிரி மூடிக்கிட்டு இரு. தமிழனாம் தமிழன்.நீ தமிழனா இருந்தா விஜையை பத்தி எந்த பதிவும் போடக்கூடாது. மீறி பதிவு வந்துச்சி...?இங்க பதிவு பன்ற வார்த்தையே வேற..புரிஞ்சதா??
மோகன்//

அண்ணா மோகன் அண்ணா உங்க மனச புண் படுத்திஇருந்தா மன்னிச்சுங்க அண்ணா .
எனக்கு வந்த மொக்கைகளை மற்றவரும் படித்து சிரிக்கட்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதினேனே தவிர யாரையும் புண் படுத்தும் நோக்கம் எனக்கு துளி கூட கிடையாது.

உங்க புண் பட்ட மனதை ஆறுதல் செய்ய இதோ ஒரு மொக்கை மட்டும் . படித்து உங்க மனச தேத்திக்கோங்கண்ணா. இதுவும் எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.என் சொந்த கற்பனை அல்ல


-------------------------------------------------------------------------------


மொக்கை


எப்போதேல்லாம் அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ அதை அடக்க பக்வான் உடனே அவதரிப்பார்.


இது கீதை


எப்போதேல்லாம் அதர்மம் தலை தூக்கி நிற்கிறதோ (ஏப்ரல் இறுதி சுறா ரிலீஸ் )

அதை அடக்க பக்வான் உடனே அவதரிப்பார். (மே முதல் தேதி தலையோட பிறந்த நாள்)
இது மொக்கை மட்டுமே

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

S M S மொக்கைகள் - 5

வணக்கம் நண்பர்களே................
மொக்கை போட்டு ரொம்ப நாளாகி விட்டதால் இந்த மொக்கைப் பதிவை இடுகிறேன். வழக்கம் போல் இந்த மொக்கைகளுக்கும் நாயகன் நமது இளைய தளபதி விஜய்தான். விஜய் ரசிக கண்மணிகள் மன்னிக்கவும்.ஏன் எனில் இது என் சொந்த கற்பனை அல்ல எனக்கு குறுஞ்செய்திகளாக வந்ததுதான்.
----------------------------------------------------

1.விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை.

கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்

"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"

-------------------------------------------------------------------

2. ஒருவர்: விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
மற்றவர்: அவரோட 50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்....
---------------------------------------------------

3.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்

நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.

-------------------------------------------------------------------

4.பிகர் கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களே

ஒரு நாள் வரும்

அப்ப ஒரு பொண்ணு உன்னை

ரொம்பவும் லவ் பண்ணி

உன்னை அப்படியே கட்டிப் பிடிச்சு

கிஸ் பண்ணிக்கிட்டே சொல்லுவா.....

"ஐ லவ் யூ டாடி"

----------------------------------------------------------

5.பாகிஸ்தானில் இப்போது பிரபலமான SMS
IPL நிராகரித்தது வெறும் பதினோறு பாகிஸ்தானியரை ஆனால்


சானியா மிர்சா நிராகரித்தது ஒட்டுமொத்த இந்தியரையும்!!!!!

-------------------------------------------------------------------------

6.தமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு.


ரஜினி = சச்சின் (ரெண்டு பேரும் எப்பவும் டாப்தான்)
கமல் = கங்குலி (திறமை இருக்கு ஆனா ஹிட் ஆக முடியல)
சூர்யா = யுவராஜ் (லக் மட்டும் தான்)
விக்ரம் = தோனி ( ஹிட் ஆனா பயங்கரம்தான் ஆனா ஹிட் மட்டும் தான்)
மாதவன் = சிரீ சாந்த் ( மெகா பிளாப் ஆனாலும் இன்னும் கவர்ச்சி இருக்கு)
அஜித் = சேவாக் ( அடிச்சா சிக்ஸ் இல்லன்னா அவுட்)
விஜய் =


அட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க........

--------------------------------------------------------------

7.கடைசியா ஒரு தத்துவம்

இன்னைக்கு வைக்கிற மீனு நாளைக்கு கருவாடா ஆகும் ஆனா

இன்னைக்கு வைக்கிற மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டு குழம்பாகுமா?....

