அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஏப்ரல், 2011

விரலில் மை வைக்கும் முன்

இதோ இரண்டு நாளில் தேர்தல் வரப் போகிறது. மறுபடியும் ஏமாறவும் ஏமாற்றப் படவும் மக்கள் தயாராகி விட்டனர். இந்த நேரத்தில் எனக்குத் தெரிந்து சில கருத்துக்களை இந்த பதிவின் மூலம் முன் வைக்கலாம் என நினைக்கிறேன். இதனால் பெரிய மாற்றம் ஏதும் வந்து விடாது என எனக்குத் தெரியும்.இது தனிப்பட்ட எனது கருத்து மட்டும்.

மூன்றாவது அணி என பெரிதாக எதுவும் இல்லாமல் நடக்க இருக்கின்ற தேர்தல் உண்மையிலேயே திமுகவா அல்லது அதிமுகவா இந்த இரண்டு சனியன்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கிற கட்டாயத்தில் மக்கள் உள்ளனர்.

ஒரு பக்கம் அதிமுக கூட்டணி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கட்சியின் பெயர். தலைவியோ ஆரிய பெண்மணி. எப்படி ஒரு பிள்ளை சமுதாயத்தை சேர்ந்தவர் தலித் சமுதாயத்தை முன்னேற்ற முடியாதோ அதுபோல் இந்த திராவிட மந்தைகள் ஆரிய பெண்மணி பின்னால் அணி வகுத்து நிற்கின்றன. அம்மையாரின் தாய் மொழியும் தமிழ் கிடையாது. இவர் கூட கூட்டணி வைத்திருக்கும் குடிகாரருக்கும் தாய் மொழி தமிழ் கிடையாது.
இவர்கள் இருவரும் இணைந்து தமிழ் மக்களைக் காப்பாற்றப் போகின்றனராம்.

ஐந்து வருடம் கூடவே இருந்து பீரங்கி போல முழங்கிக் கொண்டிருந்த நாயுடுவை விரட்டிவிட்டு நாயக்கரை சேர்த்த காரணம் என்ன? நாயுடுவை வளர்த்த தெலுங்கு கூட்டம்தான் நாயக்கரை வளர்க்கின்றது. ஏற்கனவே தமிழ்நாட்டில் விடுதலை அடைவதற்கு முன்னால் முதல்வராக இருந்த அனுபவம் இந்த தெலுங்கு கும்பலுக்கு உண்டு. அவர்களில் யாரவது ஒரு ஆளை முன்னிறுத்தி அரசியலில் அதிகாரத்தினை மீண்டும் பெற்றால் அதை வைத்து ஆதாயம் அடையத் துடிக்கின்ற ஜெயவிலாஸ் ராம்கோ போன்ற பண முதலைகள்தான் இந்த நாயுடுவை மறுமலர்சி என்ற பெயரில் வளர்த்தது.
மறுமலர்சி தளர்ந்து போகவும் இப்போது நாயக்கரை தேசியம் என்ற பெயரில் களம் இறக்கி கன்னடத் தலைவியுடன் கூட்டணி சேர்த்து அரசியல் ஆதாயம் பெற நினைக்கிறது. இது இந்த இளிச்சவாய் தமிழ் இனத்திற்கு தெரியாமல் சினிமா கவர்சியில் மூழ்கிப் போய் ஓட்டளிக்கவும் தயாராக இருக்கிறது.

சரி நமது தமிழினத்தினை சேர்ந்தவர் என்று இந்த திமுக கூட்டணியையும் ஆதரிக்க முடியாது. இலங்கையில் தமிழனத்தினை ஒழித்துக் கட்டியவர்கள்தான் இந்த தமிழ் துரோகிகள். விரோதியை மன்னித்தாலும் இந்த துரோகிகளை மன்னிக்கவே கூடாது.

எனவே உண்மையிலேயே தமிழ் மேல் பற்று கொண்டவர்கள் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் அனைவரும் தங்களது தொகுதியில் இந்த இருவரையும் கவனமாக தவிர்த்து எவன் பச்சைத் தமிழனாக சுயேட்சையாக நிற்கின்றானோ அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

அதே போல் வாக்களிக்கும் தினத்தன்று விடுமறை போல் வீட்டிலேயே படுத்துக் கொண்டு வாக்களிக்காமல் இருக்கும் 30 சதவீத கும்பல் ஒன்று எல்லாத் தேர்தலிலும் உண்டு. இந்த கும்பலினால்தான் சிலரது தலையெழுத்து மாறிப் போய் விடுகிறது. அனேகமாக இது மேல்தட்டு வர்க்கமாகத்தான் இருக்க முடியும். இவர்களை வாக்குச் சாவடிக்கு கொண்டு வரவேண்டும்.

