அரசியல் - நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் - நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஜனவரி, 2011

நாங்க உங்களவிட கொஞ்சம் மேல்ஜாதி

எங்க கம்பெனில பாத்துகிட்டு இருந்த வேலைய இன்னிக்கு பலுதியா (நகராட்சி) அதிகாரிங்க ஆய்வு செய்யப் போறதா தகவல் வந்தது.

சவுதில தார்சாலையைத் தோண்டுறதா இருந்தா முறைப்படி பலுதியா அலுவலகத்தில் இருந்து அனுமதி வாங்கிட்டுத்தான் தோண்டனும். அதே மாதிரி தோண்டுன பகுதியை மூடுறதா இருந்தாலும் அவங்ககிட்ட காட்டிட்டுதான் மூடனும்.

பலுதியா அதிகாரிங்க எல்லாம் அரபிங்கதான். நம்ம பேசுற இங்கிலிசு அவங்களுக்கு புரியாது. அவங்க பேசுற இங்கிலிசு நமக்குப் புரியாது. அதுனால குழப்பம் வராம இருக்கிறதுக்காக பெரும்பாலும் இந்த மாதிரி ஆய்வுக்கு போகும்போது கூடவே கம்பெனில வேலைப்பார்க்குற சவுதி PROவை கையோடு கூட்டிட்டுப் போறது.

நான் எங்க கம்பெனி சவுதி PRO அபு பாகத் அல் கால்தின்னு பேரு. அவரைக் கூட்டிக்கிட்டு வேலை நடக்கிற இடத்துக்குப் போனேன்.

வேலை நடக்கிற இடம் சின்ன சந்துக்குள்ள இருந்ததாலே மெயின் ரோட்டுலேயே வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு கதவெல்லாம் அடைச்சிட்டு கிளம்பும்போது PRO சொன்னார். “சாதிக் உன் லேப்டாப்ப கையில் எடுத்துக்க, இது ஒன் டென் (110) ஏரியா கார் கண்ணாடியை உடைச்சு லேப்டாப்ப எடுத்துட்டு போயிடுவானுகன்னு.

வோல்டேஜ் கணக்குல நம்பர் சொல்றாரேன்னு எனக்கு குழப்பம் வந்தாலும் உள்ளூர்காரரு விசயமில்லாம சொல்ல மாட்டாருன்னு நான் லேப்டாப்ப கையில் எடுத்துக்கிட்டேன்.

“என்னய்யா சவுதில்ல திருட்டுப் பயம் கிடையாதுன்றானுக, நான் முத்தரபி, முனிசில்லா ஏரியாவெல்லாம் பலதடவை இந்தமாதிரி காருலயே லேப்டாப்ப வச்சிட்டு போயிட்டு வந்திருக்கேன், பத்திரமா இருக்குமே, யாரும் கண்ணாடியை உடைச்சதா இதுவரைக்கும் கேள்விப்படலியேன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் சொன்னாரு “சாதிக் அதெல்லாம் 220 ஏரியா, அங்கே தப்புத்தண்டாவெல்லாம் நடக்காதுன்னு.

“என்னது 220யா? 110க்கும் 220க்கும் அப்படி என்ன வித்தியாசம்ன்னு கேட்டேன்.

“ஏமன், சிரியா, சூடானிலிருந்து பஞ்சம் பொளைக்க சவுதிக்கு வந்து செட்டிலாயிட்டவனுக 110, சவுதியையே பூர்வீகமாக கொண்ட குடிமக்கள் 220ன்னு PRO விளக்கம் கொடுத்தார்.

“சரி சாதிக் நீங்க இதுல என்ன ஆளு 110ஆ 220யான்னு அவரைக் கேட்டேன்.

“நான் 380 இவங்களக் காட்டிலும் கொஞ்சம் மேல் ஜாதி, எங்க 380 ஆளுங்கதான் சவுதியிலே பெரிய ஜாதி சவுதில மன்னரா இருக்கிறவுங்களாம் 380தான், அந்த வகையில நான் மன்னருக்கு தூரத்துச் சொந்தமுன்னு எனக்கு ஒரு பீதியைக் கிளப்பினாரு மனுசன்.

