சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 அக்டோபர், 2009

தீபாவளி தமிழர் பண்டிகைதானா?

நாளை தீபாவளி
எப்போதும் ஐப்பசியில் வரும் தீபாவளி இந்த வருடம் மட்டும் அதிசயமாய் புரட்டாசியிலேயே வருகிறது.

நீண்ட நாட்களாகவே எனக்கு தீபாவளி தமிழர் பண்டிகைதானா என ஐயம் ஒன்று உண்டு. மற்ற எந்த பண்டிகையைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தீபாவளிக்கு இருக்கும் சிறப்பு,முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

காலம் காலமாக நமக்கு சொல்லப் பட்ட கதையின் படி கிருஷ்ன பகவான் நரகாசுரனை கொண்று மக்களுக்கு சுபிட்சம் கொடுத்ததாகவும் அதனை கொண்டாடவே மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி புத்தாடை அணிந்து பட்டாசுகளை கொளுத்தி மகிழ்கிறார்கள் என நம்புகிறோம்.

கிருஷ்னர் தமிழர்களின் கடவுள் கிடையாது. கொல்லப்பட்ட நரகாசுரன் தமிழ்நாட்டிலும் வசிக்கவில்லை. அதனால் தமிழர்களுக்கு அவன் தொல்லை கொடுத்திருக்க வாய்ப்பில்லை.பின் எப்படி தமிழ்நாட்டில் தீபாவளி பிரதான பண்டிகையாயிற்று.

தீபாவளி மதத்தின் பேரால் வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட பண்டிகை என்பதே சரி.

தீபாவளி மட்டுமல்ல தமிழர்களுக்கு அந்நியமான விநாயகர் விஜர்சன் ஊர்வலம், சரஸ்வதி பூஜா, மாகாவீரர் ஜெயந்தி இப்படி பல இறக்குமதி செய்யப்பட்ட திருநாள்கள் தமிழ்நாட்டில் கலந்துள்ளன.

இவற்றுக்கான மூல காரணம் யார் எனப் பார்த்தால் அவர் அண்டைமாநிலமான கேரளாவின் காலாடியில் பிறந்த ஆதிசங்கரர் என்னும் முதல் சங்கராச்சாரியே ஆவார். அவரே தமிழகத்தில் கௌமாரம் என்றும் (முருக கடவுள் வழிபாடு) இந்தியாவின் வடபகுதிகளில் சைவம் (சிவ வழிபாடு) வைணவம் (விஷ்னு வழிபாடு) எனவும் மகாராட்டிரத்தில் கானபத்தியம் (கணபதி வழிபாடு) எனவும் மேற்கு வங்காளத்தில் சாக்தம் (சக்தி வழிபாடு) எனவும் வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை வழிபாடு(அக்னி வருணன் சூரியன் பாம்பு போன்றவை)எனவும் இருந்த பல்வேறு தெய்வ வழிபாடுகளை இந்துமதமாக கடவுள்களுக்குள் ஒரு உறவு முறையைக் கற்பித்து ஒன்று சேர்த்தார்.

தமிழர்களாகிய நாம் விஷ்னு சிவன் பார்வதி லெட்சுமி கணபதி துர்க்கை ராகு கேது என கணக்கில்லாத இந்து கடவுள்களை கும்பிட்டும் அவர்களது முக்கிய வழிபாட்டுத் தினங்களுக்கு அரசு விடுமுறை வழங்கியும் வருவது போல ஏதாவது வடமாநிலத்தில் தமிழ்கடவுள் முருகனுக்கு வழிபாடோ அல்லது வைகாசி விசாகத்துக்கோ பங்குனி உத்திரத்துக்கோ தைப்பூசத்துக்கோ விடுமுறை வழங்கியதாக கேள்விப்பட்டதுண்டா?

அண்டை மாநிலங்களை சொல்வானேன். நம் தமிழ்நாட்டிலேயே நம் தமிழ் கடவுள் முருகனின் பண்டிகைகளுக்கு விடுமுறை கிடையாது என்பது இன்னும் வருந்ததக்க விடயம் தான்.
தமிழர்களுக்கு என பிரத்தியோகமான தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை தமிழர் புத்தாண்டு என அரசு அறிவித்த பின்னும் எத்தனை தமிழர்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.

இப்படி பல்வேறு ஐயப்பாடுகள் எனக்கு தீபாவளிப் பண்டிகையைப் பற்றி இருந்தாலும் ஜவுளி பட்டாசு இனிப்பு வீட்டு உபயோகப் பொருட்கள் இப்படி பற்பல தொழில்களில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வியாபாரத்தினையும் ஓரளவு செல்வத்தினையும் மகிழ்சியையும் இப்பண்டிகை கொண்டு வருவதால் இந்த நன்மைகளை முன்னிட்டு வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களாகிய நாம் இப் பண்டிகையையும் வரவேற்போம்.

அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.



வியாழன், 27 ஆகஸ்ட், 2009

தமிழ்நாட்டின் தலையெழுத்து இதுதான்

என் நண்பன் ஒருவன் என் வலைப்பூவைப் படித்து விட்டு எனக்கு ஒரு மின் மடல் அனுப்பியிருந்தான். அதில் நான் வலையுலகில் புகழ் பெற ஒரு உருப்படாத யோசனையையும் சொல்லியிருந்தான்.

அது என்னன்னா நம்ம பேருலஏதாவது வடமொழி எழுத்து வருகிறமாதிரி பேரு வச்சிக்கனுமாம். அப்பத்தான் தமிழ்நாட்டில புகழ் அடைய முடியுமாம். உதாரணத்துக்கு
அரசியல்
காமராஜ்
எம்ஜியார் (ராமசந்திரனா புகழ் அடையவில்லையாம்)
கருணாநிதி (உண்மை பெயரு தஷ்ணா மூர்த்தியாம்)
ஜெயலலிதா
ராம்தாஸ்
விய்காந்த்

கலைத்துறை
தியாகரா பாகவதர்
சிவாஜி
ஜெமினி
ஜினி
கமல்ஹாசன்
விஜய்
ஜித்

எழுத்தாளர்கள்
சுஜாதா
ஜெயகாந்தன்
ராஜேஸ்குமார்
சுரேஷ்பாலா

இப்படி அடுக்கிட்டுப் போனான். இந்தமாதிரி வடமொழி எழுத்து இல்லாததால்தான் அண்ணாத்துரை பிரபலமாகியும் அல்பாயுசல போயிட்டாராம். அப்புறம் நம்ம நல்ல கண்ணு ,வைகோ இவுங்கள்ளாம் அரசியல்லயும் விக்ரம் சூர்யா கலையுலகிலும் திறமை இருந்தும் சூப்பர் ஸ்டார் ஆக முடியலையாம்.

அட ஙொப்புரானேன்னு நினச்சுகிட்டு வலையுலகில் யாரு சூப்பர் ஸ்டாருன்னு யோசிச்சுப்பாத்தா யுவகிருஷ்னா,கிருஷ்னகுமார்(பரிசல்காரன்),அவிய்ங்க ராமாணிக்கம்,நட்புடன் மால்,சுஷ்மலா ன்னு இந்த பேருங்க மட்டும் ஞாபகத்துக்கு வருது.
யோசிச்சு பார்க்கையில தமிழ்நாட்டின் தலையெழுத்து தமிழ் எழுத்தா இல்லைன்னு மட்டும் பிடிபடுது.

இல்லைன்னா


தமிழைத் தாய்மொழியா கொள்ளாதவனை(ளை) எல்லாம் தலையில தூக்கி வச்சு கொண்டாடிகிட்டு இருப்பமா?