வாக்களிக்கும் போது சான்றாக ஒரு அட்டை ஒன்றை வழங்க வேண்டும். அந்த அட்டை இருந்தால் தான் குடிமைப் பொருள் முதல் வங்கி கணக்கு துவங்குவது, கடவுச்சீட்டு பெறுவது, கல்லூரியில் சேர்வது இன்ன பிற அனைத்து அரசு துறை நடவடிக்கையிலும் இந்த வாக்களித்தற்கான அட்டையில் நகலை இனைக்க வேண்டும் என அரசு ஒரு சட்டத்தினைப் பிறப்பித்தால் இந்த மேல்தட்டு வர்க்கம் அலறி அடித்துக் கொண்டு வாக்களிக்க வரும். 100 சதவீதம் வாக்குப் பதிவானால் பலபேருடைய தலையெழுத்து மாறி விடும்.

ஏன் எனில் கட்சி உறுப்பினர்களின் வாக்கு வங்கியை கொண்டே இந்த இரண்டு கழகச் சனியன்களும் காலம் காலமாக மக்களை ஏமாற்றி வருகின்றன. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க இதனால் மட்டுமே முடியும்.


ஞாயிறு, 15 நவம்பர், 2009

மொழி வெறியன் அபு ஆஸ்மியா ராஜ் தாக்கரேவா?



கடந்த சில தினங்களாக நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் முதலிடம் பிடித்திருப்பவர்கள் ராஜ் தாக்கரேவின் MNS கட்சியும் சமாஜ்வாடி சட்டமன்ற உறுப்பினர் அபு ஆஸ்மியும்.
மராத்திய சட்டமன்றத்தில் தனது தாய்மொழியான ஹிந்தியில் பதவிப் பிரமாணம் ஏற்றதற்காக MNS உறுப்பினர்களால் தாக்கப் பட்டிருக்கிறார் அபு ஆஸ்மி.

இது தொடர்பாக ராஜ் தாக்கரே அபு ஆஸ்மி இருவரும் கைது செய்யப்பட்டு பின் பெயிலில் விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர்.

சொல்லிவைத்தாற் போல் அனைத்து மீடியாக்களும் ராஜ் தாக்கரேவின் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும் மாவோயிஸ்டுகளை விட MNS கட்சி தீவிரவாத கட்சி எனவும் ராஜ் தாக்கரே மற்றும் பால் தாக்கரேவை மொழி வெறியர்கள் எனவும் சித்தரிக்கின்றன.


அபு ஆஸ்மியின் இந்த செயலுக்கு மிகவும் பாராட்டு தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அபு ஆஸ்மியின் தாய் மொழிப் பற்றைப் பாராட்டி அவருக்கு பாராட்டு விழா எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.


MNS கட்சியினரின் செயல் கண்டிக்கப் பட வேண்டியதுதான் என்றாலும் ராஜ் தாக்கரே மற்றும் பால் தாக்கரே இவர்களை விட இரு மடங்கு மொழி வெறியர்கள் இந்த முலாயமும் அபு ஆஸ்மியும்.


தாய் மொழி என்பது தாயைப் போன்றது ஒவ்வொருவருக்கும் அவரது அம்மா மிக சிறந்தவர்தான்.எனது அம்மா எனக்கு சிறந்தவர் என்பதற்காக உலகில் உள்ள அனைவரையும் என் அம்மாவை அவர்களது அம்மாவாக கருத வேண்டும் என நான் கூறினால் அது எவ்வளவு அபத்தமோ அது போன்ற அபத்தமான செயல்தான் அபு ஆஸ்மியின் செயல்.


ரோமுக்கு சென்றால் ரோமனாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட தெரியாதவர்கள் இந்த ஹிந்தி மொழி வெறியர்கள்.இவர்களது மொழியை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் இவர்கள் அடுத்த மொழியினை படிப்பதில் குறைந்த பட்சம் ஆர்வம் கூட இல்லாதவர்கள் என்பது வளைகுடா நாட்டில் பணி புரிந்து வரும் அனைவருக்கும் தெரியும்.


இந்த நேரத்தில் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

இந்தியாவின் மிக சிறந்த தொழிலதிபரான JRD டாடா ஜெயின் குடும்பத்தினைச் சார்ந்தவர் என்பது தெரியும் இந்த சமூகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஈரானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வருகை தந்து குஜராத் கடற்கரையில் குஜராத் மன்னரது அனுமதி வேண்டி காத்திருந்தனர்.

இவர்களது வருகையை விரும்பாத குஜராத் மன்னர் நேரில் மறுப்பை சொல்ல சங்கடப்பட்டு ஒரு பாத்திரத்தில் தளும்ப தளும்ப பாலை ஊற்றி தனது மந்திரிகளில் ஒருவரிடம் கடற்கரையில் காத்திருக்கும் ஜெயின் சமூகத்திற்கு காட்டச் சொன்னார்.இதன் அர்த்தம் என்னவெனில் ஏற்கனவே குஜராத் நிரம்பி வழிகிறது எனவே யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது என்பதே அது.