-------------------------------------------------------


வியாழன், 12 நவம்பர், 2009

SMS மொக்கைகள் - 4

1. நோயாளி: டாக்டர் ரொம்ப நாளா வயிற்று வலி என்னால பொறுக்கவே முடியலை.
டாக்டர்:வயிறு வலிக்கும் போது ஏன் பொறுக்கப் போனிங்க ரெஸ்ட் எடுக்கலாமே?!!!...
--------------------
2.When Apple becomes red
It is ready to Eat
அது மாதிரி
When a Girl becomes 18
She is ready to.......
-

-



Vote
(ஹி ஹி வேற எதையாவது நினைச்சு வந்திங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை)
--------------------
3. ஒரு "சின்னத்" தத்துவம்.
பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கும் போது
ஆண்களுக்கு பெரிய வீடு சின்னவீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா?
--------------------
4.காதலுக்கு மதிப்பெண்கள்
சுமாரா காதல் பண்ணுனா 35 மார்க்
சூப்பரா காதல் பண்ணுனா 80 மார்க்
சின்சியரா காதல் பண்ணுனா
-
-
-


வேறு என்ன "டாஸ் மாக்" தான்
--------------------
5.ஒருவர்: பஸ்ஸ்டாப்புல நின்னு மேலயே பாத்துகிட்டு இருக்கிங்களே ஏன்?
சர்தார்: சென்னைக்கு போற பஸ்ஸு ரெண்டு மணிக்கு மேல வரும்ன்னு சொன்னாங்க.
--------------------
6.பெண்வீட்டார்: மாப்பிள்ளை என்ன பண்ணுறாரு.
புரோக்கர்: அவர் நின்னா ரெயில் ஓடும் ரெயில் நின்னா மாப்பிள்ளை ஓடுவாரு
பெண்வீட்டார்: அப்படியா அப்படி என்ன முக்கியமான வேலைப் பார்க்குறாரு
புரோக்கர்: மாப்பிள்ளை ஸ்டேசன்ல முறுக்கு விக்கிறாரு.
--------------------
7.பார்த்திபன்: வடிவேலு உன் மெடிக்கல் கடையில எல்லா மருந்தும் இருக்கா?
வடிவேலு: ஆமா உனக்கு என்ன மருந்து வேணும்?
பார்த்திபன்: அப்படின்னா ஒரு கிலோ வெடிமருந்து கொடு.
--------------------
8.ஒருவர்: டாக்டர் நான் சிம்கார்டை முழுங்கிட்டேன்
டாக்டர்: கையை உள்ளே விட்டு எடுக்க வேண்டியதுதானய்யா?
ஒருவர்: உள்ளே விட்டுப் பாத்துட்டேன் டாக்டர் Not reachable ன்னு சத்தம் வருது
--------------------
9.பிச்சைக்காரர்: அய்யா தருமம் பண்ணுங்கய்யா...
நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க
விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுடிங்க
நடிகர் விஜய்: யோவ் உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்ய்யா..
--------------------
10.பெத்தப் பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு
என்னன்னா

ரெண்டையும் கட்டிக் கொடுக்கிற வரைக்கும் அடிவயிற்றுல ஒரு நெருப்பு பத்தி எரிஞ்சுக்கிட்டே இருக்கும்.
--------------------
11.சர்தார் 1: வெயிட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கல
சர்தார் 2: அப்படி என்ன படிப்பு படிச்சுருக்க
சர்தார் 1: pre (Kg) L(Kg) U(Kg)
--------------------
12.விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே
நாலுமாசம் தூங்க மாட்டே

ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா நீ நடிச்சாத்தான் தாங்க முடியல
--------------------
13.கணவன்: நான் திடீர்ன்னு செத்துப் போனா நீ என்ன செய்வே?
மனைவி: நானும் கூடவே செத்துப் போயிடுவேங்க.
கணவன்: ஜோசியக்காரன் எனக்கு அப்பவே சொன்னான் நீ செத்தாலும் சனி உன் கூடவே வரும்ன்னு
--------------------
14.ஒரு மொபைல் தத்துவம்
பொண்ணுங்க மனசு தண்ணி மாதிரி
பசங்க மனசு மொபைல் மாதிரி
தண்ணி மேல மொபைல் விழுந்தாலும்
மொபைல் மேல தண்ணி விழுந்தாலும்
சேதம் என்னவோ மொபைலுக்குத்தான்.
--------------------
15.காவல் அதிகாரி: நாளைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை எதுவாவது இருக்கா?
கைதி: நான் அஜித்தப் பாக்கனும்.
காவல் அதிகாரி: அவர் சூட்டிங்கில பிஸியா இருக்காரு பதிலுக்கு விஜயைப் பாக்குறியா?
கைதி: அதுக்கு நான் தூக்கிலயே தொங்கிடுவேன்.
--------------------
16.சிறப்பு தத்துவம். (Last but not least.)
ஒரு மஞ்சக்கயித்த உன் கையில கட்டுனா அதுக்கு பேரு காப்பு
அதையே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா அது நீ
உனக்கு வச்சுக்கிட்ட ஆப்பு.
--------------------



