கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 பிப்ரவரி, 2011

இந்த வருட உலக அழகி


இந்த வருட உலக அழகி

எங்க சித்தாளு சின்னாத்தா


சூப்பிய முலையில் பால்

சுரக்க வழியில்லாம- கை

சூப்பி பசியாறும் குழந்தையை

இடையில் வச்சு


வாட்டிடும் வறுமை பாரத்த

சுமக்க வேண்டி- தலை

சும்மாட்டில்

வண்டி பாரம் போல்

செங்கல் ஏந்தி


அடுக்கு மாடிகளின்

நெடுக்குப் படிகளிலே

சிறுத்தைப் புலியெனெ இவள்

நடக்கும் நடையழகுக்கு


உடுக்கை இடையினிலே

தளுக்கு உடையணிந்து

மினுக்கும் மேடையிலே

சுளுக்கு வந்தது போல்


சிலர் நடக்கும் பூனை நடை

எந்த காலத்திலும்

பொருத்தமாகாதய்யா

பொருத்தமாகாது.


உலக அழகியின்னா- சில

உத்தரவாதம் வேணுமாமே?

அறிவு கேள்விகளுக்கு

அழகாய் பதில் சொல்லனுமாமே.


நானும் கேட்டுப்புட்டேன்

நல்ல கேள்வி ஒன்னு

நாலு குணம் கொண்ட எங்க

நங்கை சின்னாத்தாளிடம்


சின்னாத்தா சின்னாத்தா

பதில்

சொல்லாத்தா சொல்லாத்தா


உழைச்சுப் பிழைக்காம

ஏழை வயித்தில்

அடிச்சுப் பிழைக்கும் இந்த

உளுத்துப்போன அரசியல்வாதிகள்


உடனே திருந்தி

உருப்பட்டுப் போறதுக்கு

உடனடி யோசனை ஒன்னு

சொல்லு சொல்லு.


உழைச்சுப் பிழைக்கும்

பாட்டாளி மக்களோட

உழக்கு மூத்திரத்த தினம்

குடிக்கச் சொல்லு - இது

இந்த வருட உலக

அழகியோட பதிலு பதிலு.


வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

வெள்ளிக் கிழமை

அலாரம் அடிக்காமல்

கலைகிறது உறக்கம்.


அடுத்தவன் காத்திருப்பான் என்ற

அச்சமில்லை கழிவறையில்


உறைந்து போன முதுகின்

அழுக்குக்கு விடுதலை.


உப்பு இது உறைப்பு இது என

நாக்கு உணரத் தலைப்படுகிறது.


கருத்த மீசைக்காட்டில்

முளைத்த வெள்ளைப் பூக்களை

கவணித்துப் பறிக்க முடிகிறது


ஆறு நாள் மறந்து போன

ஆறுமுகத்திற்கு

ஐந்து நிமிடம் ஒதுக்க முடிகிறது.


கண்ட்ரோல் சியிலும்

கண்ட்ரோல் வியிலும்

களைப்படைந்த விரல்கள்

காப்பிக் கோப்பையை பிடித்திருக்கிறது.


இரக்கமில்லாமல்

“இரு அப்புறம் பேசுகிறேன்

எனத் துண்டிக்கும் தொடர்பு

என்னமா வேறு என்ன விசயம்என

இணக்கமாய் நீள்கிறது.


சிவப்பு விளக்கு காத்திருப்பில்

ஊர் பற்றி சிந்தனை இல்லை.

பச்சை விளக்கு கண்டதும்

பரபரப்பும் வருவதில்லை.


இங்கே வா அங்கே போ

எனும் ஏவல் மொழிகள்

காதில் கேட்கவில்லை


இன்று குளிர் அதிகம் என்று

எவரிடமும் சம்பிரதாயப்

பேச்சு ஆரம்பிக்கவில்லை

.

இரும்புச் சட்டங்களின் முன்

காத்திருக்கும் என் நிசான் குதிரை

அரும்பு விட்ட பூக்களின் முன்

இளைப்பாறுகிறது.

.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

துமாரா பாஷ மேராக்கோ மாலும் நஹியே


“என்னப்பா சொல்லுறே - ஆளு

எடுக்க வந்த ஆளு கேட்டான்.


ஆறடி உயரம் இருந்தான்

ஆந்திரத்துக்காரன் அவன்


அழகாய் தமிழ் பேசி

அருமையாய் கூப்பிட்டான்.


“காசு கூடன்னு பாக்காதே

கவலை கொஞ்சம் கூட படாதே


ஆறே மாசத்துல போட்ட காசை எடுத்திடலாம்

ஆயுசுக்கும் உட்காந்து நீ ஜம்முனு சாப்புடலாம்


உங்காளுக நிறைய உண்டு

எங்களோட கம்பெனில


உட்காந்து பேசிப் பாரு

உலகெமெல்லாம் புரியும் பாரு


கோழி உண்டு மீனு உண்டு

குப்பூஸ் ரொட்டி உண்டு


சாண்ட்விச்சு பர்கருன்னு

சலிக்காத சாப்பாடு உண்டு


ரெண்டு வருசம் வேலைபாரு-துபாய்

செண்டு போல வாழ்க்கை மணக்கும் பாரு


கொண்டு வந்து பணத்தக் கட்டி

குபேரனா மாறப் பாரு


ஆசை வார்த்தையில ஆளக்கவுத்திட்டான்

பாசமா பேசுறான்னு - நம்ம பயலும் நம்பி


காசப் புரட்டுறதுக்கு

கடுதியில் வீடு வந்தான்.