வேலை முடிச்சு திரும்பி வரும்போது PRO கேட்டாரு “ஏன்பா உங்க ஊருல நிறைய ஜாதி இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன் இதுல எந்த ஜாதி உங்கள ஆளுறவுங்கன்னு கேட்டாரு

நான் சொன்னேன் எங்கள ஆளுறவுங்க எல்லாம் உங்க மன்னர் ஜாதி 380ஐக் காட்டிலும் பெரிய ஜாதின்னு

“அப்படியா என்ன அவுங்க நம்பரு PRO கேட்டாரு.

“அவுங்கள்ளாம் 420 ஜாதியை சேர்ந்தவுங்கன்னு சொல்லி முடிச்சேன்

வியாழன், 27 ஜனவரி, 2011

234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டி




ஆச்சர்யமா இருக்கா? வரவிருக்கும் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுக தனித்தே போட்டியிடுகிறதுஇது குறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையின் சில முக்கியமான அம்சங்கள் பின் வருமாறு.இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உடன்பிறப்புக்களைக் காவு கொண்ட காங்கிரஸ் கட்சியுடன் இனி உறவு இல்லை. இதற்கு அடையாளமாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் ராஜினாமா. ஆதரவும் உடன் வாபஸ்.

தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும். டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும்.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊழல் செய்த ராசா டி ஆர் பாலு போன்றவர்கள் கட்சியிலிருந்து உடனடி நீக்கம். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இனி எதிர்காலத்தில் யாரும் ஊழல் செய்யா வண்ணம் உடனடிச் சட்டம் இயற்றப்படும்.

அரசு ஊழியர்களுக்கு அள்ளி வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்படும்.பணிக்கு வராமல் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

காலம் மாறி வருவதற்கேற்ப காவிரிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண பிரதமருக்கு மின் அஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். கடிதம் எழுதுதல் தந்தி அடித்தல் போன்ற பழஞ்சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவசம் அனைத்தும் நிறுத்தம். மாறாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும். இனி மக்கள் இலவசங்களுக்கு வரிசையில் நிற்காமல் அவரவர் குடும்பத்தை அவரவரே கவணித்துக் கொள்ள அரசு அறிவுரை.

கட்சியில் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் அனைவரும் களையெடுப்பு. முரட்டுப் பக்தர்கள் முதுகெலும்பு உடையும் வண்ணம் சட்டங்கள் கடுமையாக்கப்படும்.

வாழ்ந்து மறைந்த வள்ளுவரின் குறள்களை பின்னுக்குத் தள்ளி விட்டு பேருந்துகளில் எழுதப் பட்ட வாழும் வள்ளுவரின் அச்சு பிச்சு வாசகங்களான “நான் என்று சொன்னால் உதடு ஒட்டாது நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும் போன்ற தத்துவங்கள் தார் கொண்டு அழிக்கப்படும்.

இனி இப்தார் நோண்புகளில் மட்டும் கஞ்சி குடிக்காமல் கொப்புடையம்மன் கோவிலில் ஆடிக்கூழும், குலசாமிக்கு படையல் வைத்து யார் கூப்பிட்டாலும் அங்கு வந்து பொங்கலும் தேங்காய் சில்லும் திங்க கருணாநிதி தயார்.

கட்சியின் சினிமாத் தொடர்பு முற்றிலும் அறுத்தெறியப் படும். உளியின் ஓசை, கண்ணம்மா, இளைஞன் போன்ற காப்பியங்களை இனி கலைஞர் எழுத மாட்டார்.உப்புமா படங்களுக்கு மக்கள் பணத்தில் வரி விலக்கு செய்யும் கூத்துகள் இனி நிறுத்தப்படும்.