பாத்திரத்தினைப் பார்த்த புத்திசாலி ஜெயின் சமூகத்தினர் அந்த பாலில் சர்க்கரையினை சேர்த்து மன்னருக்கு திருப்பி அனுப்பினர்.இதன் மறைமுகப் பொருள் என்னவென்றால் நாங்கள் அதிக இடத்தினை ஆக்ரமித்து பாலினை தளும்ப விட மாட்டோம். சர்க்கரையைப்போல் குஜராத் கலாச்சாரத்தோடும் மக்களோடும் கலந்து விடுவோம். மேலும் பாலுக்கு சர்க்கரை சுவை சேர்ப்பது போல நாட்டிற்கு சிறப்பு சேர்ப்போம் என்பதே அது.

இந்த புத்திசாலித்தனமான பதிலால் மகிழ்ந்த மன்னர் ஜெயின் சமூகத்தினரை இந்தியாவில் அனுமதித்தார் என்பது வரலாறு.

அபு ஆஸ்மியின் செயல் பாலில் சர்க்கரை கலப்பது போன்றது அல்ல.உப்பைக் கலந்து பாலினைத் திரிப்பதற்கு ஒப்பாகும்.

வீட்டில் நச்சுப் பாம்பு வந்து படம் எடுத்து அதை விரட்டி அடிப்பவர்களை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தால் அது எப்படி முட்டாள்தனமோ அது போன்றதுதான் ராஜ்தாக்கரேவின் கைதும்.

ஒரு மாநில அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியில் நாண்காண்டுகளுக்குள் பரிச்சியம் பெற வேண்டும் என அரசு விதிகள் சொல்வது இந்த ஹிந்தி மொழி வெறியர்களின் காதில் விழுந்திருக்காதா என்ன?


வியாழன், 3 செப்டம்பர், 2009

மில்லியன் டாலர் கேள்வி இரண்டு

ரொம்ப நாளா என் மண்டைய குடைஞ்சுகிட்டு இருக்கிற இரண்டு மில்லியன் டாலர் கேள்வி இது. இதுக்கு வலையுலகில் இருந்து பதில் எதிர்பார்த்து இந்த பதிவ போடுறேன்.

முதல் கேள்வியைப் படிக்கிறதுக்கு முன்னாடி கீழே உள்ள படத்தப் பாருங்க.



ஒரு செம்மறி ஆட்டு மந்தை போயிகிட்டு இருக்கு.அதுல முன்னாடி ஒரு கருப்பு ஆடு மத்த செம்மறி ஆடுங்களை வழிநடத்திப் போகுது பாருங்க.






இதுதான் அந்த கருப்பு ஆடு. ஆனா வழக்குல இந்த ஆடை வெள்ளாடுன்னு சொல்லுவாங்க.இது ஒரு இனம். ஆனா இது வேற இனமான செம்மறி ஆடுங்கள வழி நடத்திப் போகுது.இப்ப இதுதான் மண்டைய குடையுற முதல் கேள்வி.

1.செம்மறி ஆடுக்கு சொந்த புத்தி இல்லையா?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த கேள்விக்கு போகிறதுக்கு முன்னாடி கீழே உள்ள படத்தப் பாருங்க.





இவுங்க ஜெயலலிதா. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தானைத் தலைவி. திருமதி முகம் படைத்த திருவளர்செல்வி.சட்டசபையிலேயே 'நான் பாப்பாத்திதான்"ன்னு தான் சார்ந்த இனத்த உலகமறிய சொன்ன தங்கத் தலைவி.

பார்ப்பனர்னா மேற்கு ஜெர்மனியிலருந்து கைபர் போலன் கணவாய் வழியா இந்தியாவுக்கு வந்த ஆரிய இனம்னு சின்ன வயசுல புஸ்தகத்துல படிச்சுருக்கேன்.அதே புத்தகத்துல

தமிழ்நாடுங்கிறது திராவிட நாடுன்னும் இங்க உள்ள மக்கள் திராவிட மக்கள்னும் படிச்சுருக்கேன்.அப்ப அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துல இருக்கிறவுங்களும் திராவிடர்களாத்தான் இருப்பாங்க.

இப்ப இதுதான் மண்டையக் குடையுற ரெண்டாவது கேள்வி.

2.அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் இது கட்சியோட பேரு.இந்த கட்சியில இருக்கிற திராவிட இன மக்களை ஆரிய பெண்மணியால் முன்னேற்ற முடியுமா?

-------------------------------------------------------------------------------------------------------------------------------

யாராச்சும் பதில் சொல்லுங்களேன், பிளீஸ் ரொம்ப நாளா மண்டைய குடையுது.