திங்கள், 12 அக்டோபர், 2009

SMS மொக்கைகள் - 3

1.நீதிபதி: ஏண்டா சரவணா ஸ்டோர் கடையில திருடுன?
திருடன்: சதா அக்காதான் "எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோன்னு சொன்னாங்க அதான் சாமி எடுத்தேன்.
-------------------
2.நச்சுன்னு ஒரு உண்மை சொல்லுறேன் கேட்டுக்குங்க.
என்னதான் 220CC பல்சாரிலும் 350CC ராயல் என்பீல்டுலயும் இந்த பசங்க சுத்தினாலும் ஃபாலோ பண்ணப்போறது என்னவோ 80CC ஸ்கூட்டிதான்.
----------------------
3. 143 அப்படின்னா என்ன அர்த்தம் சொல்லுங்க.
I love you வா ம்ஹூம் இல்லை
I hate you வா இல்லவே இல்லை
I like you வா ம்ஹூம்
I miss you வா இல்லை
I wish you வா இல்லை இல்லை இல்லை
சரி நான் சரியாக சொல்லுறேன்
143ன்னா
-
-
நூத்தி நாப்பத்து மூன்று. (அய்யோ அடிக்க வராதிங்க)
--------------
4.நண்பா உன்னைப்போல் என் கண்ணீர் துடைக்க ஒருவன் இருந்தால்
-
-
100 விஜய் படம் வந்தாக் கூட துணிந்துப் பார்ப்பேன்.
------------------
5.ஹாமாம் சோப் ரீ மிக்ஸ் விளம்பரம்
பவித்ரா கடைக்குப் போயி ஒரு குவார்ட்டர் சரக்கு வாங்கிட்டு வர்றியாம்மா?
சரிம்மா
அய்யய்யோ என் பொண்ணுகிட்ட என்ன சரக்குன்னு சொல்லலியே
வாந்தி வருமே
தலைவலிக்குமே
ஒவர் ஹேங் ஆகுமே
போதை ஏறாதே
பவித்ரா ..........
என்னம்மா (பவித்ரா கையில் ஒல்ட் மங்குடன்)
ஓல்ட் மங்கிருக்க பயமேன்.
----------------
6.Girls Special
கேரளா : அழகிய பெரிய ரெண்டு கண்கள்
கர்நாடகா: கரிய நீண்ட கூந்தல்
ஆந்திரா : கூரிய நீண்ட மூக்கு
பஞ்சாபி : பாதாம் பருப்பு நிறம்
தமிழ்நாடு: ஒரு மண்ணும் இல்லன்னாலும் ஓவரா சீன் போடுறது.
இப்படிக்கு சீன் போட்டதில் சீரழிந்த வாலிபர் சங்கம்.
-----------------
7.தொண்டன்: தலைவரே நீங்க சொன்ன மாதிரு அசிஸ்டண்ட் கமிசனர போட்டுத் தள்ளிட்டோம்
அரசியல் தலைவர்: என்னடா சொல்லுறிங்க எப்படா நான் அசிஸ்டண்ட் கமிசனர கொல்லச் சொன்னேன்?
தொண்டன்: போங்க தலைவா நேத்துத்தான சொன்னிங்க ரொம்ப டென்சனா இருக்கு அந்த ஏசியப் போடுங்கடான்னு.
-------------------
8.தண்ணீர் தெளிச்சு ஏன் கோலம் போடுறாங்க தெரியுமா?
ஏன்னா
கோலம் போட்டுட்டு அப்புறம் தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சுடும்.
-----------------
9.காந்தி 13 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
நேரு 14 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
பாரதி 7 வயசுல கல்யாணம் பண்ணுனாரு
இப்பத்தான் தெரியுது நம்ம ஏன் வரலாற்றுல இடம் பெறலன்னு.
-----------------
10.ஹிஸ்டரி டீச்சர்:ராஜா ராம் மோகன் ராய் யாரு?
விஜய்: அவுங்க நாலு பேரும் பெஸ்ட் பிரண்டு டீச்சர்.
----------------
11.ஜோசியர்: உங்க ஜாதகப் படி நீங்க ரொம்ப பணக்கஷ்டத்துல இருக்கனுமே
ஜோசியம் பார்ப்பவர்: ஆமாம் சாமி இப்ப உங்களுக்கு கொடுக்கக் கூட கையில் பத்துப் பைசா இல்லை.
-----------------
12.படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்
படிப்புத்தான் வரல
தூக்கமாவது வருதேன்னு நினைச்சு
சமத்தா தூங்கிடனும்.
---------------
13.தினம் ஒரு kural படிக்கனும்
எனவே இன்னிக்கு இந்த kural படிங்க
"மியாவ் மியாவ் "
சரியா நாளைக்கு வேற kural படிக்கலாம் என்ன?(சரி சரி அழக்கூடாது)
---------------
14.ஒரு அசிஸ்டண்ட் கமிசனர் அவரோட பையன் ஸ்கூல் புராஜக்ட்டுக்காக ஒரு கடையில் டையோடு வாங்கினாரு வாங்கின மறுநாளு டெபுடி கமிசனரா புரோமோசன் ஆயிட்டாரு
எப்படி
எப்படின்னா
டையொடு diode is a good rectifier
it converts AC to DC
-----------------
15. கடைசியா ஒரு தீபாவளி
மொக்கை
பையன்: அம்மா எல்லா வெடியும் தீந்துப் போச்சு இந்த சிவப்பு கலர் பெரிய வெடியை விடவா?
அம்மா: சனியனே அது கேஸ் சிலிண்டருடா.....
--------------