கடலில் தூக்கிப் போட்டால் கட்டுமரமாய் வருவேன் செருப்பாய் தேய்வேன், பொறுப்பாய் இருப்பேன் என செண்டிமெண்ட் வசனங்களை இனி கலைஞர் பேசமாட்டார். மேலும் அய்யோ கொல்லுறாங்களே என நடுநிசியில் அழவும் மாட்டார்.

மொத்தத்தில் மக்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே இருக்கும் வண்ணம் இனி வரும் ஆட்சி அமையும் என கருணாநிதி தமிழக மக்களுக்கு உத்தரவாதம் வழங்குவதோடு இந்த அறிக்கையில் சொல்லாத பல நல்ல விசயங்களையும் செய்வதற்கு தமிழக மக்களிடமிருந்து கைமாறாக ஒரே ஒரு ஒற்றை வாக்குறுதி மட்டும் கேட்கிறார்.

அது என்னவென்றால்

தமிழகத்தின் 21ம் 22ம் 23ம் 24ம்25ம் முதலமைச்சராக

.

இவரையும்

26ம், 27ம்,28ம், 29ம் 30ம் முதலமைச்சராக இவரையும்

இவர் காலத்துக்குப் பின் முதலமைச்சராக மேல் உள்ள படத்தில் உள்ளவரின் மகனையோ மகளையோ மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அது.


வியாழன், 25 மார்ச், 2010

கலைஞரின் தலைவலிக்கு மருத்துவர் சேதுராமனின் மருந்து

அரசியல் சாணக்கியர், பல்கலை வித்தகர் டாக்டர் கலைஞருக்கு எத்தனையோ தலைவலி திருகுவலி வந்தாலும் தனது திறமைகளால் அவற்றை தவிடுபொடி ஆக்குவதில் வல்லவர்.ஆனால் அவராலேயே தீர்த்து வைக்க முடியாத பிரச்சினை ஒன்று உண்டு என்றால் அது அவரது வாரிசு பிரச்சினைதான். 86 வயதுக்கு மேல் ஆகி விட்டபடியால் ஓய்வு எடுக்க அவர் மனம் விரும்புகிறது. ராமருக்கு பட்டம் சூட்ட விரும்பாத தசரதராக அவர் நெடுமாறன் போன்றவர்களால் விமர்சிக்கப் பட்டாலும் ஓய்வை அறிவிக்க முடியாமல் தினறி வருவதற்கு காரணம் அவரது அதீத பிள்ளைப் பாசமே.

பட்டம் சூட்டப்படாத மன்னராக வலம் வரும் ஸ்டாலினை முதல் மந்திரியாக்கி அழகு பார்க்க எத்தனை தடைகள் (வைகோ போன்றவர்களால்) கட்சியில் வந்தாலும் அவர்களை தூக்கி எறிய கலைஞர் தயங்கியதில்லை. ஆனானப்பட்ட பேராசிரியரே ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள தயார் என சொல்லித்தான் கட்சியிலும் ஆட்சியிலும் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.