புஞ்ச நிலத்த வித்து

புரட்டினான் இருபதைஞ்சு


அஞ்சு வண்டி ஆறுமுகத்தேவர்கிட்ட

வாங்குனான் இருபதைஞ்சு


ரொக்கமா பதினைஞ்சு

இன்னும் தேவைப்பட- பொண்டாட்டி


வைக்கப்புரி தாலி சங்கிலியை

வங்கியில ஈடு வச்சான்


மாசம் ரெண்டு போயி

விசாவும் வந்து சேர


ஆசைக் கனவோடு நம்மாளு

தேசம் விட்டு தேசம் வந்தான்


கம்பெனின்னு சொல்லிபுட்டு

காட்டுக்குள்ள கூட்டி வந்தான்


ஆட்டு மந்தை மேய்க்கச் சொல்லி

தோட்ட வேலை கொடுத்துபுட்டான்


கஷ்டமான வேலைகளை-நம்மாளு

இஷ்டமாக செய்து வந்தான்


நஷ்டம் என்ன ஆச்சுதுன்னா

நம்மாளுக்கு நாதியில்ல தமிழ் பேச


நாளு வாரமாச்சு

வாரம் மாசமாச்சு


நம்மாளு தமிழ் மறந்து

நாலஞ்சு மாசமாச்சு


ஒருநாள் காலையில

திருநாள் வந்தது போல்


வறண்ட பாலையில

வருணன் வந்து விழுந்ததுபோல்


கருண மகராசா அரபி

கபில் முதலாளியோட


காருல வந்திறங்கினான்

ஊருல ஆளெடுத்த ஆந்திராக்காரன்


அவுத்து விட்ட கண்ணுக்குட்டி பால்குடிக்க

எடுத்துவுட்டு ஓடுவதுபோல்


வவுத்தக் கட்டி பொழைக்கும் பய-அந்த

சவத்த திங்கும் பயல்ட்டப் போனான்.


‘அய்யா தெரியுதாய்யா நானு

நீங்க ஆளெடுத்த ஏழைமகன்


நல்லா இருக்கிங்களா உங்களைப்

பாத்து நெடுநாளாச்சுன்னு


பொய்யாப் பொழைக்கும் அந்த

போர்ஜரிப் பய சொன்னான்


‘பய்யா கோனே தும் (யார் நீ),

துமாரா பாஷ மேராக்கோ மாலும் நஹின்னு

(உன் மொழி எனக்குத் தெரியாது)

புதன், 2 பிப்ரவரி, 2011

ஆரஞ்சுப் பழம் வாங்கி வைச்சியா?


சாயங்காலம் ஆட்டம் போட்டு

சாப்பிடாம தூங்கும் மகன்


எப்ப எந்திரிப்பான் என்ன கேட்பான்னு

எங்களுக்குத் தெரியாததாலே


கொக்கச்சி பாக்கட்டு ஒன்னு

குடமிளகாய் லேஸ் பாக்கட்டு ஒன்னு


மிக்சர் பாக்கட்டு ஒன்னு-பிரிட்டானியா

மில்க் பிக்கிஸ் பாக்கட்டு ஒன்னு


பச்சை வாழைப்பழம் ஒன்னு-நாட்டு

மஞ்ச வாழைப்பழம் ஒன்னு


டிக்டாக் பாக்கட்டு ஒன்னு-தித்திக்கும்

தேன்குழல் பாக்கட்டு ஒன்னு


வாங்கி வந்து வச்சிபுட்டா- தங்கமகன்

தூங்கி எந்திரிச்சா தொல்லையில்ல


தாங்கிக் கொள்ள முடியாதுங்க-செல்லமகன்

தேம்பி அழ ஆரம்பிச்சான்னா


இப்படித்தான் ஒருநாளு

நல்ல நட்ட நடுசாமத்தில


எப்படித்தான் தெரிஞ்சிட்டானோ

வீட்டில் இல்லாத பொருள் எதுன்னு


“அப்பா ஆரஞ்சுன்னு ஆரம்பிச்சான் தங்கமகன்

இப்ப கிடைக்காதுன்னா ஏத்துக்கல செல்லமகன்


வெக்கம் பாக்காம ராத்திரியில்

பழக்கடை கோவிந்தன் வீட்டுக் கதவு தட்ட


தூக்கம் பாக்காம அவனும் கடைதிறந்து

எம்மவன் ஏக்கம் தீர்த்து வச்சான்.


அப்பப்ப போன் போட்டு என் பொண்டாட்டிகிட்ட

ஆரஞ்சு வாங்கி வச்சியான்னு கேட்பதுண்டு.


இப்ப ரெண்டு நாளா என் மகன்

என்ன கேட்குறான்னா



‘அப்பா எங்கம்மா நான் அவரை

எப்பம்மா பார்ப்பேன்னு


துக்கம் அடைக்குதுங்க தொண்டைய

தூக்கம் வரலிங்க கண்ணுல


கடலைக் கடந்து வந்து சம்பாதிக்கிறது

காசு பணம் மட்டும்தாங்க