வெள்ளி, 9 அக்டோபர், 2009

SMS மொக்கைகள் - 2

1.மனசு இருந்தா SMS அனுப்புங்க...
அன்பு இருந்தா பிக்சர் மெசேஜ் அனுப்புங்க
காசு இருந்தா CALL பண்ணுங்க...
எல்லாம் இருந்தா .....

உங்க செல்லை கொரியரில் அனுப்புங்க ஹி ஹி....
---------------------
2.ஒரு பையன் ரோட்டுல தும்மிகிட்டே போறான்
ஏன்?
ஏன்னா
அவன் பொடிப் பையன்.
----------------
3.நாம் வாழனும்னா எத்தனைப் பொண்ணை வேனும்னாலும் காதலிக்கலாம்
ஆனா சாவனும்னா
ஒரே ஒரு பொண்ணை
கல்யாணம் கட்டிக்கிட்டாப் போதும்.
--------------------
4.பசங்க காதலுக்கும் பொண்ணுங்க காதலுக்கும் என்ன வித்தியாசம்.
பசங்க பிரண்டுன்னு சொல்லிட்டு பின்னாடி காதலிப்பாங்க
பொண்ணுங்க காதலிச்சுட்டு பின்னாடி பிரண்டுன்னு சொல்லுவாங்க.
---------------
5.நண்பா நேற்று என் கனவில் நீ வந்தாய்
கட்டுக்கட்டாக பணத்தினை எண்ணிக்கொண்டிருந்தாய்
ஆனால் ஒரு விசயம் மட்டும் புரியவில்லை
அது என்னவென்றால்
ஏன் கோவில் வாசலில் உட்கார்ந்திருந்தாய்?
---------------
6.ஒருவர். ஹலோ சிங்ஜி ஏன் உங்க புது வீட்டுக்கு பாடி ஸ்பிரே அடிக்கிறிங்க
சர்தார். ஏன்னா இது வியர்வை சிந்தி கட்டிய வீடு.
------------------
7.எல்லோரும் காலை வணக்கம் எப்படி சொல்லுவாங்க
அ) கோயமுத்துர்காரர்:ஏனுங்க குட்மாரிங்க்னா
ஆ)திருநெல்வேலிகாரர்: ஏலே குட்மார்னிங்க்லா
இ)மதுரக்காரர்: எலே மக்கா குட்மார்னிங்க்யா
ஈ)நம்ம பாசை: ஓ சாமியோவி எந்திரி சாமியோவ்..
--------------------
8.பெண்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.
1.சோனி எரிக்சன்(சவுண்ட் பார்ட்டி-வாயாடிப் பொண்ணு)
2..சாம்சங் உசார் பார்ட்டி (மடக்குறது கஷ்டம்)
3.நோக்கியா ரீல் பார்ட்டி(மடக்கிறது ஈஸி மேய்க்கிறது கஷ்டம்)
4.மோட்டாரோலா மீடியம் (மொக்கை பிகர்)
5.சைனா செட் சூப்பர் பிகர் (ஆனா சிலிப் ஆனா சிதறிடும்)
---------------
9.திருடர்கள் ஜாக்கிரதை என்னும் தலைப்பில் கவிதை எழுத கண் மூடி ஒரு நிமிடம் யோசித்தேன் விழித்துப் பார்த்தால்
என் பேனாவை காணவில்லை.
--------------
10.இப்ப நீங்க பைசா செலவில்லாம டென்னிஸ் பார்க்கப் போறிங்க
IS IS IS IS IS IS IS IS IS IS
பாத்தாச்சா டென்னிஸை
மீண்டும் வருகிறென்.
நன்றி
வணக்கம்.
------------------