ஸ்டாலின் மன்னராவதற்கு தடையாக இருந்து வந்த அழகிரிக்கு மத்தியில் பதவி வாங்கி கொடுத்து தற்காலிக தீர்வு கண்டார் கலைஞர். சரி இனி மத்தியில் முக அழகிரி மாநிலத்தில் ஸ்டாலின் என மக்களும் நினைத்துக் கொண்டனர். அதை உறுதி செய்யும் விதத்தில் அண்ணனும் தம்பியும் இனைந்து "நாங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்" என ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து முக அழகிரியின் பிறந்த நாளில் மதுரையில் பாசமழை பொழிந்து கொண்டனர்.
ஆனால் சமிபத்திய ஜூனியர் விகடன் பத்திரிகை பேட்டியில் "கலைஞருக்கு அடுத்து யாரை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்வீர்கள்" என சிண்டு முடியும் கேள்விக்கு முக அழகிரி "யாரையும் கலைஞருக்கு அடுத்து தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என மண்டை காயும் விதத்தில் பதில் சொல்லியிருக்கிறார். அழகிரி அண்ணனின் ஆங்கில அறிவு அல்லது ஹிந்தி மொழி பரிச்சியமின்மை அவரை த் தொடர்ந்து டெல்லியில் குப்பைக் கொட்ட தடுக்கலாம். எனவே தமிழகத்திலேயே தனது அரசியலைத் தொடர விரும்பியே இப்படி சொல்லியிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
இந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகளால் வரும் தலைவலியை கலைஞர் எப்படி சமாளிக்கப் போகிறார் என நாடே யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் இதோ நானிருக்கிறேன் கலைஞருக்கு மருந்து தர என மதுரையில் ஒருவர் கிளம்பியிருக்கிறார் தமிழகத்தின் சந்திரசேகர் ராவ் மதுரை மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் மூமூக கட்சி தலைவர் மருத்துவர் சேதுராமன்.

இவரது தீர்வு தமிழகத்தினை இரண்டாக பிரிப்பது. இதற்கு இவர் கூறும் காரணம் பல

"சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் நிர்வாகத்தால் கன்னியாகுமரி , தூத்துக்குடி , திருநெல்வேலி , ராமநாதபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே துவங்கப்படுகின்றன.வேலை வாய்ப்புக்காக தென்மாவட்ட மக்கள், வட மாவட்டங்களில் குடிபெயர்ந்து வருகின்றனர்
தென் பகுதி மக்கள் எல்லோருமே சென்னைக்கே வருவதால் மக்கள் நெருக்கடி அதிகமாகிறது. ஆனால் தென் மாநிலங்களில் பல ஏக்கர் நிலம் இருந்தாலும் அவர் கஷ்டப்படுகிறார். வேலை வாய்ப்பு இல்லாமல் அலைகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு நீக்கப்பட வேண்டுமானால் தென் மாநிலத்திலும் தொழில் வளர வேண்டும். தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து தென் மாநிலம்- வட தமிழகம் உருவாக்கினால் தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். காவிரி கரையை எல்லையாக வைத்து திருச்சி முதல் கன்னியாகுமரி வரை 18 மாவட்டங்களை ஒன்றினைத்து தென்மாநிலம் என்னும் பெயரில் மதுரையை தலைநகராக கொண்டு ஒரு மாநிலம் அமைய வேண்டும்."
இந்த மருந்தினை கலைஞர் அவர்கள் உடனே ஏற்றுக் கொண்டு மத்தியில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழகத்தினை இரண்டாக பிரித்தார் என்றால், வடமாநிலத்துக்கு ஸ்டாலினையும் தென் மாநிலத்துக்கு அழகிரியையும் முதல்வராக்கி அவரது தலைவலிக்கு தீர்வை காணலாம். அப்படியே நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம். இது செய்து முடிக்கப் பட்டால் கலைஞருக்கு ஒரு வாழ்நாள் சாதனையாக அமையும். அப்படியே டாக்டர் சேதுராமனின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தாற் போலும் இருக்கும். அப்படியே வாழ்விழந்து தவிக்கும் வடமாநில டாக்டருக்கும் (மருத்துவர் அய்யா தமிழ்குடிதாங்கி) ஒரு வாழ்வு கிடைக்கும்.அதைவிட முக்கியமாக
எங்களைப் போன்ற இராமநாதபுரம் மக்களுக்கு எதற்கெடுத்தாலும் சென்னை வரும் தேவையில்லாமல் (ஒருநாள் பயணம் 2000 ரூபாய் பயணச்செலவு) மதுரையிலேயே எங்களது வேலைகளை முடித்துக் கொள்ள முடியும்.
கலைஞர் அய்யா விரைந்து இதை செய்வாரா?
ஆவலுடன் ஒரு இராமநாதபுரத்துக்காரன்.