சனி, 3 அக்டோபர், 2009

SMS மொக்கைகள்

1.தங்கச் செயினை உருக்கினால் தங்கம் வரும்
வெள்ளிச்செயினை உருக்கினால் வெள்ளி வரும்
அதுமாதிரி சைக்கிள்செயினை உருக்கினால் சைக்கிள் வருமா?


2.ஒருவன்: பாவம் அந்த பொண்ணுக்கு காது கேட்காது போல நான் ஒன்னு சொன்னா அது ஒன்னு சொல்லுது
கேட்பவர்: ஏன் என்னாச்சு
ஒருவன்: நான் ஐ லவ் யூன்னு சொன்னா அதுக்கு செருப்பால அடிப்பேன்னு சொல்லுது.


3.அவளுக்கு எண்ணை பிடிக்கவில்லை
அதனால் எனக்கும் எண்னைப் பிடிக்கவில்லை.
ஆகவே

-

-

ரெண்டு பேரும் எண்ணை இல்லாமல் தோசை சுட்டு சாப்பிட்டோம். ஒகே.


4.பெண் நண்பி
காதலி
மனைவி
சின்னவீடு
இவற்றுக்கு உள்ள வித்தியாசம் என்ன?

மிக எளிது முறையே
pre paid
post paid
life card
coin box
இதுக்குள்ள வித்தியாசம் தான்.


5.ஒரு ஏழை மீனவன் கடலில் சென்று மீன் பிடித்து மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொன்னான். ஆனால் வீட்டில் கேஸ் இல்லை, மின்சாரம் இல்லை மண் எண்ணையும் இல்லை
எனவே சமைக்க முடியாமல் மீனை மீண்டும் கடலிலேயே விட்டு விட்டான்.
கடலில் விழுந்த மீன் துள்ளி எழுந்து கத்தியது.

"தி மு க வாழ்க"


6.ஓட்டுப்போடுவதற்கான அதிகாரபூர்வ வயது 18
திருமணத்திற்கான அதிகாரபூர்வ வயது 24
இதிலிருந்து என்ன தெரியுது.

IT IS TOUGHER TO CONTRL A LADY THAN A COUNTRY
--------------------------------------------------
இனிமேல் வருவது மரண மொக்கைகள்

1.வேட்டைக்காரன் படம் வெளியாகும் நாள் அன்று கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
அ) குழந்தைகள் பெரியவர்கள் நோயாளிகள் பெண்கள் படம் பார்ப்பதை தவிர்க்கவும்.
ஆ)ஒவ்வொரு டிக்கட்டுடனும் இரண்டு சாரிடோன் மாத்திரையும் ஒரு டைகர் பாம் அல்லது அமிர்ந்தான்சன் வழங்கப்பட வேண்டும்.
இ)திரையரங்கு முன்பு கண்டிப்பாக மருத்துவர் குழு அடங்கிய ஒரு ஆம்புலன்சு நிறுத்தப்பட வேண்டும்.
ஈ)ஒரு முறைக்கு மேல் திரும்பிப் பார்ப்போருக்கு ஏற்படும் பின் விளைவுகளுக்கு அரசு பொறுப்பேற்காது.
----------------------
2.வடிவேல்: டேய் நான் தான் தமிழ்நாட்டுல பெரிய காமடியன் தெரியுமா?
விவேக்: போடா நான் தான் பெரிய காமடியன்
சந்தானம்: டேய் ரெண்டு பேரும் பாத்துப் பேசுங்கடா பக்கத்துல விஜய் இருக்காரு.
---------------------

3.வேலைக்கு ஆட்கள் தேவை
சம்பளம் மாதம் 15000 ரூபாய்
இடம்: சென்னை ஏ வீ எம் ஸ்டுடியோ
வேலை: சான்சு கேட்டு விஜய் வந்தால் குச்சியால விரட்டனும்.
----------------------
4.அமெரிக்கா vs இந்தியா படை நிலவரம்
அமெரிக்கா
10000 அனுகுண்டுகள்
6000000 படைவீரர்கள்
10000 கவச வண்டிகள்
120000 வானூர்திகள்

இனி இந்தியா
ஒரு மரியாதை அல்லது வில்லு பட டிரய்லர்
மவனே மொத்த அமெரிக்காவும் குளோஸ்டா!
-------------------
5.விஜய் பட அதிசயங்கள்
அ) ஒரு கண்ணீர் துளி கோமா நிலையில் உள்ள ஒருவரது உயிரைக் காக்கும் (பிரண்ட்ஸ்)
ஆ)அரை இறுதியில் தோற்றாலும் இறுதிப் போட்டியில் விளையாடலாம் (கில்லி)
இ)சூப்பர்மேன் கூட கயிறு இல்லாமல் அந்தரத்தில் 500 அடிக்கு மேல் பறந்ததில்லை (குருவி)
ஈ)ஒரு பிச்சைக்காரன் கூட ஒருமாதம் தொடர்ந்து ஒரு பெனியனைப் போட்டதில்லை (மதுர)
--------------------------

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

அது......

அது.......

ஒரு ஊர்ல ஒரு பஞ்சாயத்து தலை(வர்) இருந்தாரு. அவரு பேஸும் போது பெரும்பாலும் "அது' இல்லைன்னா 'இது' இந்த இரண்டு வார்த்தைதான் அதிகம் வரும். வாயில வசம்ப வச்சு தேச்சாலும் வேற வார்த்தைகள் அவருக்கு ரொம்ப வராது.
ஆனாலும் என்ன செய்யுறது தலை(வரா) ஆச்சேன்னு ஊருல மக்கள் அவரு என்ன அதுவா பேசினாலும் ஒரு இதுவா புரிஞ்சுகிறுவாங்க.

ஒருநாள் பஞ்சாயத்து அலுவலகத்தில குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம் செய்யனும்னு ஒரு கூட்டம் போட்டாங்க. அதுல பஞ்சாயத்து தலைவர் என்கிற முறையில தலைவர கூப்பிட்டு பேச சொன்னாங்க.

தலை(வர்) எந்திருச்சு மைக்க புடிச்சாரு

'எல்லோருக்கும் ஒரு இதுவான வணக்கம். அதைப் பத்தி பேசுறதுக்கு ஒரு இதுவா என்னைக் கூப்பிட்டாங்க. அதைப் பத்தி நான் சொல்லுறதுக்கு ஒரு இதுவும் இல்லை. அது என்னனா நம்ம நாட்டுல அது ரொம்ப பெருகிட்டதால எல்லோருக்கும் ஒரு இது தேவைப்படுது. எல்லோரும் அதப் பண்ணிக்கிட்டாத்தான் நம்ம நாடு ஒரு இதுவா மாற முடியும். அதுனால எல்லார் வீட்டுலயும் கண்டிப்பா இத பண்ணிக்கனும்.இத ரொம்ப தாழ்மையோட ஒரு இதுவா சொல்லிக்கிறேன். மறுபடியும் எல்லோருக்கும் ஒரு இதுவான வணக்கம்"




என்னங்க கதை ஒகேவா?


அது.......