திங்கள், 7 செப்டம்பர், 2009

நியுமராலஜி நித்யாணந்தாவின் தமிழக வருகை

நியுமராலஜி நித்யாணந்தா. இவர் பெயரியல் புலி. அமெரிக்கா,அய்ரோபா,சிங்கப்பூர்,மலேயா,இலங்கை மற்றும் பல நாடுகளில் கோபால் பல்பொடிக்கு அடுத்து புகழ் பெற்றவர்.(வாசகர்கள் நலன் கருதி இவரது புகைப்படம் பிரசுரிக்கப்படவில்லை. பொறுத்தருள்க) பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு அரசியல் தலைவர்களின் பெயர்களை மாற்றி அவர்களது வெற்றிக்கு வித்திட்டவர். இவர் சமீபத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி தமிழகம் வருகை தந்தபோது அவரை பல்வேறு அரசியல் தலைவர்களும் சந்தித்து தங்களின் சங்கடங்கள் தீர தங்கள் பெயர்களை மாற்றியமைக்க வேண்டினர். அவர்களது குறைகள் தீர சுவாமி ஸ்ரீலஸ்ரீ நித்யாணந்தாவும் பெயர்களை மாற்றி ஆலோசனை வழங்கினார். இதை ஒரு ரகசிய கருவி மூலம் ஒட்டுக்கேட்ட நாம் அந்த செய்திகளை பரபரப்புடன் நக்கீரனை விட முந்தித் தருகிறோம்.

முதலில் வந்தவர் முதல்வர் கருணாநிதி. நேரம் அதிகாலை 4.00 மணி.



'வாங்க ஏன் உடம்புக்கு முடியலையா? மஞ்சத்துண்டால போத்திக்கிட்டு வர்றீங்களே"

'இலங்கைப் பிரச்சினை முடிஞ்சதாலே உடம்பு நல்லாத்தேன் இருக்கு. எனக்கு ஊருல பகுத்தறிவு பகலவன்னு பேரு இருக்கு அதுனால வேற யாரும் பாத்துட்டா பிரச்சினைன்னுதான் காலையில மஞ்சத்துண்டைப் போத்திகிட்டு வந்துட்டேன்"

"பகுத்தறிவு பகலவன்னு சொல்லுறிங்க உங்களுக்கு இந்த ஆருடம் ஜோசியம் இதில நம்பிக்கை இருக்கா"

'எனக்கு இல்லிங்க ஆனா தயாளு சொன்னா போயி பாக்கச் சொல்லி, எனக்கு பொண்டாட்டி பிள்ளைங்க மேல பாசம் அதிகம். அதுனால அவங்க மனசு கோணக்கூடாதுன்னு வந்தேன்"

"சரி பரவாயில்ல உங்க பேரு அப்புறம் உங்க பிரச்சினை என்னனு சொல்லுங்க"

'பேரு கருணாநிதி, பிரச்சினை எதுவும் இல்ல ஆனா ஒரே ஒரு ஆசை மட்டும் இருக்கு அது என்னன்னா என் மகன் பேரன் கொள்ளுப்பேரன் எள்ளுப்பேரன் இப்படி என் வாரிசுங்களே தமிழ்நாட்ட ஆளனும் அதுக்கு எப்படி என் பேர மாத்துனா நல்லா இருக்கும்'

"இதுக்குப் பேரு ஆசை இல்லிங்க பேராசை. சரி பரவாயில்ல அய்யாவோட பேரு கருணாநிதி பேருலயே நிதி இருக்கிறதுனால நிதிக்கு பஞ்சம் இருக்காதுன்னு நினைக்கிறேன்'

"ஆமாங்க அப்புடி இப்புடி ஆசியாவுலயே பெரிய பணக்காரன்ல நானும் ஒருத்தன்ங்க"

"சரி உங்க பேருல கடைசி ரெண்டு எழுத்து ஒகே ஆனா முதல் மூணு எழுத்து கருணான்னு வருது கருணான்னா காட்டிக் கொடுக்கிறது போட்டுக் கொடுக்கிறதுன்னு மக்களுக்கு நினைக்கத் தோனும் அதுனால உங்க பேர கர்ணான்னு மாத்தி அந்த கர்ணா மாதிரியே மக்களுக்கு இலவசமா நிதிய வாரி கொடுத்திக்கிட்டு இருந்திங்கன்னா உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை அதுனால உங்க பேர கர்ணாநிதின்னு மாத்தி வச்சுங்கங்க"
-------------------------------------------------------------------------------------------------

அடுத்து வந்தவர் செல்வி ஜெயலலிதா நேரம் காலை 9 மணி 9 நிமிடம்.


"வாங்க என்ன விசயம் உங்க பேரு என்ன?

'ரொம்ப கேள்வி கேட்காதிங்க கேள்வின்னால எனக்கு அலர்ஜி அதுனாலதான் நான் சட்டசபைக்கோ கோர்ட்டுக்கோ சரியா போறதில்ல. சரி வந்த விசயத்த சொல்லுறேன் என் பேரு ஜெயலலிதா நான் எப்படியாவது மறுபடி ஆட்சிய புடிக்கனும் அதுக்கு என் பேர எப்படி மாத்துனா நல்லா இருக்கும்'

"ரொம்ப அவசரப்படுறிங்க சரி பரவாயில்ல. உங்க பேருல முதல் ரெண்டெழுத்துல் ஜெயம் இருக்குறதுனால பிரச்சினை இல்லை. ஆனா கடசி எழுத்து தா ன்னு முடியுது அதுனாலதான் நீங்க ஆட்சியத்தா அதிகாரத்த தா டான்சியத்தா டாலர் நோட்டத்தா ன்னு கேட்டுக்கிட்டே இருக்கிங்க. மேலும் இந்த தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப சுயமரியாதை உள்ளவுங்க அதுனால அவுங்களுக்கு தான்னு ஒருமையில சொல்லுறது புடிக்காது'

"இல்லியே ஏற்கனவே ரெண்டு தடவ நான் கேட்டப்ப கொடுத்தாங்களே"

"அப்ப நீங்க செல்லுலாயிட் பொம்ம மாதிரி இருந்திருப்பிங்க அதுனால பரிதாபப்பட்டு கொடுத்திருப்பாங்க இப்ப நீங்க அப்படி இல்லியே"

'சரி எப்படி மாத்தலாம் சொல்லுங்க'

'உங்க பேர ஜெயலலிதாங்க அப்படின்னு மாத்தி வச்சுக்குங்க அப்பத்தான் ஒரு மரியாதையா இருக்கும் நீங்களும் தாங்க போங்க ன்னு மரியாதையா கேட்குற மாதிரி இருக்கும் வந்தாரை வாழ வைக்கும் தமிழங்க உங்கள மறுபடியும் வாழ வைப்பாங்க"
---------------------------------------------------------------------------------------------

அடுத்து வந்தது புரட்சி புயல் வைகோ


"16ம் நூற்றாண்டில் ஏதென்ஸிலே......"

"பொறுங்க என்ன எடுத்த எடுப்புல ஏதென்சுக்கு போயிட்டிங்க அங்கெல்லாம் சுத்திட்டுத்தான் நான் இங்க வந்துருக்கேன் பேரு என்ன பிரச்சினை என்னன்னு மட்டும் சொல்லுங்க'

'பேரு வைகோ ங்க வாழ்க்கையில மறுமலர்ச்சியே இல்லிங்க"

"வைகோ ரொம்ப சின்ன பேரா இருக்கே இதுதான் உங்க சொந்த பேரா"

"கோபால்சாமி ங்கிறது முதல் பேருங்க அத சுருக்கி வைகோ ன்னு வச்சுகிட்டேன்"

"ம் ம் கோபால்சாமி இது பழய பேரு தமிழ் இலக்கணத்துல நெடிலுக்கு ரெண்டு மாத்திரை குறிலுக்கு ஒரு மாத்திரை ஒற்றுக்கு 1/2 மாத்திரை இதன் படி பாத்தா உங்க பழய பேருக்கு 7 1/2 மாத்திரை வருது அந்த ஏழரைய மாத்தி வைகோ ன்னு மூணு மாத்திரயா வச்சுருகிங்க உங்களுக்கே தெரியும் பரிட்சையில பாஸ் பன்னனும்னா குறஞ்சது நூத்துக்கு 35 மார்க்காவது வேணும் அப்ப பத்துக்கு நாலு மார்க்காவது வேணும் அதுனால உங்க பேர வைகோசான்னு மாத்தி வச்சுங்கங்க மாத்திரயும் அஞ்சு வரும் உங்களுக்கும் அஞ்சு சீட்டு கிடைக்கும்.பிகாசா மாதிரி நீங்களும் வைகோசான்னு பிரபலாமாயிடலாம்.

-------------------------------------------------------------------------------------------------
அடுத்து தமிழ் குடி தாங்கி ராமதாஸ்

"வாங்க உங்க பேரு என்ன பிரச்சினை என்ன'

'பேரு ராமதாஸ் அய்யா மரம் வெட்டி கட்சி வளர்த்தேன் காடு வெட்டி ன்னு ஒரு பய பேச்சக் கேட்டு எனக்கு நானே ஆப்பு அடிச்சுகிட்டேன் இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க"

"ராமதாஸ் உங்க பேருல முதல் ரெண்டு எழுத்து ராமான்னு வருது அதுனால நீங்களும் ஆடுறா ராமா ஆடுறா ராமான்னு குரங்கு குச்சிக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் தாண்டுற மாதிரி தாண்டிகிட்டு இருந்திருப்பீங்க மக்களும் உங்க தாவலை முன்னாடி ரசிச்சிருப்பாங்க ஆனா உங்க பேருல மூணாவது எழுத்து தா அதுனால தா தா சொல்லிகிட்டு இருக்கிறவுங்க யாரோடயாவது நீங்க சேந்து உங்க பேருல கடைசி எழுத்து ஸ் மாதிரி உங்க ஆட்டமும் புஸ்ஸுன்னு முடிஞ்சு போயிருக்கும் சரியா நான் சொல்லுறது"

"அய்யா சரியா சொன்னிங்க இதுக்கு நான் என்ன செய்யனும் என்ன செஞ்சா அன்புவை மறுபடி மத்திய அமைச்சராக்கலாம் "

"உங்க முதல் ரெண்டெழுத்து ராமா வை மாத்திப் போடுங்க மாறான்னு வரும் அடிக்கடி கூட்டனி மாறிக்கிட்டு இருக்காம யாருக்காவது மாரா(றா)தாசன் ஆகுங்க எல்லாம் சரியாயிடும்"

-------------------------------------------------------------------------------------------------
அடுத்து திருமாவளவன்

"அடங்க மறு ஆர்த்தெழு'

'என்ன தம்பி வந்ததும் வளவளன்னு பேசுறிங்களே உங்க பேரு என்ன"

'திருமாவளவன் அய்யா'

"அதான் வளவளன்னு பேசுறிங்க உங்க பேர எப்படி மாத்துறது திருன்னா செல்வம் மரியாதை நல்ல பேருதான் மா ன்னாலும் பெரியன்னு அர்த்தம் வருது ஆனா இந்த வள ன்னு இருக்குறதுனால வள வளன்னு பேசிகிட்டு இருக்கிங்க வாள்ன்னு மாத்தினாலும் வாள்வாள்னு கத்திகிட்டு இருப்பிங்க அதுனால பேச்சைக்குறைச்சுகிட்டு திருமாவாழ்வன் அப்படின்னு மாத்தி வச்சுங்கங்க வாழ்வு நலமா இருக்கும்"

---------------------------------------------------------------------------------------------------------------------------------------